Tuesday, March 11, 2008

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்
நண்பர்களே,
இராவணன் ஏன் அவ்வாறு சொல்கின்றான் - கம்பர் வாக்கில் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
வால்மீகத்தையும்,இன்னும் மற்ற பிற வடமொழி இராமகாதையயும் படித்தவர்கள் கம்பனின் இராமகாதையைப் படித்தால் ஒரு பேருண்மையை தெற்றென அறிவார்கள்.
வால்மீகம் இராமனை தெய்வாம்சம் என்றே பேசுகிறது.மாலின் அம்சமாகப் பிறந்தவன் என்று போற்றுகிறது;ஆனால் சம்பவக் கோர்வைகளில் ஒரு நிறைமனிதனுக்கும் கீழாக சில இடங்களில் உணர்வு வயப்படுகிறான் வால்மீக இராமன்.(கிட்கிந்தா காண்டம்-சீதையைக் காணாதபோது,சுக்ரீவனை மட்டுறுத்த வேண்டிய வேளையில்,அயோத்யா,ஆரண்ய காண்டங்கள்-தயரதன் மறைவு,சீதையுடன் வனம் போதல்).
இந்த இடங்களில் வால்மீகம் காட்டும் இராமனின் உணர்வு வயப்பட்ட பேச்சுக்கள்,புலம்பல்கள் நிறைமனிதனின் கீழ்ப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இத்தனையும் அவன் தெய்வாமசமான மனிதன் என்று நிறுவிய பின்னும்.

ஆனால் கம்பனின் இராமன் - முதலில் ஒரு நிறைமனிதன். அவனிடம் பரம்பொருளின் குணங்கள் இருக்கின்றன என அவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் வாயிலாகவே,அவர்களில் நோக்கிலே கம்பன் சொல்லிச் செல்கின்றான்.
இராமன் எந்த இடத்திலும்,ஆசிரியன்(கம்பன்) வாக்கிலோ,தன் வாக்கிலோ-Self Person- தான் கடவுளின்,பரம்பொருளின் அவதாரம் என்று சொல்லுவதில்லை;மற்ற பாத்திரங்கள் வாயிலாகவே இக்கருத்து எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நோக்கிலே தான் இராவணின் இந்தப் பாடல் அமைகிறது.
ஒரு மனிதனைத்தான் நான் எதிர்த்தேன்,பகைகொண்டேன்,(என்னையே நம்பி நானிந் நெடும்பகை தேடிக்கொண்டேன்..யுத்தகாண்டம்) என்றெல்லாம் நினைத்திருக்கும் போது,கடைசி நாளுக்கும் முந்தைய நாளின் போரில் இராமனின் வன்மையைப் பார்த்தபின் இராவணனுக்கு இந்த ஐயம் வருகிறது !!!!!!!!!!

No comments:

தேட...