Sunday, May 23, 2010

சிங்கப்பூர் டயரி - 4

Anonymous said...

//அறிவன்#11802717200764379909 said...
சிங்கை அநானிகள்,நீங்கள் முதலில் தமிழில் எழுதிப் பழகுங்கள்,தமிழில் பேசிப் பழகுங்கள்..பிறகு அனைத்தையும் அனைவரையும் குறை சொல்லலாம்.//

Here it is! I was expecting such a typical Singapore asinine reaction -- a habit, no doubt, borne out a life-long anxiety of being defensive!

For the Tamil protectors and promoters, coming up with another campaign is same as having the job done.

"தமிழை நேசிப்போம்,தமிழில் பேசுவோம்" is probably one such campaign, where it is customary to over-report results and pat oneself on the back for the job well done!

What did you achieve in the campaign?

*********************************

அறிவன்#11802717200764379909 said...

மிஸ்டர் அனானி,கேள்வி-இயக்கம் என்ன சாதித்தது என்பதல்ல..இயக்கம் நடத்தியும் நீங்கள் ஏன் தமிழ்ப்பயன்பாட்டுக்கு தயாராக இல்லை என்பதுதான்?


நீ என்ன முயற்சி எடுத்தாலும் நான் இம்மி கூட மாற மாட்டேன்;ஆனால் முயற்சிப்பவர்களையும் நொள்ளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பேன் என்பது போன்ற மனநோய் வாதிகளிடம் வாதிடல் வீண்..

உங்களுக்கு இரண்டு செய்திகள் மட்டும் தர விருப்பம்:
1.நானும் கூட தமிழ்பதிவில் எழுதிக் கொண்டிருந்தாலும் எனது தனிப்பட்ட மின்மடல்களை ஆங்கிலத்தில்தான் எழுதிக் கொண்டிருந்தேன்..அந்த இயக்கத்தின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கே ஒரு வெட்கம் ஏற்பட்டது;தமிழிலக்கியப் பரிச்சயமும் தமிழார்வமும் இன்றைய தமிழின் தேய்மை குறித்தான ஆதங்கமும் கொண்ட நானே ஏன் நடைமுறையில் அனைத்து தளத்திலும் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்ற கேள்வி எழுந்ததால் அனைத்து தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களிலும் தமிழைப் பயன்படுத்துவது என்ற சுய உறுதி எடுத்துக் கொண்டேன்..
2.தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் இயக்கத்தில் எனக்கு செயல் தொடர்பெதுவும் இல்லை.ஆகவே என்னிடம் நேர்மறை நொள்ளை பேசிப் பயனில்லை!
ஆகவே சிங்கை அரசின் அந்த மொழிப் பிரிவினருடன் நீங்கள் வாதிடலாம் அல்லது சண்டை போடலாம்! எங்கே,நமக்குத்தான் பெயருடன் வந்து வாதிடுவதற்கே தொடை நடுங்குகிறது,பின்னெங்கே அரசாங்கத் தொடர்புள்ளவர்களிடம் பேசுவது?!

**********************

Anonymous said...

With due apologies to Badri for using his blog comments for what seems to be another pointless discussion, let me say my final words and stop.

Arivan, my original comment, if you read carefully, firstly puts forth my perception of the state of Tamil in Singapore. Secondly, it tries to inform Badri that the sample of people he interacted with in Singapore suffer the self-selection bias and therefore might distort any judgement about standards, interest in Tamil. Thirdly, it explains the difference between Tamil and the other 2 national languages with respect to language and self-identity and speculates on a possible cause. Finally it proposes a solution (social & political).

I did not see a single response to any of the above in your comment. Instead what do you do? – you take the easy way out and go on a personal attack for not using Tamil in writing. Not only is it completely beside the point, it is precisely the kind of defensiveness that we unfortunately display when faced with criticism. What this does is, it reinforces the widely held (history is full of such examples) notion that Singaporeans will not, or incapable of engaging with detractors on issues.

I concede that your "தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் campaign" is sort of a social solution. But having seen the glut of campaigns, you can’t blame me for being sceptical of campaigns in general in Singapore. But, hey, if you are so conditioned by them, good for you and go for it!

In closing, my sincere apologies if I came across as rude and hurt your feelings. I guess I did not pay as close an attention to the TV advertisements that promoted the kindness campaign on how to be nice and behave towards others.

Request to Badri: It would be very useful to hear from you on the quality of participants at your workshop and your impressions on the general state of affairs in Singapore. We heard from you (and from Paa.Raa’s posts) about the earnestness. What do you think of the ability?


அறிவன்#11802717200764379909 said...

||With due apologies to Badri for using his blog comments for what seems to be another pointless discussion, let me say my final words and stop.

Arivan, my original comment, if you read carefully, firstly puts forth my perception of the state of Tamil in Singapore. Secondly, it tries to inform Badri that the sample of people he interacted with in Singapore suffer the self-selection bias and therefore might distort any judgement about standards, interest in Tamil. Thirdly, it explains the difference between Tamil and the other 2 national languages with respect to language and self-identity and speculates on a possible cause. Finally it proposes a solution (social & political).||

நண்பர் அனாநி,பத்ரியிடம் மன்னிப்புடன் நானும் பதிலளித்து விட்டு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களது கருத்தைப் படிக்காது நான் கருத்துச் சொன்னதான பொருளில் எழுதி இருக்கிறீர்கள்;இல்லை!
ஒரே ஒரு வித்தியாசம்.உங்களது கருத்துக்களுக்கான விசாரங்களுக்குள் ஈடுபடாமல் அந்த நான்கு காரணங்களுக்கும் காரணிகளுக்கும் எது தீர்வாக இருக்க முடியும் என்று நான் நினைப்பதை எதிர் வாதமாக முன் வைத்தேன்.அதை நீங்கள் சரியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட தாக்குதலாக,பிழையாக எடுத்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு தமிழுக்கான இலக்கியத்திற்கு சுமார் 3000 வருட தொடர்ச்சி-நமக்குத் தெரிந்து- இருக்கிறது!இன்றும் சிறிது முயற்சித்தால் அகத்தியத்தையோ தொல்காப்பியத்தையோ நம்மால் படித்துத் தெரிந்து புரிந்து கொள்ள முடிகிறது.காரணம் என்ன?
இன்னொரு இந்தியப் பாரம்பரிய மொழியாக அடையாளப்படுத்தப்படுவது சமத்கிருதம்.அதிலும் எண்ணற்ற புராணக் கட்டுகள்,நீதிநூல்கள் சுமார் 2000 வருடத் தொடர்ச்சியில் இருக்கின்றன.ஆனாலும் இன்று எத்தனை பேர் சங்கரரின் பாஷ்யத்தையோ அல்லது வேறு ஒரு சமத்கிருத நூலையோ படிக்க முடிகிற நிலையில் இருக்கிறார்கள்?

இன்று இந்தியாவில் தெற்கே தமிழகத்தைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பெரும்பாலானவர்களால் அறிந்த மொழியாகவும் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் கூட தொடர்பு மொழியாகவும் இந்தி இருக்கிறது.இத்தனைக்கும் இந்தியில் தமிழில் இருக்கும் அளவுக்கு,ஒப்புநோக்கும் அளவுக்கு இலக்கிய சாரம் இருப்பதாக-எனக்குத் தெரிந்தவரை-இல்லை.

இந்த மூன்று மொழிகளின் நிலைகளுக்குமான காரணம் ஒன்றுதான்.
அது,தொடர்ந்த பயன்பாடு!
நீங்கள் கீழே தவறான காரணிக்குச் சுட்டியிருக்கும் வரலாறு,பயன்பாடில்லாத மொழிகள் அழிந்திருப்பதற்கான நெடிய சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறது.சமத்கிருத அழிவு அதில் ஒன்று..

தமிழ்மொழி இதுநாள் வரை(என் வயது முப்பதுகளின் மத்தியில்-எனது தோழர்கள் வரையிலான தலைமுறையில்)சாதாரண தொடர்பு மொழியாகவும் பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது.பயன்பாட்டுக்கு மேல் இலக்கியத்திலான ஈடுபாடு வேண்டுமானால் அடுத்த கட்டமான இலக்கிய வளர்ச்சி,கலாசாரப் பரவல் போன்றவையாக இருக்கலாம்..ஆனால் மொழி வாழ முதலில் சுவாசம் வேண்டும்;சுவாசம் இருக்க சாதாரண வாழ்வில் பயன்பாடு வேண்டும்..அது உங்களிடமே இல்லை..எனவேதான் அதை மிக நேரடியாகச் சுட்டினேன்..பொதுவாக எனது வாதத்தின் கூறு-style-அது..மிக நேரடியாக உணரவைக்க எழுதுவது.

பயன்பாட்டில் இல்லாத எந்த மொழியும் அழியும்.மொழி பயன்பாட்டில் இருக்க அரசும் அமைப்புகளும் ஒரு அளவுக்குத்தான் முயல முடியும்;அந்த மொழியின் மீது ஈடுபாடு இருப்பவர்கள் அதை விருப்புடன் பயன்படுத்தி புழக்கத்தில் வைத்திருந்தால்தான் அது வாழும்.இல்லையெனில் வீழும்.

இந்த வீழ்ச்சி சிங்கையில் உங்கள் தலைமுறையிலேயே அதாவது ஒப்புநோக்கத்தில்-comparative-எனது தலைமுறையிலேயே நடந்து கொண்டிருக்கிறது;
தமிழகத்தில் அது எங்களுக்கு அடுத்த தலைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது.இன்றைய 20 களில் இருக்கும் தமிழக வாலிபர்களுக்கு ஒரு திருக்குறளை பிழையின்றி வாசிக்கக் கூட தெரிந்திருப்பது அதிசயமாகவே இருக்கிறது.சிங்கையில் இளையர்களின் தமிழைக் கேட்கவே வேண்டாம்,எரிச்சல் மண்டும் கேட்டாலே,அந்த அளவுக்கு பிழையான இழுத்த பயன்பாடு..இந்தப் பயன்பாட்டுக்குறை உங்கள் அப்பாவின் காலத்திலேயே துவங்கி,உங்கள் காலத்தில் வளர்ந்து,உங்கள் மகனின்,மகளின் காலத்தில் முதிர்ந்து கொண்டிருக்கிறது..அதுவும் எனது வலிக்கான,மிக நேரடி பதிலுக்கான காரணம்!

எல்லாவற்றிற்கும் மேலாக charity begins at home என்பதான சொலவடை போல சமுதாய ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் மாற்றங்கள தனி மனிதர்களிடமிருந்தே துவங்க வேண்டியிருக்கிறது..நாம் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் கூட!

||I did not see a single response to any of the above in your comment. ...What this does is, it reinforces the widely held (history is full of such examples) notion that Singaporeans will not, or incapable of engaging with detractors on issues.||

எப்படி இப்படி மிகச்சரியாக, ஒரு முழுக்கத்தவறான அனுமாணங்களுக்கு வந்து அந்த அடிப்படையில் வாதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை..
சிங்கை அரசின் திட்டத்தை ஆதரிப்பது போன்ற தோற்றத்தில் பேசியதால் தோற்ற மயக்கம் கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது..
நான் சிங்கப்பூரியன் அல்ல!
மேலும் கருத்துக்குச் சரியான தீர்வின் அடிப்படையிலேயே எனது வாதம் அமைந்தது,அமைந்திருக்கிறது..சிங்கைத் தமிழர்களின் குடும்பத்திற்குள்,தகவல் பரிமாற்றத்தில் தொடர்ந்த மொழியின் பயன்பாடு நீங்கள் குறிப்பிட்ட 4 காரணிகளுக்குமே தீர்வாக அமையும்;ஒரு காரணியான வேற்று மொழி இந்தியர்கள் இங்கு வந்து கலந்து அரசியல் ரீதியாக தமிழை கழற்றி விட்டு இந்தியைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்று சொல்வதை வேண்டுமானால் ஒரு சிறிது ஏற்கலாம்..ஆனால் அதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும்,தமிழ் ஏற்கனவே சிங்கையில் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்கிறது..ஆனால் இந்தி முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது..
அதாவது தமிழ் தொய்வில்தான் இருக்கிறது..முழுக்க வெளியே இல்லை!

||I concede that your "தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம் campaign" is sort of a social solution. But having seen the glut of campaigns, you can’t blame me for being sceptical of campaigns in general in Singapore. But, hey, if you are so conditioned by them, good for you and go for it!||

இயக்கங்கள் மாற்றங்கள் கொண்டு வருமா என்பதல்ல கேள்வி,நாம் அதற்கு செவி சாய்க்கிறோமா என்பதே கேள்வி..துரதிருஷ்டவசமாக இதை திரும்பவும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது..
மேலும் என் அம்மா ஒரு சொற்றொடரை அடிக்கடி சொல்வார்கள்..'உள்ளது போகாது,இல்லது வாராது' என்பது அது..
சைவ சித்தாந்தத்தின் தத்துவங்களுள் ஒன்று அது,இருந்தாலும் சாதாரண எடுத்தாள்வுகளுக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரர்களின் நேசம் பற்றிய நேரடி அனுபவங்கள் எனக்கு நிறைய இருக்கிறது! எனவே மீண்டும் அடிக் குறிக்க வேண்டி இருக்கிறது..இயக்க முயற்சிகள் ஒன்றும் மந்திரக் கோல்கள் அல்ல.ஒரளவுக்காவது அவற்றை நாம் கவனிக்கிறோமா என்பதுதான் எனது பார்வை..

மேலும் உயர்மட்ட அளவில் சிங்கையில் தீட்டப்படும் திட்டங்கள் உங்களுக்கான நெடிய அனுபவத்தில் வெறுத்துப் போக வைத்திருக்கலாம்..ஆனால் ஒரு வெளியாளான எனது பார்வையில் அமைப்புகளும் நிர்வாகமும் ஒரளவுக்கு திறந்த மனத்துடனே இருப்பதாக நான் உணர்கிறேன்..சிங்கையின் நூலநிலைய அமைப்பு நான் பரிந்துரைத்த சுமார் 300 நல்ல புத்தகங்களை வாங்கி இருக்கிறார்கள்,எனக்கு நன்றி அறிவித்து மடல் அனுப்பி ஊக்கியிருக்கிறார்கள்..
டவுன் கவுன்சிலில் நான் சுட்டிக்காட்டிய சில ஆலோசனைகளுக்கு நன்றி கூறி மாற்றங்களை மறு சீரமைப்பில் கொண்டு வருவதாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள்..உணவுச் சாலைகளில் சுட்டிக்காட்டிய குறைகளை சரிப்படுத்தி இருக்கிறார்கள்.இத்தனைக்கும் நான் உணவுச்சாலைகளில்-ஃபுட் கோர்ட்-சாப்பிடுவது மிக மிக அரிது..
எனவே நான் விதயங்களை எளிதாக நேரடி மதிப்பில்-ஃபேஸ் வால்யு-எடுத்துக் கொள்கிறேன்..உங்களுக்கான அனுபவங்கள் வேறாக இருக்கலாம்..

||In closing, my sincere apologies if I came across as rude and hurt your feelings. I guess I did not pay as close an attention to the TV advertisements that promoted the kindness campaign on how to be nice and behave towards others.||
முன்பே சுட்டியபடி உங்கள் மீது வருத்தம் ஒன்றும் இல்லை.மேலும் எனது நேரடி அனுபவங்களிலிருந்தே நான் விதயங்களை அனுமானிக்கிறேன்,பாடம் கற்கிறேன்..சிங்கப்பூரர்களுடனான எனது அனுபவங்கள் நினைத்து நெகிழ வைப்பவை அல்ல;எனினும் உங்களது நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.

||Request to Badri: It would be very useful to hear from you on the quality of participants at your workshop and your impressions on the general state of affairs in Singapore. We heard from you (and from Paa.Raa’s posts) about the earnestness. What do you think of the ability? ||
இது முற்றிலும் வேறு கோணம்..நான் இதில் வாதிடவே இல்லை..

பத்ரிக்கு..மீண்டும் வருத்தங்கள்..நிறைய நன்றிகள்..

தேட...