பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்
அறிவன்#11802717200764379909 எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
//வீரபாண்டியன் நந்தினியின் காதலனா? தந்தையா? எனற கேள்வியை வாசகர்களிடம் எழுப்பிவிட்டு அதற்கு விடையைத் தெரிவிக்காமலேயே கதையை முடித்துவிட்டார். //
நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.
பழுவேட்டரையர் மூலம் தெளிவாகவே குறிப்பிடுகிறார்,நந்தினி வீரபாண்டியன் மகள் என்று.இதை ஆழ்வார்க்கடியானும் உறுதி -கருத்திருமன் மூலம்-செய்வான்....
இணையத்தில் பொன்னியின் செல்வன் டாக்டரேட்ஸ் கொஞ்சம் பேர் இருக்காங்க...
:-)
*********************************************************
ஜி எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
அறிவன்#11802717200764379909//நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.//:))
நானும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பதை உறுதிபடுத்தி விட்டார் என்றே நினைத்தேன்.
ஆனால் ஐந்தாம் பாகம் தொண்ணூறாம் அத்தியாயத்தில் வந்தியதேவனும் குந்தவையும் பேசும் ஒரு உரையாடலில் தாந்தான் நந்தினியின் தந்தை என்று பைத்தியக்காரன் சொன்னதாக வரும்.
மேலதிக விவரங்களுக்கு...http://www.ponniyinselvan.in/novel-characters-f7/nandhini-t15584.html?sd=d
**************************************
அறிவன்#11802717200764379909 எப்படித் தாக்கியிருக்காங்கன்னா...
//ஜி எப்படித் தாக்கியிருக்காங்கன்னா... அறிவன்#11802717200764379909//நீங்கள் இன்னும் தெளிவாகப் படிக்கவில்லை போலிருக்கிறது.//:)) நானும் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை என்பதை உறுதிபடுத்தி விட்டார் என்றே நினைத்தேன். ஆனால் ஐந்தாம் பாகம் தொண்ணூறாம் அத்தியாயத்தில் வந்தியதேவனும் குந்தவையும் பேசும் ஒரு உரையாடலில் தாந்தான் நந்தினியின் தந்தை என்று பைத்தியக்காரன் சொன்னதாக வரும்.மேலதிக விவரங்களுக்கு...http://www.ponniyinselvan.in/novel-characters-f7/nandhini-t15584.html?sd=d////
இல்லை !
இதை ஆழ்வார்க்கடியானே உறுதி செய்வான்.
பைத்தியக்காரன் - வந்தியத்தேவன் உதவியால் பாதாளச்சிறையிலிருந்து தப்பித்து ஓடும் போது ஆழ்வானிடம் படகில் மாட்டுவான்;அப்போதும் கருத்திருமன் முதலில்,தான் தான் அந்த இரு குழந்தைகளின் தகப்பன் எனக் கூறுவான்;பின்னர் ஆழ்வான் ‘நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கிக்' கேட்டவுடன்,இல்லை அந்த இரு குழந்தைகளும் என் எஜமானரின் குழந்தைகள்(வீரபாண்டியன்) என்பான்;புதைக்கப் பட இருந்த அவற்றை காப்பாற்றியது தான் தான் என்றும்,அதற்காகவாவது உயிருடன் விட்டு விடும் படியும் கேட்பான்;ஆழ்வான்,'உண்மையில் அதற்காகத்தான் விடுகிறேன்' பிழைத்துப் போ' என்று விடுவான்.
பின்னர் கதையில் நந்தினி கரிகாலரிடம் உண்மையைச் சொன்ன கணத்தில் பழுவேட்டரையர் மறைந்து கேட்பார்.
இத்தகவல் நந்தினியால் நேரடியாக அவருக்குக் குகையில் உறுதி செய்யப் படும்.அதை பழுவேட்டரையர் அரசசபையில் தான் தற்கொலை செய்யும் முன்னர் பகிரங்கமாகத் தெரிவிப்பார்....
1 comment:
அறிவன் ஐயா,
இது தொடர்பான ஒரு இடுகை பார்க்கவும்
Post a Comment