Monday, March 10, 2008

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு

ஜடாயு ஐயா கக்கும் விசவாயு
நீங்களும் மலேசியத் தேர்தல் முடிவுகளில் மத ரீதியான விதயங்களை வலிந்து திணிக்க முயல்வதாகத்தானே தோன்றுகிறது?
ஜெயக்குமார் வெற்றி பெற்றது அவர் ஒரு கிருத்துவராக இருந்ததாலோ,அன்வர் இப்ராகிம்,அரசு அவர் மேல் இத்தனை அவச்சொல் புழுதி வாரித் தூற்றியும் இன்று விசுவரூபம் எடுத்தது அவர் முஸ்லீமாக இருந்ததாலோ அல்ல.
மேலும் உங்கள் வாதங்கள் சரியென்றால் இந்துராப் மனோகரன் ஜெயித்திருக்கிறாரே,அதற்கு மட்டும் என்ன காரணம் சொல்வீர்கள்? அவர் இந்தித்துவத்தை உயர்த்தியதாலா???????/
சொல்லப்போனால் மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

எல்லாவாதங்களிலும் உளுத்த கழகக் கொள்கையான மதரீதியான வெறுப்பை-அதுவும் இந்துமத ரீதியான வெறுப்பை - மட்டுமே திணிக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்????

தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.இதை எல்லா பார்வையாளர்களுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்வரும்,மனோகரனும்,ஜெயக்குமாரும்,படாவியும் தங்கள் வெற்றி தோல்விக்கான காரணங்கள் முழுக்க இன,மத ரீதியான ஓரவஞ்சனைகளும்,மக்களின் எண்ணப் போக்கை முழுதும் ஒதுக்கியதும் என்பதை தெளிவாக அறிவார்கள்.

மத ரீதியான நம்பிக்கைகள்,அனுகூலங்கள் மனித வாழ்வுக்கு,சோத்னை நேரங்களில் ஒரு புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ள உதவும் உளவியல் காரணி,இந்த நுண்ணிய உண்மையை அறிந்ததால்தான் முன்னேறிய,முன்னெறிக் கொண்டிருக்கின்ற நாடுகள்,மத சுதந்திரங்களை மக்களுக்கு அளித்திருக்கும் அதே நேரத்தில் மதவெறி தலைதூக்காமல் பார்த்துக்கொள்கின்றன.

திராவிடக் கட்சிகளில் மதநிந்தனையும்,ஆர்.எஸ்.எஸ்/இச்லாமியக் குழுக்களின் மதவெறியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இதில் இந்து,பொந்து என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மத நிந்தனை செய்வதும் அடக்கம் !!!!!!!(ஆனால் மஞ்சள் துண்டு போட்டுக்கொள்ளலாம்,சாயிபாபாவின் காலில் விழலாம் !!!!)
இம்மாதிரியான காரியங்களுக்கான விலையைத்தான் படாவி இப்போது கொடுத்திருக்கிறார்.

***************************************

/////நண்பர் அறிவன் கூறுவதுபோல.. இந்த பிரச்சனையை மதப்பிரச்சனையாக அதன் வெற்றியாக ஊடகங்கள் பெருக்கும்போது///////

ஜமாலன்,நான் இப்பிரச்னையை மத ரீதியானதாகப் பார்ப்பதாகப் பொருள் கொண்டிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.(நீங்கள் எழுதியதற்கு அவ்வாறும் பொருள் வருகிறது :-))

மற்றபடி கருத்தியல் நோக்கம் இல்லாது,ஆபாச அர்ச்சனைகள் செய்யும் நிறமிலி அஃறினைகள் பலர் இருப்பதையும் அறியமுடிகிறது.

சில இடங்களில் கருத்தாகக் கூட பேசக்கூடாத அனுபவக் கல்வியும் அறியக் கிடைக்கிறேன்.

******************************************

No comments:

தேட...