Wednesday, June 11, 2008

சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

வித்தியாசமான தளப்பதிவு.

//சுஜாதா கணேஷ் வசந்த் பிரச்சனையை அழகாக சமாளித்தார்.கணேஷ் வசந்தை செமி வில்லனாக காட்டிவிட்டார்.//

இது ஒரு காரணமா என்ன?

வசந்த்'ஐ வேண்டுமானால் அந்த குறும்புக்காக செமி வில்லன்' என சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்,ஆனால் கணேஷை எப்படி அப்படி சொல்வீர்கள்?

என்னைக் கேட்டால் கணேஷ் சுஜாதா'வின் ஆதர்ச நாயகன் வடிவம்;வசந்த் அவருக்குள்ளிருந்த விளையாட்டுப் பிள்ளை வடிவம்.யோசித்துப் பார்த்தால் நம் அனைவருக்குள்ளுமே இவ்வித இரு விதமான(சிலருக்கு பல விதமான) குணாதிசயங்கள் இருக்கின்றன.

அவர்கள் இருவரின் கதாபாத்திரம் உயிர்ப்புடன் கடைசிவரை இருந்ததற்கான-சொல்லப்போனால் இன்னும் இருப்பதற்கான- காரணம் சுஜாதாவின் அகன்ற வாசிப்பு,அதனால் பரிமளித்த அவரின் அகடமிக் இண்டலிஜன்ஸ் அந்த கதாபத்திரங்களிலும் பிரதிபலித்ததே.

அப்ஸ்ட்ராட்டாக சொன்னால்,அனிதா இளம் மனைவியிலோ,நைலான் கயிறிலோ வரும் கணேஷ்,பிற்காலக் கதைகளின் வசந்த் போலதான் பிஹேவ் செய்வான்.ஆனால் யவனிகாவின் கணேஷ் சொல்லமுடியாத அளவில் முதிர்ச்சியைக் காண்பிப்பான்.

போகப் போக சுஜாதாவின் வாசிப்புகளின் பிரதிபலிப்புகள் அந்த பாத்திரங்களில் இருந்ததுதான் அவற்றின் என்றுமான வெற்றிக்கான காரணம்;அவரின் வாசிப்பு என்றுமே-கடைசிவரை- உயிர்ப்புடன் இருந்தது !

No comments:

தேட...