Wednesday, January 9, 2008

வாரிசு அரசியலும், திமுகவும்

வாரிசு அரசியலும், திமுகவும்

////////திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே//////

இன்றைய எல்லா இந்திய அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் வருவது நீங்கள் சொல்வது போல உண்மைதான்,ஆனால் அண்ணா தனக்குப் பிறகு நெடுஞ்செழியனையே அடையாளம் காட்டியதாகவும், முக அவருக்கேயுரிய கயமைத்திறமை-cunningness-யுடன் தான் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் என்ற கூற்று உண்டு;இயலுமெனில் அக்காலத்தவரை வினவி தெளிவடையலாம்.
அந்த திறமையே அவர் நமக்குப் பிறகு வெளியார் வேறு யாரும் வந்துவிடக் கூடாது என பலமான ஏற்பாடுகள் செய்கிறார்.

எம்ஜிஆர் தெளிவாகாவே நான் யாரையும் வாரிசாக அடையாளம் காட்டவில்லை எனச் சொன்னார்;கட்சியும் காலமும் அதை முடிவு செய்யும் எனச் சொன்னார்.
அவர் நினைத்திருந்தால் அவரின் அண்ணன் மக்களில் யாரையாவது முன்னிலைப்படுத்தியிருக்கலாம்...ஜெ,முன்னேறி கட்சியைப் பிடித்ததும் அதே கயமைத்திறனின் மூலமே,எனவேதான் அவர் முக.வுக்கு சரியான போட்டி லாவணி நடத்துகிறார் !

//////சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் முன்னால் பிரதமரின் மகன். /////

இந்தக் கூற்றின் மூலம் முக செய்வதொன்றும் புதிதில்லை எனச் சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.

சீனியர் லீ'யையும் முக'வையும் ஒப்பீடு செய்கிறீர்கள் என்றால் அதைப்பற்றியும்,உங்கள் புரிதலையும் பற்றி சொல்ல ஒன்றுமில்லை,அது மலையையும் மடுவையும் ஒப்பிடுவதற்கொப்பானது !

ஒரு தகவல்-சீனியர் லீ ஆட்சியை விட்டு விலகி 14 ஆண்டுகள் கழித்தே அவரது மகன் வந்திருக்கிறார் !!!

மற்றபடி ஒரு திமுக அனுதாபியாகவே இப்பதிவு அமைகிறது.

*************************************************************************

///கருணாநிதியின் கயமைத்தனத்தை விளக்கிய பதிவருக்கு,நெடுசெழியனின் கையலாகத்தனம் ஊரறிந்தது.பொதுக்குழுவிலே மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கூட இல்லாதவருக்கு முதல்வர் பதவியா/////
பொதுக்குழு,செயற்குழு போன்ற பம்மாத்துக்களெல்லாம் காற்றடிக்கும்போது சாயும் நாணல் போன்றவை..
அண்ணா உயிரோடு இருந்து தனக்குப் பின்னால் ஒருவரைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சூழல் வந்திருந்தால்,அவர் நெடுஞ்செழியனையே முன்னிருத்தியிருப்பார் என்பதே நான் சொல்ல விழைவது.
மற்றபடி திறமை அடிப்படையில்,நிதி நிர்வாக அடிப்படையில் அவர் முக'வை விட மேலானவரே...
முக சாதாரணதிறனாளரை விட நுண்ணியவராக(கயமைத்திறமை என்ற வார்த்தைப் பிரயோகம் பதிவரை துடிக்கச்செய்கிறது போலும்! ஆனால் cunningness க்கு சரியான வார்த்தை அதுவே என நினைக்கிறேன்)
இருந்ததால் அவர் வென்றார்...
///////தமிழகத்தையும் சிங்கப்பூரையும் ஒப்பிடுவதும் மலையையும் மடுவையையும் ஒப்பிடுவது போன்றதுதான்.//////

நான் தனிப்பட்ட மனிதர்களையே ஒப்பிட்டேன்,நாடுகளை அல்ல !



****************************************************************************
///////கலைஞரின் திறமையை கயமைத்திறமை-cunningness என்று கொச்சைப்படுத்தாதீர்கள். It should be called as "Shrewdness" or "Smartness" or "Sharpness". எந்த ஒரு தலைவனுக்கு இந்த "S" கள் இல்லையோ...அவன் ஒரு தலைவனே இல்லை. கலைஞர் மெத்த படித்தவர் (learned man). After Anna, the only other person who has had better organisation/administration skills in DMK then was Karunanidhi and even now /////////
நீங்கள் சொன்ன சொற்களெல்லாம் ஒருவரின் திறமைகளை நன்னோக்கில் பயன்படுத்துவாருக்கே பொருந்தும்.
நீங்கள் சொன்ன எல்லாத் திறனும் முக.வுக்கு உண்டு,ஆனால்...
ஆனால் 60 களின் இறுதியிலிருந்து தன் அத்தனை திறமைகளையையும் தன் குடும்ப முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தியவர் அவர்.
அதை அவர் உங்களையும் என்னையும் போல தனியனாக உழைத்து குடும்ப முன்னேற்றத்துக்கு பயன்படுத்தினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை;சொல்லப்போனால் பாராட்டுவோம் ! ஏனெனில் நாம் அனைவரும் அதைத்தான் செய்கிறோம்.
ஆனால் அவர் ஒரு நாட்டின் தலைவனாக,நாட்டின் பொதுப் பணத்தைக் கையாளும் ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு அந்த பொறுப்பு தரும் அனுகூலங்கள்,சௌகர்யங்கள் அனைத்தையும் சுயலாபத்திற்கே,தன் குடும்பத்திற்கே பயன்படுத்தியவர்,இன்னும் பலகாலம் அவ்வாறு பயன்படவேண்டும் என்ற நோக்கில் காய்நகர்த்தி வருகிறார்.
அது கயமை அன்றி தொண்டு என்று நீங்கள் சொன்னால்,உங்களைப் போன்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை,ஏனெனில் இவ்வளவு கண்மூடித்தனமாக தன்னை நம்பும் ஒரு பெரும் கூட்டத்தவர் வாழும் நாட்டில் அவர் தன் தலைமைப் பண்புகள் மற்றும் சிறப்புகளாக நீங்கள் கூறும் தன்மைகளால் எந்த ஒரு வியக்கத்தக்க மாற்றமும் கொண்டுவரவில்லை என்பதால் !!!
கனிமொழி கூட ஒரு பேட்டியில் கூறி இருந்தார்,அப்பாவை இவ்வளவு நம்பிக்கையுடன் மக்கள் எதிர்நோக்குவதைப் பார்த்து வியப்பும் பயமுமேற்பட்டதென...ஆனால் அவரும்(கூட) சில நாட்களில் தன் தந்தையின் காலணிகளுக்குக் கச்சிதமாக இருப்பாரெனவே தோன்றுகிறது !
தான் உரையெழுதிய திருக்குறளின் கருத்துக்களில் அவர் 25 சதமாவது தன் ஆட்சிப் பண்புகளில் கடைப்பிடித்திருந்தால் தமிழகம் எங்கோ இருக்கும் !
அவரது நிர்வாகத் திறமைகளை அவர் அளிக்கும் பொருளாதார ஆண்டறிக்கைகளையும்,உலகளாவிய பொருளாதார வல்லுனர்கள் தமிழகத்தின் பொருண்மைத் திறனைப்-financial prudence- பற்றி அளிக்கும் கருத்துக்களையும் தேடி அறிந்தால் புரியும் !!!!!!
திறன்மிக்க சுயநலமிகள்,திருடர்கள் இருப்பதைக் காட்டிலும்,அவ்வளவு திறமற்ற நேர்மையாளர்களே நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம்,அவர்கள் திறனாளர்களைக் கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்லலாம்...
இதைத்தான் படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ,ஐயோவெனப் போவான் என்றான் பாரதி....

No comments:

தேட...