Friday, October 12, 2007

பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?

பிள்ளையார் எப்போது தமிழகத்துக்கு வந்தார்?

I.உங்கள் பதிவு சார்ந்த கேள்விகள்:
1.ஐந்தினை எழுபதில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல்-விநாயகர் குறித்தது.
2.பிள்ளயார்பட்டியில் இருக்கும் விநாயகர்(நீங்கள் பார்த்திருக்கிறீர்களா,அது மலையில் வடிக்கப்பட்ட குடைவரை உருவம்)பீடத்தில் இருக்கும் எழுத்துருக்கள் 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.தேவார காலம் வெகு பின்னர்தான்.எனவே பிற்கால சிறுத்தொண்ட நாயனார்தான் விநாயகரை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார் என்பது ஏற்புடைய வாதமல்ல.
3.ஔவையாரின் வினாயகர் அகவல்-ஔவையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
4.பிரான்மலை என்னும் ஊரில்(புதுக்கோட்டை,காரைக்குடிப் பகுதி)உள்ள் குடைவரைக் கோயிலான மங்கைபாகரின்(இதுவும் பிள்ளையார்பட்டியைப் போலவே புடைப்புச் சிற்பம் வகையைச் சேர்ந்தது-சிவன் - உமை பிரதிமை) பீடத்தில் யானை வடிவம் கொண்ட ஒரு தெய்வ வடிவம் காணப்படுகிறது-இதுவும் 3-5 ம் நூற்றாண்டிலேயே காலப்படுத்தப் படுகிறது.
5.கிருத்துவின் காலத்திற்கு முன்பே சீனாவில் விநாயகர் வழிபாடு இருந்த சான்றுகள் உள்ளன.துன்ஹவாங்,குங்சியான் போன்ற இடங்களில் உள்ள குடைவரைக் கோயில்களில் விநாயகர் உருவம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இவைகளில் காலமும் கி.மு விலேயே உள்ளதாக துணிபு.
6.தொல்காப்பியத்தில் இரு பாக்களில் விநாயகர் பற்றிய குறிப்பு காணப்படுவதாகப் படித்த நினைவு,பாடலை உடனடி நினைவு கூர இயலவில்லை.

II ஜமாலன்,தாங்கள் சொன்ன்படி நான் சொன்னவை ஆய்வடிப்படையில் அமைந்தவை.தங்கள் குறிப்பிட்ட வேறு இரண்டு விடயங்களும் யூக அடிப்படையானவையே.(வினாயகார் அகவல் இடைச் செருகல்..அவ்வாறு இருக்க அடிப்படை இல்லை.ஏனெனில் விநாயகர் அகவலின் மொழிநடையைப் படிப்பவர்கள் ஆத்திசூடியைப் போன்றே எளிய தமிழ் நடையைக் காண்பார்கள்...மற்றபடி கோயில்களின் கட்டடக் கலை ப்ற்றி நீங்கள் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.கட்டடக் கலை அந்தந்த வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன(தகவல் தொடர்புகள் அவ்வளவு எளிதாக இல்லாத அக்காலத்தில்),எனவே அவற்றில் அவற்றில் வேறுபாடுகள் இயல்பாகவே இருந்திருக்கலாம்.. அவற்றிற்கு காரணம் ஆரியர்களில் யோசனையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல!அனானி அவர்களே,பிள்ளையார் பட்டி பற்றி நீங்கள் சொல்வதும் நடைமுறைக்கு ஒவ்வாதது..ஒரு சமண பிரதிமையை மறு பொலிவு செய்துதான் அவ்வளவு பிரமாண்டமான,கச்சிதமான-கூரைக்கும்,தளத்திற்குமான இடைவெளி மிகவும் குறைவு-(நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ,நான் பார்த்திருக்கிறேன்) சிலை அமைக்கப்பட்டது என்பது உங்கள் ஒருவரின் ஊகமாக மட்டுமே இருக்க முடியும்.மேலும் அந்த சிலையின் பீடத்தில் இருக்கின்ற சிற்பியின் குறிப்புகளின் மொழியாக்கம் 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையே என்பது மொழியியலாளர்கள் கருத்தும் கூட.நீங்கள் சொன்னபடி முற்கால சமணச் சிலையை பிற்கால பிள்ளையாராக்கி,அதன் பீடத்தில் மீண்டும் முற்கால எழுத்துருவைக் கொண்டு செய்தி எழுத மிகுந்த கற்பனை வளம் வேண்டும்(உங்களைப் போல!)எழுதியது சங்கப்பலகையே......

No comments:

தேட...