Sunday, June 8, 2008

சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது?

சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது?
நண்பர் ரவி,நல்ல விளக்கப் பதிவு.இன்னும் சில செய்திகள் லிங்க வடிவம் பற்றி இருக்கின்றன;உடனடியாகத் தர முடியவில்லை;சிறிது பொறுத்துத் தருகிறேன்.

சிவன் எக்காலத்தவன் என்பது பற்றிய சில விவாதங்களும் படித்தேன்.நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் யாவுமே கடைச்சங்க காலத்திய நூல்களே,சங்க இலக்கியங்கள் உட்பட.விதிவிலக்கான ஒரே நூல் தொல்காப்பியம்,அது சிறிதே காலத்தில் முந்தையதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கணிக்கிறார்கள்.

அந்நாட்களின் இந்தியாவின் கீழ்ப்பகுதி மிகவும் பரந்தி விரிந்து கீழ் இடது புறமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் சில பகுதிகள் வரை கூட இருந்திருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.அப்பகுதியின் கபாடபுரம் இடைச்சங்க காலத்தின் பெருநகராக இருந்திருக்கிறது.

இந்த தென்னகப் பகுதி மிகு உயர் நிலையில் இருந்ததால் 'தென்னாடு' எனவே அழைக்கப்பட்டிருக்கலாம்.சிவதத்துவம் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வலுவான கோஷம் எழ வாய்ப்பில்லை.

ஆனால் சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களிலும் 'சிவ' என்ற வார்த்தை குறிப்பு இல்லையெனவே பலரும் எடுத்துக் காட்டுகிறார்கள்;மாறாக ருத்ர என்ற சொல்லே,தேவதையே வழங்கப் பட்டிருக்கிறது.மாறாக பிரம்மம் என்ற உயர்தத்துவம் வடமொழி வேதங்களால் முன்னிறுத்தப்படுகிறது.இந்த பிரம்மம் என்ற சொல்லின் குறியீடாக வேதங்களும்,பிரம்ம சூத்ரமும் சொல்லும் பொருள்,தமிழில் சிவம் என்ற சொல்லால் ஆளப்படுகிறது.

இந்த பொருள்விரிப்பு சைவ சித்தாந்தத்தில் வருகிறது.அங்கு இறைத்தத்துவம் சிவம்,மாகேசுவரன்,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற வரிசையில் விளக்கப்படுகிறது.

எனவே சிந்துவெளிக்கெல்லாம் முன்பே சிவ வழிபாடு,சிவதத்துவம் தென்னாட்டில் இருந்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டியிருக்கிறது.துரதிருஷ்டவசமாக க்டல்கொண்ட கபாடபுரப் பேரழிவில் நூல்கள்,தத்துவம்,மக்கள் என அனைத்தும் அழிந்து போயிருக்கலாம்;பின்னர் தோன்றிய தென்னாட்டு உயிர்களின் வழிபாட்டுமுறை தத்துவம் சார்ந்ததாக இல்லாமல்,இயற்கை சார்ந்ததாக நால்வகை நிலம் சார்ந்ததாக,அந்நிலவகை காப்பாளர்கள் தம்மைக் காத்து அருளவேண்டும் என்ற livelyhood சார்ந்ததாக மாறியதால் சிறுகடவுளர் வழிபாடு பெருகி இருக்க வேண்டும்.

தற்போது இந்த விதயங்களை இணைக்கும் ஓரே நூலாக அறியக் கிடைப்பது திருமந்திரம் மட்டுமே.அதுவும் கடல்கோள்/ஆக்கிரமிப்பாளர் வழி அழிவுக்கு முன்னர் 8000 பாடல்கள் வரை இருந்ததாகவும் அழிவின்பின் எஞ்சியவை 3000 பாடல்களே எனவும் சில நூலோர் கூற்று.

மேலதிகத் தகவல்கள் தேடுகிறேன்;கிடைப்பின் பகிர்வேன்.

***********************************************************************

@அறிவன்

//நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் யாவுமே கடைச்சங்க காலத்திய நூல்களே,சங்க இலக்கியங்கள் உட்பட.விதிவிலக்கான ஒரே நூல் தொல்காப்பியம்//

கால வரையறையின் படி இது சரியே!

//சிவதத்துவம் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வலுவான கோஷம் எழ வாய்ப்பில்லை//

இந்த தென்னாடுடைய சிவனே கோஷம் எங்கு முதலில் வருகிறது அறிவன்? எந்த இலக்கியத்தில் அறிகிறோம்?

இல்லை செவி வழி வழக்கு தானா?

//ஆனால் சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களிலும் 'சிவ' என்ற வார்த்தை குறிப்பு இல்லையெனவே பலரும் எடுத்துக் காட்டுகிறார்கள்;மாறாக ருத்ர என்ற சொல்லே,தேவதையே வழங்கப் பட்டிருக்கிறது//

ருத்ரன் என்பது வேத காலக் கடவுள். பின்னரே சிவம் என்ற வழங்கப் பெறுகிறார்.மெளலி அண்ணா/திவா சார் - இது சரியா? ரிக் வேத சாகைகளில் சிவன் என்ற சொல் இல்லையா?

//இந்த பொருள்விரிப்பு சைவ சித்தாந்தத்தில் வருகிறது.அங்கு இறைத்தத்துவம் சிவம்,மாகேசுவரன்,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற வரிசையில் விளக்கப்படுகிறது//

சைவ சித்தாந்தம் என்பது இடைச்சங்க காலத்தில் இருந்ததாஇல்லைசிவம் என்பது மட்டும் கபாடபுர வழக்கில் இருந்து, பின்னர் இடை/கடைச் சங்க காலத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் என்று தலை தூக்கி, அதன் பின்னர் சைவ சித்தாந்தம் என்று நிலை பெற்றதா?

//துரதிருஷ்டவசமாக க்டல்கொண்ட கபாடபுரப் பேரழிவில் நூல்கள்,தத்துவம்,மக்கள் என அனைத்தும் அழிந்து போயிருக்கலாம்;//

சிவம் என்பது மட்டும் கடற் கோளுக்கு முன்னரே, தொல்காப்பியத்துக்கு முன்னரே, சிவ தத்துவமாய் இருந்தது என்று சொல்கிறீர்கள்! நூல்கள், மக்கள் என்று அத்தனையும் அழிந்து போயினவே! அப்புறம் சிவம் என்ற இறையும் தத்துவமும் கபாடபுரத்தில் இருந்தது என்பதை மட்டும் எதைக் கொண்டு அறிகிறோம்?

//பின்னர் தோன்றிய தென்னாட்டு உயிர்களின் வழிபாட்டுமுறை தத்துவம் சார்ந்ததாக இல்லாமல்,இயற்கை சார்ந்ததாக நால்வகை நிலம் சார்ந்ததாக//

1. ஆக தொல்காப்பியருக்கு முன்னரே சிவன் தென்னாட்டில் இருந்தார்.2. கடற் கோளில் காணாமல் போனார்.3. பின்னர் வந்த நாகரிகத்தில் மாயோனும் சேயோனும் தோன்றினார்கள். 4. ஆனால் அப்போதும் சிவன் காணாமல் போன நிலையிலேயே இருந்தார்.5. தொல்காப்பியருக்குப் பின்னர் மீண்டும் "எப்படியோ" காணாமல் போயிருந்த சிவன் சிலப்பதிகாரம் முதற்கொண்டு தலை தூக்க ஆரம்பித்தார்.

நல்ல கோர்வையான சிந்தனையாகத் தான் இருக்கு!ஆனால் இதற்கு ஏதேனும் ஒரு சான்று, தரவு ஆவது தர வேண்டுமே! எதைக் கொண்டு இப்படி ஒரு கோர்வைக்கு வந்தோம்?

1இவ்வளவு Chronology கடற்கோளுக்கு முந்தைய சிவனைப் பற்றி அறிய முடிகிறது என்றால், எதை வைத்து அறிந்தோம்? நூலா, இலக்கியமா, புதை பொருளா? எது? - இதற்கு விளக்கம் தேவை?

2கடற்கோளில் காணாமல் போன சிவன், மாயோன்/சேயோனுக்குப் பின் எப்படி மீண்டும் வந்தார்?

இதற்கெல்லாம் விடை தேடுதல், தமிழில் இறையின் தொன்மத்தை அறிய உதவும்!

தொன்மம் அறிவது ஒவ்வொரு கலாச்சாரத்தின் சிறப்பு.பக்தி மார்க்கத்துக்குத் தொன்மம் தேவை இல்லை! சிவபெருமானை வணங்கி மகிழ்ந்து உய்வு பெறுவது அது!

இது ஒரு ஆன்மீகப் பாதை என்றால் அது ஒரு வரலாற்றுப் பாதை!

இரண்டையும் அன்பர்கள் குழப்பிக் கொண்டு பயனற்ற கும்மியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//தற்போது இந்த விதயங்களை இணைக்கும் ஓரே நூலாக அறியக் கிடைப்பது திருமந்திரம் மட்டுமே//

திருமந்திர நூல் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?தொல்காப்பியத்துக்கும் முந்தியது என்றா சொல்கிறீர்கள்?

திருமூலர், மூல நாயனார் என்று சொல்வது எல்லாம் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?

எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

மற்றபடி உங்கள் கருத்துக்களும் வாதங்களும் சூப்பர் அறிவன்!

நல்ல தகவல்கள்!

சைவக் கொடி பிடிப்பதாக நினைத்துக் கொண்டு கும்மி மட்டுமே அடிப்பதைக் காட்டிலும், தங்களைப் போன்றவர்கள் செய்வதே சிறந்த சிவத்தொண்டு!

மேன்மை கொள் சைவ நெறி மேதினியில் தழைக்கட்டும்!ஓம் நம சிவாய!

***********************************************************************

///1. ஆக தொல்காப்பியருக்கு முன்னரே சிவன் தென்னாட்டில் இருந்தார்.2. கடற் கோளில் காணாமல் போனார்.3. பின்னர் வந்த நாகரிகத்தில் மாயோனும் சேயோனும் தோன்றினார்கள். 4. ஆனால் அப்போதும் சிவன் காணாமல் போன நிலையிலேயே இருந்தார்.5. தொல்காப்பியருக்குப் பின்னர் மீண்டும் "எப்படியோ" காணாமல் போயிருந்த சிவன் சிலப்பதிகாரம் முதற்கொண்டு தலை தூக்க ஆரம்பித்தார்.////

அன்பு ரவி, Point no.4 நான் சொன்ன விதயத்தில் இல்லை.நான் சொல்ல வந்தது சிறு தெய்வ வழிபாடு எப்படி பரவலான ஆக்கம் பெற்றது என்பதைக் குறிக்க..சிவதத்துவம் ஒரேயடியாக மறைந்திருக்காது.

பதிவுலகில் பரவலாக அறியப்படும் ‘திராவிடத்'துக்கிடடையே அவ்வப்போது மின்னி மறையும் ‘மாதவித்' தெய்வம் போல மிகச் சிலருக்கான வட்டத்தில் இருந்திருக்கலாம்.

:-)

ஆயினும் உங்கள் வினா நல்ல ஆய்வுக்குரிய ஒன்று,விடை(அல்லது விடை நோக்கிய தேடல்)கூடிய விரைவில் !

/////திருமந்திர நூல் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?தொல்காப்பியத்துக்கும் முந்தியது என்றா சொல்கிறீர்கள்?

திருமூலர், மூல நாயனார் என்று சொல்வது எல்லாம் பக்தி இலக்கிய கால கட்டம் இல்லையா?

எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

மற்றபடி உங்கள் கருத்துக்களும் வாதங்களும் சூப்பர் அறிவன்!

நல்ல தகவல்கள்!/////

இவை பற்றியும் சரியான விதயங்களுடம் மீள்கிறேன்.

என் சிற்றறிவு கருவிலே அமைந்த திருவாக என் அன்னையின் வாசனையில் வந்தது.

அவர் உண்மையான 'படிப்பாளி'.

சிறிது கடன் வாங்கி விரைவில் வருகிறேன்.

பாராட்டுக்கு நன்றி,கீதா மற்றும் ரவிக்கு.

2 comments:

Unknown said...

இந்த பிரபஞ்சம் லிங்க வடிவாக இருக்கிறது. அதை தான் லிங்கமாக வணங்குகிறோம்.

Unknown said...

இந்த பிரபஞ்சம் லிங்க வடிவாக இருக்கிறது. அதை தான் லிங்கமாக வணங்குகிறோம்.

தேட...