Saturday, July 5, 2008

"அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!"

"அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!"

கலாமின் நோக்கங்கள் மிக உயர்ந்தவை என்பதில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.

ஒரு நல்ல விஞ்ஞானியு அறிவியலாளரும் கூட.

ஆனால் தேச முதல் குடிமகனாக சில சமயம் சறுக்கினார்.(உறுப்பினர்கள் லாபம் தரும் பதவிகளில் அமரத் தடை மசோதா,356 மூலம் ஆட்சிக் கலைப்பு..)

அவரது 2020 திட்டமும் முழுக்க ஒரு டாக்குமெண்டரி போல இருக்கிறது;ஓரளவு வாசிப்பார்வம் இருக்கும் என் போன்றவர்களுக்கே இந்தியா 2020 நல்ல வாசிப்பை அளிக்கமுடியவில்லை.

விதயங்களை அறிந்து கொள்ளும் தாகம் இருப்பவர்களுக்கே அது விருப்ப வாசிப்பாக இல்லாத போது,ஆள்பவர்களோ,தலைவர்களோ அதன் அருகிலும் செல்வார்களா என்பது சந்தேகமே.

ஆளுமைப் பதவியில் அமருபவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது 50 களுக்குப் பிறகு இந்தியாவில் மறைந்துவிட்டது;அந்த மறைந்து போன rare species க்கு ஒரு காட்டாக விளங்கியதால்,இன்னமும் நாட்டின் மீது நம்பிக்கை கொண்ட(என்னைப் போன்ற) இளைஞர்கள் அவரை ஆவலுடன் பார்க்கிறார்கள்.அவரின் செயல்பாடு(முதல் குடிமகனாக) என்னையும் கவர வில்லை;அவர் இன்னும் வலிமையான தலைவராக தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் !

No comments:

தேட...