Sunday, December 30, 2007

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

சைவ உணவின் தாத்பரியம் மதரீதியானதோ,சமய ரீதியானதோ அல்ல;அது அன்பின் வழி வந்தது.
தன் இருப்புக்காக,வாழ்வுக்காக இன்னொரு உயிரைக் கொல்லக் கூடாது என்ற என்ற உலகலாவிய அன்பின் வழி வரும் நெறியே,சைவநெறி.சாதாரணமாக தன் உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,எனவேதான் வள்ளுவர்
தன்னூன் தான்பெருக்க மற்றுயிரைக் கொல்வானை எங்ஙணம் ஆளும் அருள்? எனக் கேட்டார்.
மற்ற உயிரைக் கொல்லும் ஒரு மனிதனிடம் அருள் இருக்கமுடியாது என்ற பொருள்.
/////////
அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர்
///////////
எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே ஒழிய மனத்தின் பாற்பட்ட வாதமல்ல.
நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.
அவற்றின் வாழ்க்கை முறையும் மனித உயிரின் வாழ்க்கை முறையை ஒத்தது;அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;அவற்றின் வாழ்வும் அன்பும்,துயரும் மனித உயிரைப் போலவே வெளிப்படையானவை.
ஒரு நெற்பயிர் இன்னொரு நெற்பயிருடன் காதல் புரிந்து,குழந்தை நெற்பயிரை உருவாக்குவதில்லை;மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,எனவே இயற்கையின் அமைப்பில் அவை 'உண்மையான' உயிர்களின் - ஆடு,மாடு மற்றும் மனிதன் போன்ற உயிர்கள் உட்பட- உணவுக்காகப் படைக்கப்பட்டவை.
அவையும் உயிர்தான்,அவற்றைக் கொன்றுதான் நீ தின்கிறாய் என்பது,புலால் உண்பவர்களின் நொண்டிச் சாக்கு.
/////////
எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும்
/////////
புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.
தெருவில் வண்டியில் அடிபட்டு, ரத்தமும் சதையுமாக அரைந்து கிடக்கும் ஒரு உயிரியின் பால் வரும் அருவருப்பே,சைவ உண்வாளி புலாலைப் பார்த்தால் வரும் அருவருப்பு...அது புரிந்து கொள்ளப் பட வேண்டியதே...
//////////
இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது.
////////////

இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.
90 களின் கடைசியில் நான் சவூதி அரேபியாவில் இருந்தபோது கூட நான் சைவ உணவாளியாக வாழ முடிந்தது;சவூதியிலேயே வாழ முடியும் போது லண்டன் போன்ற நகரில் முடியாது எனச் சொல்வதும் நொண்டிச் சாக்கின் பாற்பட்டதே.

மற்ற செரிமானம் தொடர்பான வாதங்கள் கவைக்குதவாதவை.

**************

டிஸ்கி:
///////////
அவன் அப்படி செய்வது தான் ஆச்சாரமானவன் (பார்ப்பனன் அல்லன்) என்ற சுய திருப்திக்காக செய்து கொள்வதுதான்
///////////

பிராமணர்கள் தான் சைவ உணவாளிகள்,ஆசாரமானவர்கள் எனச் சொல்வதும் ஒரு மாயையே..
சாம,அதர்வண வேதங்களில் யாக முறைகளில் கன்றீன்ற பசுவின் மடியை(பால் காம்புகளை) அரிந்து வேள்வி செய்யும் முறைகளை விவரிக்கும் கொலைகாரப் போக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது..

/////////
சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன்..
/////////

அதில் பெருமை இருந்தால் புரிந்துகொள்ளப் பட வேண்டியதே அன்றி,இகழ்ந்து பேசப்பட வேண்டிய ஒன்றல்ல.

*****************************************

>>>>>>>>>>>>
//உணவுக்காகவே இன்னொரு உயிரைக் கொன்று புசிக்கும் ஒரு மனிதன் உலகின் எந்த உயிரின் மேலும் அன்பு செலுத்துபவனாக இருக்கமுடியாது,//

இப்படி எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உலகில் புலால் உண்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அவர்கள் அனைவரும் அன்பில்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா?

>>>>>>>>>>>>>

மற்றொரு உயிரின் மேல் அன்பிருக்கும் போது அதைக் தன் உணவுக்காக கொல்லத் துணிந்தால்,'உன் மேல் எனக்கு மிக அன்பு அதனால்தான் உன்னைக் கொல்கிறேன்' என கருதச் சொல்வீர்களா????

>>>>>>>>>>>>>
//எல்லாமே உயிர்தான் - நெற்பயிர் உள்பட-என்பது விதண்ட வாதமே//

இது விதண்டாவாதமா? இல்லை

//நிணமண்டலம் (ரத்தம்) செயல்படும் உடலமைப்பைக் கொண்டவைகளே உயிர்கள்.//

இது விதண்டாவாதமா? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
>>>>>>>>>>>>>>

நீங்களே அமைதியாக சிந்தியுங்கள் !!!

>>>>>>>>>>>
//அவற்றைத் துன்புறுத்தாமல்-கொல்லாமல்-விட்டால் அவை இனப்பெருக்கம் செய்து மனிதனைப் போலவே அன்புசெலுத்தி வாழும் இயல்பு கொண்டவை;//

நான் அடிக்கடி வேடிக்கையாக சொல்வதுண்டு. மான், மயில் போன்ற உயிரினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மனிதன் அவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டுமென்று. நீங்கள் பார்த்தீர்களானால் ஆடும், கோழியும் மானையும் மயிலையும் போன்றவைதான். இந்த புவியில் மனிதன் இருக்குமட்டும் அவற்றுக்கு அழிவென்பது இருக்க வாய்ப்பில்லை.
>>>>>>>>>>>>>>

நான் சொல்வது அவற்றின் வாழ்க்கை முறை பற்றி...
அவற்றை கொன்று தின்பதால் அந்த இனங்கள் பூமியில் இல்லாமல் போய்விடக் கூடும் என்பது என் வாதமல்ல...மீண்டும் நான் எழுதியதைப் படியுங்கள்....

>>>>>>>>>>>>>
//மனிதனோ.மற்ற ஏதாவது ஒரு காரணியோ நெல் விதையை விதைத்து செயல்படுத்தினால் மட்டுமே பயிர் வளர்கிறது,//

இயற்கையாக நெற்பயிர் வளரமுடியாது என்கிறீர்களா?
>>>>>>>>>>>>>>

யாராவது விவசாயம் செய்பவரை அறிந்திருந்தால் கேளுங்கள்,சொல்லுவார்..
அதற்கு முன் நாற்றுக்கும் நெற்பயிருக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்...

>>>>>>>>>>>
//புலால் உணவாளிகள் இதை மறுத்து வாதம் செய்வதும் மேற்சொன்ன காரணம் கொண்டே,ஏனெனில் நான் தின்பதால் நீ அதை அருவறுக்கக் கூடாது என்ற ஈகோ தான் காரணம்.//

இதிலென்ன ஈகோ இருக்கிறது. அருவருப்பாக இருக்கிறது, வாந்தி வருகிறது என்று சொல்லப்படும்போது அது மனதைத் தைத்தாலும் புலால் உண்பவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள். அதற்காக சில விட்டுக்கொடுத்தல்களையும் செய்கிறார்கள். அருவருப்பாகப் பார்ப்பது அநாகரிகமானது என்று சொல்கிற ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். :))
>>>>>>>>>>>>

நீங்கள் மனதைத் தைக்கிறது என்கிறீர்கள்,நான் ஈகோ என்கிறேன்.

>>>>>>>>>>>>
//இது தன் குறைபாடுகளுக்கு மற்ற காரணிகளைத் தேடும் மனோபாவம்.இக்காலத்தில் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சைவ உணவைத் தேடிக் கொள்ளலாம்.//

ஒத்துக்கொள்கிறேன். காந்தியால் இதே இலண்டனில் அதுவும் அந்த காலத்திலேயே முடிந்திருக்கிறது.
>>>>>>>>>>>>>>

That's the Spirit...

No comments:

தேட...