Saturday, March 29, 2008

காவியப் பாவை ஜீவிதம்

காவியப் பாவை ஜீவிதம்

கொஞ்சம் மறந்துதான் போய்விட்டது,இன்று மின்மடல்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் மடல் கண்டு மீண்டு(ம்) வந்தேன்.
முதலில் அருமையான,அழகான,நல்ல முயற்சிக்கான வாழ்த்துக்கள்,கவிதையின் பொருளை இயன்ற அளவில் கொண்டுவர முயன்றதற்கான பாராட்டுகள்.
////கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்//// போன்ற வரிகளில் 'சானெட்ஸ்'ஐ அப்படியே கொண்டு வரும் 'கவித் தவிப்பு' தெரிகிறது.
சில இடங்கள் மேலும் நறுக்கென்று இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
காட்டாக, ///////எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது./////
என்பவை போன்ற வரிகள் சிறிது கவிதைக் கட்டைக் குறைப்பது போன்ற தோற்றம் தருகின்றன.
இதை எனது அரைகுறை முயற்சியில்,
/////அகிலத்தின் அழகெழில்கள்
வளர்ந்திடும் நாட்களிலே
கலைந்திடும் சிலநேரம்/////
என சொல்லலாமோ????

முழுமையாகப் படிக்கையில் சானெட்ஸ்'ன் இன்பத்தை சிந்தனைக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் !

வேறொரு சுவையான கோணம் இருக்கிறது,ஷேக்ஸ்பியர் இந்தக் கவிதையில் காதலியை உருவகப் படுத்துவதாகவே பலரும்,உங்கள் மொழிபெயர்ப்பு உட்பட,பொருள் கொடுக்கிறார்கள்.Out of the box idea' வாக வேறெதுவும் உங்களுக்குத் தோன்றுகிறதா?
***************************************************************

பாச மலர் said...
நன்றி அறிவன்..உங்கள் வரிகள் மிகவும் பொருந்தி வருகின்றன..உங்கள் ஆலோசனையை வரும் முயற்சிகளில் பின்பற்ற முயல்கிறேன்..

காதலி தவிர அவருடைய புரவலர் Earl of Southampton அவரின் நட்பு பாராட்டும் முகமாகவும் இந்த sonnets இருந்ததாகப் படித்துள்ளேன்..அதைப் பற்றிய விவகாரமான விவாதங்களும் இன்னும் ஆய்வுகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
****************************************************************

அறிவன் /#11802717200764379909/ said...
மிக்க நன்றி மலர், என்னுடைய கருத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதற்கு !!!
நானே சிறிது பயந்து கொண்டுதான் இருந்தேன்,முன்பொரு முறை ஒரு பதிவர்-ஒரு பெண்- சில கவிதைகளை எழுதியிருந்தார்,அழகியல் நோக்கில் சில விதயங்களை சுட்டி ஒரு கருத்து சொல்லியிருந்தேன்..
மிகு காட்டமாக,என்னுடைய கவிதை வரிகளுக்கு மாற்று சொல்ல நீ யார்??? என சண்டைக்கே வந்து விட்டார் !
தாயே,மன்னித்து விடுங்கள்,இனி கனவிலும் இப்பக்கம் வரமாட்டேன் எனச் சொல்லி அவர் வருந்தியதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.
உங்களுக்கு பதில் எழுதும் போதும் மிகவும் யோசித்தே எழுதினேன்,பயமுடன்..
இயல்புடனும்,நட்புடனும் அதை அணுகியதற்கு நன்றி.

மற்றபடி சானெட்ஸ் 18 ல்,'காதலி' என்ற பொருளை எடுத்துவிட்டு 'இளமை' என்ற பொதுப் பொருளை கருதி கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள்,ஒரு புதிய கோணம் கிடைக்கும்.
வோர்ட்ஸ்வொர்த் இந்த நோக்கிலேயே
We'll talk of sunshine and of song,
And summer days when we were young,
Sweet childish days which were as long
என்றெழுதியதாகவும் சில ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்னவரின் பல கவிதைகளில் முன்னவரின் பல சாயல்கள் இருக்கும் என்பதைக் கவனித்திருக்கிறீர்களோ??????

*****************************************************************************

March 31, 2008 2:55 AM
பாச மலர் said...
மீண்டும் நன்றி அறிவன்..விமர்சனங்கள் எப்போதுமே வளர்ச்சிக்கு உதவும்..

நீங்கள் சொல்வதும் புதிய கோணம்..பொருந்தி வருகிறது..

இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை பல இடங்களில் வெளிப்படும்..

No comments:

தேட...