Monday, April 30, 2012

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?


காந்தியைப் புனிதராகவோ மனிதரோகவோ காட்டுகிறதோ இல்லையோ இம்மாதிரிக் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் ஒளிவட்டம் என்றே தோன்றுகிறது..
:)
எதிலும் நேர்படப் பேசும் பத்ரி இதில் வீழ்ந்தது வருந்தத் தக்கது.
காந்தி ஒரு தனிமனிதராக மிக உயர்ந்தவராகத்தான் இருந்தார்;வாழ்ந்தார்..
எந்தத் தனிமனிதனுக்கும் தன் தவறுகளை உணரவோ பொதுவில் வைத்து மன்னிப்பு வேண்டவோ முடியும் அளவுக்கு இலகுவானதும் மேன்மையானதுமான மனம் இருந்ததில்லை;எந்தத் தனிமனிதனுக்கும் பரந்து பட்ட தனது மக்களுக்காக அவர்கள் நலனை முன்வைத்துப் பல சோதனை முறைப் போராட்டங்களை முன்னெடுக்கத் தோன்றியதில்லை..
அவரது குறைபாடு அவரது போராட்டமுறை தவிர மற்ற முறைகளின் புனிதம் பற்றியும் நோக்கம் பற்றியும் அவருக்கு இருந்த உள்ளார்ந்த கேள்வி எழுப்புதலும்,நம்பிக்கையின்மையும் அவர்களை முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு-இது அவர்களின் வாழ்வை முடிக்கும் என்ற நிலையிலும்-அவரை செலுத்தியது என்பதும்தான்..இதிலும் தோற்றதாகத் தோன்றுவது காந்தி என்ற தேசத்தலைவர்தான்..
ஒரு தனிமனிதராக அவர் தன்னைச் சுத்தி செய்து கொண்டேயிருந்தார் என்பதும் மகாமனிதனாக மாறும் தொடர்செயல்பாடே வாழ்வு என்ற நினைவிலும் வாழ்ந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

No comments:

தேட...