Friday, October 12, 2007

வாழ்வியல்

வாழ்வியல்


நண்பரே,நல்ல பாடல்.கொல்லான் என்ற சொல்லை மட்டும் ஏன் திருமூலர் போட்டார் என்பது கொஞ்சம் சிந்தனைக்குரியது.வள்ளுவர்,கொல்லான்,புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்றார்.நம் மக்களை புலால் உண்ணாதே என்றால்,நான் கொல்லவில்லை,எவனோ கொன்று விற்கிறான்;அதை வாங்கித்தான் தின்கிறேன் என்பான்.எனவேதான் வள்ளுவர் ஒரு கமாவை இடையில் போட்டு கொல்லான்,புலாலை மறுத்தானை என்றார்.

திருமூலர் சொல்கின்ற கொல்லான் என்பது உணவுப் பழக்கம் மட்டும் குறிப்பதன்று.

எந்தவகையிலும் கொல்வதை மறுக்க வேண்டும் என்றார்,

உயிரைக் கொல்வதை,

மனதைக் கொல்வதை,

எண்ணத்தைக் கொல்வதை,

அன்பைக் கொல்வதை,

பண்பைக் கொல்வதை,

இன்னும் எல்லா வகையினாலும் கொலையை மறுதளிப்பவன் வாழ்வாங்கு வாழ்வான் என்றார்.

மேலும் எண்குணத்தான் என்பது சைவசித்தாந்தத்தில் இறைவனின் குணங்களைக் குறிக்கும் சொல்.அந்த ஒரு சொல்லில் வாழ்வாங்கு வாழ்பவன் வாழவேண்டிய வாழ்வு இறைத்தண்மையுடைய வாழ்வு என்று ஒரு சொல்லில் சொல்லியது மூலனின் வாக்கு.

எனவேதான் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்றார் வள்ளுவர்.

நல்ல பாடல்....

No comments:

தேட...