அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை
நல்ல வாதப் பிரதிவாதங்கள்.நீர் நம்மிடம் அதிகமாக இல்லை;அதிகம் ஹைட்ரோ ஆலைகள் அமைக்கும் அளவுக்கு இல்லை என்வே நினைக்கிறேன்.
காற்றாலை அமைப்பதில் டெக்னிகல் அம்சங்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது என்பது ஒரு குறையா என்ன? அது தனியார் துறைக்கு வேண்டுமானால் பெரிய காரியமாக இருக்கலாம்.ஆனால் அரசுக்கு?எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சக்தி உற்பத்தி செய்ய இயலும் போது முயற்சிக்கலாதானே?
மேலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு அளவில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள்;சிறு சிறி நிறுவனங்கள் அதிகம் காற்றாலைகளை உப்யோகித்து தங்களுக்கு வேண்டிய மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்வதாக செய்தியில் பார்த்தேன்.
இவ்வகை முயற்சிகள் அதிகரிக்கும் போது பொது விநியோகத்திற்கான் மின்சக்தி பெருமளவு மிச்சப்படும் இல்லையா?இதை தொழிற்சாலைகளுக்குத் திருப்பி விடலாமே..அணுசக்திக்கழிவுகள் த்லைமுறைகள் தாண்டி வேத்னைப் படுத்தும் என்பதை நன்றாக அறிந்து கொண்டே ஏன அதில் விழ வேண்டும்?
அதற்கான கண்டுபிடிப்புகள் சில ஆண்டுகளில் வந்துவிடும் என்று நம்புவதால் அதில் இறங்க முடியாதே..
அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அவர்கள் தேசம் என்றால் அதற்கு தனி சட்டமும் கொள்கைகளும்,மற்ற உலக நாடுகளுக்கு தனி சட்டங்கள் கொள்கைகள் என்ற இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள்;அவர்கள் சொல்கிறார்கள் என்பதால் அது நமக்கு நன்மை அளிக்கும் என நம்புவது அறியாமையே;நாம் ஆய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
நமது சிங்கோ பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கூட வைக்க மாட்டேன் என்கிறாரே??????
1 comment:
West is always selfish and clever, and shown aginst India. Indian politicians always betray and surrender to west.
Post a Comment