Sunday, January 20, 2008

ALOPECIA- புழுவெட்டு

ALOPECIA- புழுவெட்டு

பலரும் பல விதயங்கள் சொல்வார்கள்...
மதுரைப் பக்கம் யாராவது இருந்தால்,செல்வார்களாயின் விளக்குத்தூண் பகுதியில் கடைகளில் 'காஷ்மீர் குசம்' என்ற ஒரு கலவை பாக்கெட் விற்பார்கள்;இது சுமார் 15-20 நாட்டு மருந்துகளின் கலவை,ஒரு பாக்கேட் விலை ரூ 20.க்குள் தான் இருக்கும்;ஒரு பாக்கெட் கலவையை சுமார் 300 மிலி கண்ணாடி அல்லது செராமிக் கலனில் (பிளாஸ்டிக்,மெட்டல் கலன்கள் வேண்டாம்)தேங்காயெண்ணெயில் ஊறவைத்து ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி நல்ல சூரிய வெய்யிலில் சுமார் 15 நாட்கள் ஊறவைத்து,காயவைக்கவும்.
ஒவ்வொரு நாளும் இரவில் நன்கு கலந்து மறுநாள் காயவைக்கவும்.
பின்னர் தெளிவாக வடித்துக் கொண்டு(பில்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை,தெளியவைத்து பாட்டில் மாற்றினாலே போதும்),அந்த பாக்கெட்டுடனேயே ஒரு சிறிய பாட்டிலில் வாசனைத் தைலம் கொடுத்திருப்பார்கள்,அதை ஊறவைத்து வடித்தெடுத்த எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொண்டு(சூப்பரான வாசனைத் தைலம் தயார் !) தினமும் மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து கடலை மாவு/பயத்தம் மாவு/சுத்தமான் சீயக்காய்த் தூள் போட்டு குளித்துவிடலாம்.அல்லது நாள் முழுதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் சிறிதளவாக எடுத்து,நன்றாக மசாஜ் செய்து கொண்டு,தலைக்கு நீர் விடாமல் தலை சீவிக் கொள்ளலாம்.

எப்படி இருப்பினும் வாரத்தில் ஒருநாளாவது நன்றாக மிகுதியான எண்ணை மசாஜ் செய்து தலைக்கு நீர் விட்டு அலச வேண்டியது முக்கியம்.

முக்கியமாக தவிர்க்க வேண்டியது: அனைவரும் சொல்லும் எல்லா வைத்தியத்தையும் ஒவ்வொரு மாதம் பரிசீலித்து முயற்சிப்பது ! தலைமுடியை முழுதும் போக்கடிக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை !!!!!!

பொறுமையுடன் முயற்சி செய்யவும்,குணம் உண்டு.

கோட்டக்கல் ஆர்யவைத்ய சாலையில் மகாதிக்தகஷாயம் என்ற ஒரு கஷாயம்ம் உண்டு.

அதை ஒரு பாட்டில்(250 மிலி) வாங்கி காலையில் வெறும் வயிற்றில் உணவுக்கு 3 மணி நேரம் முன் சுமார் 15 மிலி அளவில் warm watter உடன் கலந்து பருகச் சொல்லவும்.

மருந்து ரொம்ப இனிப்பாக(!) இருக்கும்,பரவாயில்லை விழுங்கி விடவும்,நாள்பட்ட உடலின் கசடுகளால் ரத்தம் கெடுவதாலேயே தோல்நோய்கள் வருகின்றன,இதை சரி செய்யும் மிகச் சிறந்த மருந்து இது.

அதிக நேரம் இரவில் விழிப்பது தவிர்க்க வேண்டும்;குறைந்தது 6 மணி நேரத் தூக்கம்,15 நாட்களுக்க்கு ஒருமுறையாவது உடல்முழுதும் நல்லெண்ணை தேய்த்து வெண்ணீரில் குளியல் ஆகியவை உடலை மேம்படுத்தும்.

இல்லத்தரசிகளின் இன்னல்கள்

இல்லத்தரசிகளின் இன்னல்கள்


அருமையான பதிவுங்க..
நம்ம ரங்கமணி பாத்தா,'பாரு,உனக்குத்தான் மதுமதி எழுதி இருக்காங்கன்னு கமெண்டு வரும்....
அதிலும் கணினித் துறையில் கொஞ்சம் பதவி உயர்ந்து மேலாளர் நிலையிலிருப்பவர்களுக்கு அலுவலகத்தின் அழுத்தங்கள் நிறைய உண்டு.
உங்க தங்கமணி இப்பதிவுக்கு சொல்லும் பதிலையும் ஒரு பதிவா அவரை எழுதச் சொன்னா சூப்பரா இருக்கும் !!!!

Wednesday, January 16, 2008

தந்தை மூலம் சிறுமி கற்பம்.

தந்தை மூலம் சிறுமி கற்பம்.

////////மற்றபடி தந்தையும் மகளும் உடலுறவுகொள்வதை பாவமாகக்கருதும் அறவழிக்கோட்பாடுகளை நீங்கள் வலியுறுத்த முயலவில்லை என்றே நம்புகிறேன்/////////

அப்படி வலியுறுத்துவது தவறு என்கிறீர்களா.....
இதற்கு கீர்த்தனாவும் வெண்டைக்காய் போல வழவழ கொழகொழ வென பதில் சொல்கிறார்...அதை நான் வலியுறுத்தவில்லை,ஆனால் அது தவறென சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் !
My Goodness, சமூக சிந்தனை எங்கு சென்று கொண்டிருக்கிறது???!!!!!!!!

Monday, January 14, 2008

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

நிறைய தவறான தகவல்களை வவ்வால் சொல்லியிருக்கிறார்..

/////////

//ஓவ்வொரு பொஷிசன் மாற்றி செய்யும் பொழுதும் மூச்சை எவ்வளவு நேரம் உள் வைக்க வேண்டும், எப்பொழுது வெளியேற்ற, உள்ளிழுக்க வேண்டும் என்பதனைப் போன்றல்லாம் இருக்கிறது.//

ஆமாம் ஆனால் ஒவ்வொரு பொசிஷனிலும் எத்தனை முறை அப்படி மூச்சை இழுத்து வெளியிடுவீர்கள், அந்த நிலைக்கு போகும் முன்னர் இழுத்தால் அந்நிலை மாறும் வரை அடக்கி வைத்திருப்பீர்கள்,அதே போசிஷனில் இழுது விட்டு என்று எதுவும் செய்ய மாட்டீர்கள்.//////////

இவ்வாறான மூச்சை ஒரு யோகா நிலையில் முழுக்க அடக்கி இருக்க வேண்டுமென்றோ அல்லது முழுக்க வெளிவிட வேண்டும் என்றோ நியதி இல்லை.
பெரும்பாலும் ஒரு நிலைக்குப் போகும்போது மூச்சை உள்ளிழுக்கவும்,அந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு வரும்போது வெளிவிடவும் குறிப்புகள் இருக்கும்;பழகப் பழக இது மிக எளிதாகவே இருக்கும்.
மறாத ஒரு நிலை சொல்லப் பட்டிருந்தால்,எ-டு ஆக சிரசாசனம்,சர்வாங்காசனம் போன்றவை பழகியவர்கள் 30 நிமிடம் கூட நிற்கலாம்,அது போன்ற சமயங்களில் லேசான சாதாரண மூச்சு விடுதலே பரிந்துரைக்கப் படுகிறது.


/////////ஆனால் மூச்சுப்பயிற்சி என்பது ஒரு நிமிடத்திற்க்கு எத்தனை முறை மூச்சு இழுத்து வெளியிடுகிறீர்கள் என்பதை செய்வதே.////////
மூச்சுப்பயிற்சி என்பது இது அல்ல.1:4:1 எனபதுதான் மூச்சுப் பயிற்சியின் தாத்பரியம்.
அதாவது ஒரு பங்கு நேரம் மூச்சை இழுத்து 4 பங்கு நேரம் உள்நிறுத்தி பின் 1 பங்கு நேரம் வெளிவிட வேண்டும்.
அதாவது 3 வினாடிகள் இழுத்துக் கொண்டே இருந்து 12 வினாடிகள் உள்நிறுத்தி பின் 3 விநாடிகள் வெளிவிட வேண்டும்.
யோக மொழியில் இது ரேசகம்,கும்பகம் எனப்படுகிறது.


///////////மூச்சுப்பயிற்ச்சி என்பது யோகாவின் "precursor" யோகா செய்வதற்கு முன்னர் சிறிது மூச்சு பயிற்சி அவசியம். ஏன் எனில் ஆசனங்களில் அமரும் போது மூச்சடக்க நேரிடும் அது கடினமாக தெரியாமல் இருக்க , யோக ஆரம்பிக்கும் முன்னர் பிராணயமம் பற்றி சொல்லி அதை செய்ய வைப்பார்கள்./////////
இவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



////////ஏன் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.உடல் யோகா செய்ய தயார் ஆகும்(warm up) மேலும் மூச்சு அடக்குதல், உடல் நெகிழ்தல் எல்லாம் அப்போது தான் ஆசனங்கள் செய்ய எளிதாக வரும்./////////
இதுவும் தவறான கருத்து.உண்மையில் மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் என்பது சவாசனத்திற்கு முன் செய்ய வேண்டியது.




////////ஒருவனுக்கு பித்த நாடி ஒடுங்கி விட்டால் மரணம் அருகில் என்பது வைத்தியம் கூறும் உண்மை///////
அவசியமில்லை.வாத நோய் உள்ளவர்களுக்கு பித்தநாடி குறைவாகவே பேசும்.மரணம் வந்தால்தான் குறைய வேண்டும் என்ற அவசியமில்லை.

/////////பெரும்பாலும் கை ரேகை ஜோதிடம்ப்பார்ப்பவர்கள் நம் நாடியை வைத்து தான் நமக்கு ஜோதிடம் சொல்வார்கள்!ஆயுசுக்கெட்டி என்றெல்லாம் அதை வைத்தே சொல்வார்கள்(விரல் நுனி,மணிக்கட்டில் நாடிப்பார்க்கலாம்/////////
இது ஒரு ஜோக்.உங்கள் சொல்படி சோதிடர்கள் அனைவரும் நாடி பார்க்க கற்றுவைத்திருக்க வேண்டும்;உண்மையில் பல ஆய்ர்வேத சித்த மருத்துவர்கள் கூட சரியாக நாடி பார்க்கதெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.இந்நிலையில் சோதிடர்கள் ஒழுங்காக லக்னக் கணக்கைக் கணித்தாலே அது பெரிய விஷயம் !
மேலும் விரல் நுனியிலெல்லாம் நாடி பார்க்க முடியாது,மணிக்கட்டில் மட்டும்தான்.
நகத்தின் அடிப்பகுதியை ஆராய்ந்து ரத்தத்தின் நிலையைப் பற்றி அறியலாம்.விரல் நுனியும் இரத்த நிலையை ஆராயவே..



//////////உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது///////
முழுக்கத் தவறு.
உடற்பயிற்சி மேல்த்சைகளில் தசைநார்களில் வேலை செய்கிறது;யோகா 80 சதம் உள் உறுப்புகளை,நிணநீர் சுரப்பிகளைத் தூண்டி செயற்படுத்துகிறது.தசைகளில் செயல்பாடு மிகச் சிறிய பங்கே.



////////பொதுவாக யோகா செய்த பிறகு உடல் பயிற்சிகள், வெயிட் தூக்கி செய்யும் பயிற்சிகள் செய்ய கூடாது, ஏன் எனில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்றுக்கு எதிரான வகை சார்ந்தது.

காலையில் யோகா செய்தால் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்!////////

சரி.



////////பிராணயமம், யோகா , தியானம் இந்த வகையில் வருது தான் சிறந்த முறை!///////

தவறு.யோகா,பிராணாயாமம்,சவாசனம் அல்லது தியானம்,இதுவே சரி.
பொதுவாக தியானத்தை யோகா,பிராணாயாமத்துடன் குழப்ப தேவையில்லை.

******************************

//////!(இன்னும் சொல்லப்போனால் யோகாவல் அதிகப்பலன்)/////////

இது ஒன்றுதான் சரி(மீண்டும் !!) உங்கள் கருத்துக்கள் கன்னியாகுமரி இருக்கும் திசை என்று சொல்லிக்கொண்டு,பலர் சொல்லியும் கேளாமல்,தில்லி இருக்கும் திசை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பவன்,கடைசியில்,இல்லை நான் தில்லிக்குப் போகத்தான் ஆரம்பத்திலிருந்தே முயற்சித்தேன் எனச் சொல்வது போல இருக்கிறது.

ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன்,நான் ஒன்றும் யோக நிபுணன் என claim செய்யவில்லை;ஆனால் என் கருத்துக்களில் யோகம் பற்றிய சுமார் 20 வருடகால ,படிப்பு மற்றும் அனுபவத்தின்,வாயிலாக நான் சந்தேகமற கொண்ட முடிவுகளையே சொன்னேன்;மற்றபடி இதில் வாதம் வளர்த்து என நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.
உண்மையில் யோகம் பற்றிய மேலும் அறிய ஆசைப்பட்டால் சுந்தர யோகசிகிச்சை-யோகாச்சார்யா சுந்தரம் எழுதியது-இப்போது அச்சில் இருக்கிறதா என்றே தெரியவில்லை-படிக்கவும்...
நிறைய தெளிவடைவீர்கள் !

*****************************

நண்பர்களே,
என்னைப் பொறுத்தவரையில் எழுத்து என்பது ஆழ்ந்த,அகன்ற படிப்பும்,அவற்றின் பாலான சிந்தனையும்,இவை இரண்டும் தரும் அனுபவமும் சேர்ந்த கலவை !

இணையம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரம் புதுவெள்ளம் கொண்டுவரும் ஆற்றுநீராய் பதிவுலகில் பொங்கிவரும் எழுத்துக்களை தருகிறது.
இதில் வேண்டியது எடுக்க வேண்டியது படிப்பவர் பாடு !

யோகம் பற்றிய பல குழப்பக் கருத்துக்கள் ஏற்கனவே பலரிடம் உண்டு.அறிவியல் சார்ந்து எழுதுவதாகக் கருதும் சுஜாதா போன்ற பல மூத்த எழுத்தாளர்கள் கூட யோகம் பற்றிய மூடக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் பார்ப்பதுதான்.காரணம் அவரின் கருத்துக்களுக்கும் சரியான எதிர்வினை கிடைக்காமல் இருந்திருக்கலாம்....


படிப்பவர் சகலருக்கும் கட்டாயம் உபயோகப்பட வேண்டிய ஒரு விதயத்தில் சில சரியல்லாத கருத்துக்கள் காணக்கிடைக்கும் போது,அவற்றுக்கான மறுப்பைப் பதிவு செய்தால் கொள்பவர் சிந்தித்து வேண்டுவன கொள்ளலாம்;அல்லது தள்ளலாம்;

கருத்துக்களுக்கு சான்றாவணமாக ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன்.இந்தியாவில்,தமிழில் யோகக்கலையைப் பற்றிய எளிய,சிறந்த புத்தகம் அதுவே என்று நினைக்கிறேன்.

அதற்காகவே வவ்வால் எழுதியவற்றிற்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.
எவரெவர் சரியாக எழுதுகிறார்,எவரெவர் தவறாக எழுதுகிறார் எனக் கண்காணிக்கும் முடிசூடலை அவரெனக்கு அளிக்க முன்வரும் போதும்,அதைசெய்வதை விட முக்கிய வேலைகள் பல எனக்கிருக்கின்றன.

மற்றபடி வவ்வால் அல்லது எக்ஸ் அல்லது ஒய் என்ற ஒருவரை மறுத்தே எழுத வேண்டிய கட்டாயங்கள் எனக்கில்லை என்பதை அவரும் உணர்வார் என்றே நம்புகிறேன்!

அன்பும்,நன்றியும்,
அறிவன்

********************************************

http://sangappalagai.blogspot.com/2008/01/40.html

ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்; தெளிவைத் தேடும் பொருட்டு விவாதம் செய்யலாம்,ஆனால் வறட்டு விவாதம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கலாமே என்ற எண்ணமே ஒதுங்கியதன் காரணம் !
ஆர்வம்(இருக்கும் பட்சத்தில்!) கொண்டவர்களுக்கு தெளிவான தகவல் கிடைக்க ஏதுவாகவே புத்தக விவரம் குறிப்பிட்டேன்...சிறிது முயன்றால் நூலகங்களில் கட்டாயம் இருக்கும் !
**************************************************

தெகா,

உங்களின் பல நன்றிகள் என்னை பனிக்க வைக்கின்றன;உண்மையில் சில நல்ல தகவல்களை பதிவுலகத்திற்கு அளிக்க ஏதுவாக இருந்த உங்கள் பதிவுக்கே நன்றி.

//////என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் இங்கே தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்////////

குழப்பம் தீர்ந்தால் மகிழ்ச்சிதான்.

யோகம் மட்டுமல்ல,வாழ்வியல் சார்ந்த பல நுண்கலைகளிலும் எனக்கு உள்ள இயல்பான ஆர்வமே,இப்பதிவு சம்மந்தமாக எழுந்த பல தவறான புரிதல்களை நீக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

//////இதுக்கே கண்ணைக் கட்டுதுன்னா, இன்னமும் எவ்வளவோ இருக்கே... :)///////

வாங்க,வாங்க,வாழ்ந்து பாத்துடுவோம் !
*********************

இந்த அனானி முகத்துக்குப் பின்னால யாருன்னு தெரியலை,இருந்தாலும் என் கருத்தையும் சொல்றேன்.

//////ஆசனா(இப்பதிவில் யோகா என குறிப்பிடப்படுவது)//////

நான் விளக்கப் பதிவிலேயே யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும் என்றுதான் கூறியிருக்கிறேன்.இங்கு விவாதித்த அனைவருமே யோகாசனத்தைப் பற்றியே விவாதித்தார்கள் என்றே நினைக்கிறேன்,முழுமையான யோகத்தைப்(அஷ்டாங்க யோகம்,எண்குணத்திறைவன்,திருமந்திரக் கருத்துக்கள்,சமாதி நிலை என அது ஒரு பெரிய டொமைன்) பற்றி அல்ல !

//////ஆனால் ஒவ்வொரு ஆசனத்திலும் மூச்சு பயிற்சி உண்டு///////
யோகாசனத்திலும் ஒவ்வொரு நிலையிலும் முச்சைப் பற்றி சொல்வது,உள்ளிழுப்பதா,அல்லது வெளிவிடுவதா என்பதைப் பற்றியே என நான் நினைக்கிறேன்,அது logical ஆனதும் கூட.அது முழுமையான மூச்சுப் பயிற்சி ஆகாது;மூச்சு விடுதலே முச்சுப் பயிற்சிதான் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்ப விரும்புகிறேன்.

யோகாசன மொழியில் அனைத்து ஆசனங்களுக்குக் கடைசியாகத் தான் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம் பரிந்துரைக்கப் படுகிறது.
இதை அழகு தமிழ்,யோகாசன மொழியில் நாடிசுத்தி என அழைக்கிறது.

Saturday, January 12, 2008

முரட்டு வைத்தியம் - 5

முரட்டு வைத்தியம் - 5
இதில் முரட்டு வைத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை;பொதுவாக நமக்கு மற்ற விதயங்களில் இருக்கும் அளவுக்கு மன உறுதி உடற்பயிற்சியைத் தொடர்வதில் இருப்பதில்லை...நான்கு நாள் செய்து விட்டு பின்னர் விட்டு விடுவோம்.
ஊக்கமும் நாளடைவில் குறையும்.அதுதான் காரணம்...
நான் கூட எனது கல்லூரிக் காலத்திலிருந்து சுமார் 15 வருடங்கள் தொடர்ந்த உடற்பயிற்சியை 1 1/2 ஆண்டுகளாக விட்டுவிட்டேன்;அதாவது வேண்டும் என விடவில்லை,அதற்கான ஊக்கம் குறைய எடை 85 கிகி ஆயிற்று..
இப்போது 2 மாதங்களாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.
ஆனால் உடற்பயிற்சியின் தன்னம்பிக்கை தரும் மகிழ்ச்சி அலாதியானது;அதை அனுபவித்தவர்களே அதனை உணர்வார்கள்..

Wednesday, January 9, 2008

வாரிசு அரசியலும், திமுகவும்

வாரிசு அரசியலும், திமுகவும்

////////திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே//////

இன்றைய எல்லா இந்திய அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் வருவது நீங்கள் சொல்வது போல உண்மைதான்,ஆனால் அண்ணா தனக்குப் பிறகு நெடுஞ்செழியனையே அடையாளம் காட்டியதாகவும், முக அவருக்கேயுரிய கயமைத்திறமை-cunningness-யுடன் தான் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் என்ற கூற்று உண்டு;இயலுமெனில் அக்காலத்தவரை வினவி தெளிவடையலாம்.
அந்த திறமையே அவர் நமக்குப் பிறகு வெளியார் வேறு யாரும் வந்துவிடக் கூடாது என பலமான ஏற்பாடுகள் செய்கிறார்.

எம்ஜிஆர் தெளிவாகாவே நான் யாரையும் வாரிசாக அடையாளம் காட்டவில்லை எனச் சொன்னார்;கட்சியும் காலமும் அதை முடிவு செய்யும் எனச் சொன்னார்.
அவர் நினைத்திருந்தால் அவரின் அண்ணன் மக்களில் யாரையாவது முன்னிலைப்படுத்தியிருக்கலாம்...ஜெ,முன்னேறி கட்சியைப் பிடித்ததும் அதே கயமைத்திறனின் மூலமே,எனவேதான் அவர் முக.வுக்கு சரியான போட்டி லாவணி நடத்துகிறார் !

//////சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் முன்னால் பிரதமரின் மகன். /////

இந்தக் கூற்றின் மூலம் முக செய்வதொன்றும் புதிதில்லை எனச் சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.

சீனியர் லீ'யையும் முக'வையும் ஒப்பீடு செய்கிறீர்கள் என்றால் அதைப்பற்றியும்,உங்கள் புரிதலையும் பற்றி சொல்ல ஒன்றுமில்லை,அது மலையையும் மடுவையும் ஒப்பிடுவதற்கொப்பானது !

ஒரு தகவல்-சீனியர் லீ ஆட்சியை விட்டு விலகி 14 ஆண்டுகள் கழித்தே அவரது மகன் வந்திருக்கிறார் !!!

மற்றபடி ஒரு திமுக அனுதாபியாகவே இப்பதிவு அமைகிறது.

*************************************************************************

///கருணாநிதியின் கயமைத்தனத்தை விளக்கிய பதிவருக்கு,நெடுசெழியனின் கையலாகத்தனம் ஊரறிந்தது.பொதுக்குழுவிலே மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கூட இல்லாதவருக்கு முதல்வர் பதவியா/////
பொதுக்குழு,செயற்குழு போன்ற பம்மாத்துக்களெல்லாம் காற்றடிக்கும்போது சாயும் நாணல் போன்றவை..
அண்ணா உயிரோடு இருந்து தனக்குப் பின்னால் ஒருவரைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சூழல் வந்திருந்தால்,அவர் நெடுஞ்செழியனையே முன்னிருத்தியிருப்பார் என்பதே நான் சொல்ல விழைவது.
மற்றபடி திறமை அடிப்படையில்,நிதி நிர்வாக அடிப்படையில் அவர் முக'வை விட மேலானவரே...
முக சாதாரணதிறனாளரை விட நுண்ணியவராக(கயமைத்திறமை என்ற வார்த்தைப் பிரயோகம் பதிவரை துடிக்கச்செய்கிறது போலும்! ஆனால் cunningness க்கு சரியான வார்த்தை அதுவே என நினைக்கிறேன்)
இருந்ததால் அவர் வென்றார்...
///////தமிழகத்தையும் சிங்கப்பூரையும் ஒப்பிடுவதும் மலையையும் மடுவையையும் ஒப்பிடுவது போன்றதுதான்.//////

நான் தனிப்பட்ட மனிதர்களையே ஒப்பிட்டேன்,நாடுகளை அல்ல !



****************************************************************************
///////கலைஞரின் திறமையை கயமைத்திறமை-cunningness என்று கொச்சைப்படுத்தாதீர்கள். It should be called as "Shrewdness" or "Smartness" or "Sharpness". எந்த ஒரு தலைவனுக்கு இந்த "S" கள் இல்லையோ...அவன் ஒரு தலைவனே இல்லை. கலைஞர் மெத்த படித்தவர் (learned man). After Anna, the only other person who has had better organisation/administration skills in DMK then was Karunanidhi and even now /////////
நீங்கள் சொன்ன சொற்களெல்லாம் ஒருவரின் திறமைகளை நன்னோக்கில் பயன்படுத்துவாருக்கே பொருந்தும்.
நீங்கள் சொன்ன எல்லாத் திறனும் முக.வுக்கு உண்டு,ஆனால்...
ஆனால் 60 களின் இறுதியிலிருந்து தன் அத்தனை திறமைகளையையும் தன் குடும்ப முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தியவர் அவர்.
அதை அவர் உங்களையும் என்னையும் போல தனியனாக உழைத்து குடும்ப முன்னேற்றத்துக்கு பயன்படுத்தினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை;சொல்லப்போனால் பாராட்டுவோம் ! ஏனெனில் நாம் அனைவரும் அதைத்தான் செய்கிறோம்.
ஆனால் அவர் ஒரு நாட்டின் தலைவனாக,நாட்டின் பொதுப் பணத்தைக் கையாளும் ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு அந்த பொறுப்பு தரும் அனுகூலங்கள்,சௌகர்யங்கள் அனைத்தையும் சுயலாபத்திற்கே,தன் குடும்பத்திற்கே பயன்படுத்தியவர்,இன்னும் பலகாலம் அவ்வாறு பயன்படவேண்டும் என்ற நோக்கில் காய்நகர்த்தி வருகிறார்.
அது கயமை அன்றி தொண்டு என்று நீங்கள் சொன்னால்,உங்களைப் போன்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை,ஏனெனில் இவ்வளவு கண்மூடித்தனமாக தன்னை நம்பும் ஒரு பெரும் கூட்டத்தவர் வாழும் நாட்டில் அவர் தன் தலைமைப் பண்புகள் மற்றும் சிறப்புகளாக நீங்கள் கூறும் தன்மைகளால் எந்த ஒரு வியக்கத்தக்க மாற்றமும் கொண்டுவரவில்லை என்பதால் !!!
கனிமொழி கூட ஒரு பேட்டியில் கூறி இருந்தார்,அப்பாவை இவ்வளவு நம்பிக்கையுடன் மக்கள் எதிர்நோக்குவதைப் பார்த்து வியப்பும் பயமுமேற்பட்டதென...ஆனால் அவரும்(கூட) சில நாட்களில் தன் தந்தையின் காலணிகளுக்குக் கச்சிதமாக இருப்பாரெனவே தோன்றுகிறது !
தான் உரையெழுதிய திருக்குறளின் கருத்துக்களில் அவர் 25 சதமாவது தன் ஆட்சிப் பண்புகளில் கடைப்பிடித்திருந்தால் தமிழகம் எங்கோ இருக்கும் !
அவரது நிர்வாகத் திறமைகளை அவர் அளிக்கும் பொருளாதார ஆண்டறிக்கைகளையும்,உலகளாவிய பொருளாதார வல்லுனர்கள் தமிழகத்தின் பொருண்மைத் திறனைப்-financial prudence- பற்றி அளிக்கும் கருத்துக்களையும் தேடி அறிந்தால் புரியும் !!!!!!
திறன்மிக்க சுயநலமிகள்,திருடர்கள் இருப்பதைக் காட்டிலும்,அவ்வளவு திறமற்ற நேர்மையாளர்களே நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம்,அவர்கள் திறனாளர்களைக் கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்லலாம்...
இதைத்தான் படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ,ஐயோவெனப் போவான் என்றான் பாரதி....

Tuesday, January 8, 2008

கலைஞர்

கலைஞர்
I think this is one of the good analysis.
I also believe that JJ had more financial & adminisrative prudence than MK.
Though both leaders are corruptive,MK is doing corruption scientifically so that it is not attracting tha eyes of commom public easily.
Actually extravagansa of Maran after he became minister(Insisting for an mercedes benz as his car whereever he goes,minting money in all telecom/mobile licence distribution deals etc are known to all) only made to think MK twice whether his grand son is beating himself in the process of 'earning money' from politics and that is the root-cuase for his being kicked out...
Even some justified journalists used to say,it is from MK's regime in seventies that corruption became a practice with politics.
JJ-without corruption is thousand times times better than MK.

But there must be a time for other choices,even Vijayakanth can be tested once,based on his aloud commitment that he won't go corruption way...
Read my below posts in these lines...

http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post.html

Sunday, January 6, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

அசத்தலான பதிவு...
Well said..


////////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!

வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு/////////

இதற்கு சமுதாய,திராவிட/ஆரிய வேறுபாடுகள் போன்ற பன்முகப்பட்ட காரணங்கள் இருந்தன,ஆசாரியர்கள் இல்லாத்தது மட்டுமே குறையல்ல..

எடுத்துக்காட்டாக இறைவனை அர்ச்சிக்க,அவனோடு சம்பாஷிக்க தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..
இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..


///////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!//////////

சொல்லப்போனால் திருமுறைகள் தான் முதலில் பாடப்படவேண்டும் !!!!
அவை நிகழ்த்திக் காட்டிய வரலாற்று அற்புதங்கள் அநேகம்...


///////இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு! நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites
2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153; 2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)////////

இதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.
எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் ஆலயத்துக்குரிய நிலம் சுமார் 40 ஏக்கர் பல திராவிட அரசியல் அடிவருடிகளின் பொறுப்பில் 99 வருடக் குத்தகையில் இருக்கிறது..குத்தகைப் பணம் எவ்வளவு தெரியுமா? நம்ப மாட்டீர்கள்,ஆண்டுக்கு ரூ.870 மட்டும்,அதுவும் பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை !!!!
இதற்குள் கோவில் நிலங்களை அனுபவப் பாத்தியத்தில் பட்டா வாங்கி தங்கள் சொந்த நிலமாக மாற்றி விட்டார்கள் !!!!!
எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...
திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை !!!!!!!!!1

*******************************************************************

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அறிவன் /#11802717200764379909/ said...
அசத்தலான பதிவு...
Well said..///

நன்றி அறிவன்.

//தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..
இன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..//

இதே பிரச்சனைகள் வைணவத்துக்கும் இருந்துச்சு அறிவன்.
ஆழ்வார்களும் தமிழில் பாடிவிட்டுப் போய் விட்டார்களே ஓழிய, அதை அவ்வளவு சுலபமா ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை! திருமங்கை, மதுரகவி - இவங்க ரெண்டு பேர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

பின்னால் வந்த ஆசாரியர்கள் தான் இதை ஒரு பிராஜக்ட் போல் எடுத்து, பல எதிர்ப்புகளையும் மீறிச் செயலாக்கிக் காட்டினார்கள். இராமானுசரைக் கொல்ல பிட்சை உணவில் விஷம் கலந்த கதை எல்லாம் நடந்துள்ளது. அதை எல்லாம் மீறித் தான் தமிழ் வைணவ ஆலயங்களில் கோலோச்சுகிறது.

சைவத்துக்கு இப்படி project management செய்யக்கூடிய ஆசாரியர்கள் கிடைக்காதது தான் துரதிருஷ்டம்! இராசராசன் பாவம் ஏதோ செய்து பார்த்தான்! ஆனால் இதை அரசாணை மட்டுமே கொண்டு சாதித்து விட முடியாது என்பதற்குச் சிதம்பரம் தான் உதாரணம்!

அரசாணையும் கடந்து, மாற்றங்கள் உள்ளிருந்து வந்தால் மட்டுமே நிலைக்கும்! உதாரணம்: வைணவ ஆலயங்களில் தமிழ்!

//http://www.hrce.tn.nic.in/)////////
இதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.//

கணக்குல காட்டறதே இவ்ளோன்னா, கணக்குல வராதது எவ்ளோ இருக்கும்? :-)

//எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் //

ஆகா! தங்கள் தாயாரின் துணிவே துணிவு! வணங்குகிறேன்.
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

//எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...//

இதுக்கு எல்லாம் அமைப்பு சார்ந்த போராட்டங்கள் தான் செய்யணும். கடன் அட்டை பாக்கியை வசூலிக்க வங்கிகளே கண்ட பேரை அனுப்புகின்றன. கோயில் நில பாக்கியை எல்லாம் கொஞ்சம் மூளையை உபயோகிச்சா வசூல் செய்திடலாம். தன்னாட்சி நிறுவனம் இதை ஈசியா செய்ய முடியும்!

//திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை !!!!!!!!!//

ஹூம்...அவர்கள் மட்டும் தானா?
பக்திமான்களும் தான் செய்யறாங்க! கோயில் வாடகை கொடுக்க மாட்டாங்க! ஆனா நெத்தி நிறைய பட்டை போட்டுக்கிட்டு தினமும் காலையில் சேவிக்க மட்டும் வருவாங்க! :-)

**************************************************************

Friday, January 4, 2008

டாலர் அரசியல்

டாலர் அரசியல்



அறிவன் said...
அறிவன் அவர்களுடைய இந்த comment நான் publish செய்தும் வரவில்லை. எனவே அவருடைய பெயரில் நான் மீண்டும் இட்டு publish செய்கிறேன்

Hello,
There is an underlying point of difference in the article.
Why the oil consuming countries need to export goods for the sake of getting dollar.
As you said they need dollar to buy oil,which they can straight away buy from treasury markets..
Why they need to choose a distant route of exporting at the terms of USA & get dollar?
Don't you think it is a bit unacceptable view?
It is on the other way actually..Countries like china & Japan has lot of productivity.For their commercial vilability they have to llok for markets..
During Second world war USA sell lot of arms and infrastructure for europian countries and in turn had made lot of wealth.
Aftermath they concentrate mainly on technology,arms & scientific inventions whereas common things like cloths,toys were taken from countries who offer them...
Here comes China & japan's part to sell things to have their commerce good..

Give me your opinion..

*************************
8:48 PM
சதுக்க பூதம் said...
//Why the oil consuming countries need to export goods for the sake of getting dollar.
As you said they need dollar to buy oil,which they can straight away buy from treasury markets..
Why they need to choose a distant route of exporting at the terms of USA & get dollar?//

US won't give treasury bond free to any country. If you want to buy something, you need to pay something. We are paying dollar to buy treasury bond.They will give bond only for $. That is the whole idea behind petro dollar politics.

//Countries like china & Japan has lot of productivity.For their commercial vilability they have to llok for markets..//
That is partially true. Real value of their money is kept low in order to accumilate $. That is because $ is common currency of world. It made to common currency before 1970's because of its inherant strength and convertibility of $ to gold. After that Nixon's ammendment, $ plays as a world currency because petrol sold only for $.That is unacceptable. If that petrol-$ link lost, no country will try to export US in large scale. In fact China/Japan money value will be comparitively high as it has its inherant strength.

//During Second world war USA sell lot of arms and infrastructure for europian countries and in turn had made lot of wealth.//
I accept it.

//Aftermath they concentrate mainly on technology,arms & scientific inventions whereas common things like cloths,toys were taken from countries who offer them...//
That is true. But USA competes against Europe with the power of petro dollar. Europe also does the same thing. Apart from IT, europe is more competitive than USA.They don't have the luxary of over spending (US does with petro dollar). India,china and Japan has to concentrate more on accumilating dollar to run day today business. So they need to concentarte more on servicing US rather than investing on innovation.
*******************************************************
12:38 AM
அறிவன் /#11802717200764379909/ said...
>>>>>>>>>.
//Why the oil consuming countries need to export goods for the sake of getting dollar.
As you said they need dollar to buy oil,which they can straight away buy from treasury markets..
Why they need to choose a distant route of exporting at the terms of USA & get dollar?//

US won't give treasury bond free to any country. If you want to buy something, you need to pay something. We are paying dollar to buy treasury bond.They will give bond only for $. That is the whole idea behind petro dollar politics.
>>>>>>>>

I meant treasury route as buying $ in open treasury/currency market..
They haven't to choose a distant route of manufacturing just to accumulate $..so my CONTENTON is that since inherently they have the manufacturing capacity for the USA markets,they do exports,not JUST FOR getting $.
But majaority of their earnings go to USA back becuase of intelligent deal USA has with saudi arabia.....

********************************************************************
10:16 AM
சதுக்க பூதம் said...
//I meant treasury route as buying $ in open treasury/currency market..
They haven't to choose a distant route of manufacturing just to accumulate $..so my CONTENTON is that since inherently they have the manufacturing capacity for the USA markets,they do exports,not JUST FOR getting $.
But majaority of their earnings go to USA back becuase of intelligent deal USA has with saudi arabia.....
//

Now I understand what do u want to say.
What i mean is,
if US $ is not common currency due to petrol-$ link,
1)economy of Countries with inherant strength in natural resources(third world countries) and countries who has competitiveness in manufacturing and services will soar.Now they are in bad need of $, so they make their resources more cheap to get $. Because now $ is more precious than whatever resource,they have.
POSSIBLE impact would be,american may need to spend more money to buy things than before and thirld world/developing world may grow well.
US can not spend uncontrollable expenditure on wars and military

Now US money value is less.It reduces interest rate. But still inflation is not a problem in US. This will not happen.
US has to tax corporations more and they can not spend more on innovation.

What do u think about this view?

**********************************8
சதுக்க பூதம் said...
Thanks for ur constructive argument

//USA need to pay more $ only when the other currency is stronger,not while they are WEAKER..
For instance say:100 yuvan buys $50 normally,china had made it's currency at HIGHER VALUR ARTIFICIALLY as say: 100 yuvan buys $60.
//

Transaction for the treasury bond happens with $, not with $-Yuan.They need to pay $ to buy bonds. I don't think that Yuan value won't impact on this transaction.

//Now USA pressurised china because of this factor, to peg dollar with Yuvan in open market...I guess this happened during end of 2006..
Now the inherent strenght of currencies are decided by treasury/currency market strength..
//

This is true. If Yuan value strengthened, American products will be more competitive(theoritically).US expects that their trade deficit may reduce because of that.I feel that it will only make shift for US corporation for imported goods from china to other countries.

//There are many factors now for the weakness of $ viz. countries like china have started de-investing their US $ bonds, Euro & Pound are becoming stronger etc..
Since USA started to realise that they cannot rely for too long with saudi arabia deal of 'Oil only in $ price' they started their own massive exploration trails in USA(So far USA never touched OIL reserves under theit own land & sand).
But now because of some country muslim bombers started to make mighty USA bent to ite knees,there is a compelling feel to come out of petro-dollar policy and OPEC politics.........

Guess this itself is a matter of another post......//

You are correct. i am writting about it in my next post. Shift of financial global power, where petrodollar goes

ஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்றிற்கான உண்மை காரணம்

ஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்றிற்கான உண்மை காரணம்


A classic revelation of USA methods on the rest of the world.
But how could Perkins survive if the methods of CIA are so clinical?

Wednesday, January 2, 2008

அரியத்திலுருளும் உணர்வுகள்

அரியத்திலுருளும் உணர்வுகள்

//////
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
///////

இந்த உருவகம்-சிவப்பு ரோஜாக்கள்- எதனைப் பற்றியது,கவிதையை முற்றாக உணரும் ஆர்வத்தில் கேட்கிறேன்..

அரியம் என்பது முக்கோணப் பட்டகம்தானே??????

Tuesday, January 1, 2008

சென்னையிலிருந்து தாரா - 1

சென்னையிலிருந்து தாரா - 1

வவ்வால்,
வெளிநாடு சென்று திரும்புகிற சிலர் நம்நாட்டில் பார்க்கின்ற நிகழ்வுகள் அவலமாகத்தான் தெரியும்.காரணம் வெளிநாடு செல்லும் முன்னர் நமது பார்வைகள்-சமூகம்,அரசியல்,ஆட்சி,சாலை,கழிப்பறை- ஆகிய அனைத்தையும் பற்றி நமது நாட்டு ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கருத்துடனோ (நமது அரசியல்)அல்லது கருத்தே இல்லாமலோதான் (நமது சாலைகள்,கழிப்பிடங்கள்) இருக்கிறோம்.
ஆனால் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பும் போதுதான் நம் நாட்டின் அவலநிலை முகத்தில் அறைகிறது.
அந்த அவலநிலை மனிதர்கள்,அமைப்புகள் மற்றும் அரசின் மெத்தனத்தையும்,taken for granted தனத்தையும் மிகு வெளிப்படையாக அறிவிப்பதால் கிடைக்கும் ஆயாசமே அவர்களில் வெளிப்பாடுகள்.
இதற்காக this is sucking india,i don't like it you know என்ற பீலா விடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் நீங்கள் சொல்லும் சீன் காட்டும் பேர்வழிகள்.
என்னைப் போன்ற பலர்,நம் நாட்டிலும் சேவைகள்,அமைப்புகள் சீராக செயல்பட வாய்ப்பு இருக்கும் போதும் , அவ்வாறு செயல்பட விரும்பாத தன்மையையும்,அதைப் பற்றிய எந்த சுரணையும் இல்லாத ஒரு அரசும்-இங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் எல்லா அரசுளையும் சேர்த்துதான் சொல்கிறேன் - இருப்பதைக் காணும் வேதனைதான் அது.
ஒரு சாதாரண எடுத்துக் காட்டு-சென்னை விமான நிலைய டாக்ஸிகளின் நிலை மற்றும் விமான நிலைய டாக்ஸி குழுமம் செய்யும் அராஜகம்.
விமானநிலையத்திற்குள் தனியார் கால் டாக்ஸிகள் வந்து சேவை செய்யக்கூடாது என அவர்கள் செய்யும் அடாவடித்தனம்,மீறி வரும் தனியார் ஓட்டுனர்களை அவமதிக்கும்,நிந்திக்கும் கீழ்த்தர வசவுகள்,பயணிகள் ஏதேனும் குறுக்கிட்டுச் சொன்னால் அவர்களுக்கும் சேர்த்து நடைபெறும் அர்ச்சனைகள்....சரி விமானநிலைய குழும வண்டிகளையே அமர்த்திக் கொள்ளலாமெனில்,கிட்டத்திட்ட அமரர் ஊர்தி நிலையில்,இருக்கைகள் கிழிந்து,முடை நாற்றமாடித்துக் கொண்டு இருக்கும் அவை இருக்கும் நிலை,இந்த நாடகத்தை ஓரக் கண்ணால் கண்டும் காணாமல் இருக்கும் காவல் துறை..இவையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டின் நாடாண்மையைக்-governance- கண்டு எழும் கோபமே அந்த வெளிப்பாடு.
பொருளாதாரத்தில்,பரப்பளவில்,உலகின் பார்வையில் இந்தியாவை விடக் கீழ்நிலையில் இருக்கும் நாடுகளே,நம்மை விட மேலான சேவை,கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் போது,இந்தியாவில் அது முடியவில்லை என்பது,நிச்சயம் ஒரு குறைபாடுதான்.
எனது இந்த முதல் பதிவே மேற்சொன்ன நோக்கில் அமைந்த பதிவுதான்.
http://sangappalagai.blogspot.com/2007/08/blog-post_12.html

கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)

கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)


//////////
இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.

எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும்
/////////////

எனில் மட்பாண்டம்,நயணம்,யவனன் போன்ற சொற்கள் எப்படி வருகின்றன????

//////////
தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை
////////////

ஜ,ஸ,ஹ போன்ற எழுத்துக்கள் தமிழ் மொழிக்குள் எப்போது புழக்கத்தில் வந்தன?
அவற்றிற்குரிய தேவை உணரப்படும் போது அவை இயல்பாக உபயோகப் படுத்தப் பட்டன..
மற்றபடி 'சகன்னாதன் என்ற உபயோகத்தை விட ஜகன்னாதன் எளிதாக ஒத்துக்கொள்ளப் பட்ட ஒன்று.

PS:PLEASE REMOVE WORD VERIFIER IN COMMENT MODERATION SETTINGS

தேட...