Monday, December 10, 2007

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் - 5

தில்லை கோவில் தீட்சிதர்களின் பொறுப்பிற்கு வந்ததற்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.சிதம்பரம் கோவிலும் சைவ ஆகம முறைப்படிதான் எல்லாம் நடந்தன;தீட்சிதர்கள் கோவிலில் நுழைந்தது சுந்தர சோழனுக்குப் பின் வந்த உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் தான் என்றும்;உத்தம சோழனுக்கு(ராஜராஜனையும்,ஆதித்தனையும் மீறி) ஆட்சிப்பொறுப்பு கிடைக்க அவனே வீரபாண்டியனின் ஆட்களுடன் கூட்டுச் சதி செய்ததாகவும்;ஆகையினாலேயே ஆதித்தன் சதியால் கொல்லப்பட்டதாகவும்;எதிரிகளில் சதியும் அரசியல் பலமும் அறிந்த ராஜராஜன் வீரநாராயணபுரத்தில் சுமார் 12 ஆண்டுகள் விலகி வாழ்ந்ததாகவும்;உத்தம சோழ்னுக்கு உதவ வந்த பாண்டியனின் சதிகாரர்களில் சேரத்தைச்(இப்போதைய கேரளம்) சேர்ந்த கொடும்போர் செய்யும் சேர ஆரியர்கள் வந்து சோழ நாட்டின் முக்கியப் பதவிகள் கேந்திரங்களில் அமர்ந்ததாகவும்;அக்கால கட்டத்திலேயே சிதம்பரம் கோவில் முழுமையாக சேர ஆரியர்கள்-தீட்சிதர்கள் பொறுப்புக்குப் போனதாகவும்,அவ்ர்களே தீட்சிதரின் முன்னோடிகள் என்றும்;அவர்கள் முழுமையாக சைவ ஆகமங்களையும் திருமுறைகளையும் அழிக்கமுயன்ற பொழுதில் ராஜராஜன் நம்பியாண்டார் நம்பி துணையோடு குறுக்கிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்த திருமுறைகளை வெளிப்படுதியதாகவும்;இன்றளவும் நடராஜர் கோவிலில் திருமுறைப் பாராயணம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கொலை,வழக்குமன்றம் வரைக்கும் சென்றுள்ளதும்;இன்னொரு கோணத்திலான வரலாற்றுச் செய்திகள்.
தங்களது பல குறிப்புகள் தவறான தகவல்களைத் தரக் கூடிய ஆபத்து இருக்கிறது;எனவே தகவல்களை உறுதி செய்து எழுதுங்கள்.

No comments:

தேட...