Sunday, December 30, 2007

2007 நான்கு வரி மட்டும்.

2007 நான்கு வரி மட்டும்.

///////////
பாகிஸ்தானில் ஜனநாயகம் மலருமா ? பலரது கேள்விக்கும், பெரிய அண்ணனின் தயவால் (?) சென்ற ஆண்டின் ஈராக்கில் ஜனநாயகம், அதன் அவசர நிகழ்வாக சாதமின் தூக்குதண்டனை, இந்த ஆண்டு பெரியயாண்ணனின் பாகிஸ்தான் மீதுள்ள ஜெனநாயக பரிவின் காரணாமாக, அவர்தம் அன்பு வேண்டுகளை தட்ட முடியாமல் பெனாசிர் பாகிஸ்தான் சென்றதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்,
////////////////
அமெரிக்காவிற்கு பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர வேண்டிய பரிவெல்லாம் ஒன்றுமில்லை.
அவர்களுக்கு ஆசியாவில் கேந்திரமான் இடங்களில் காலூன்ற,கண்காணிக்க இடங்கள் தேவை;அதற்கு பாகிஸ்தான் நல்ல இடம்,இந்தியா,சீனா இரண்டையும் ஒரு கண் தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் முஷாரஃப் புஷ் நினைத்ததை விட கெட்டிக்காரராக,பாம்புக்குத் தலை கீரிக்கு வால்,என அமெரிக்கா கொட்டிய பணத்தையும் வாங்கிக் கொண்டு திரைமறைவில் தீவிர வாதிகளையும் ஊக்குவித்தார்.இது பாகிஸ்தானில் எளிதான அமெரிக்க படைகளின் நடமாட்டத்தை முடக்கியது(தீவிரவாத மத அடிப்படைவாதிகள் அதை விரும்பாததால்!).
அமெரிக்கா பெனாசிருக்கு நம்பிக்கை அளித்து,முஷாரஃபுக்கும்,பெனாசிருக்கும் பஞ்சாயத்து செய்து,பெனாசிரை களத்தில் இறக்கியது.
பெனாசிர் பலம் பெரும் பட்சத்தில் முஷாரஃப் கொல்லப்பட்டோ நீக்கப்பட்டோ,அமெரிக்காவின் சிரமங்கள் அற்ற இருப்புக்கு பாகிஸ்தான் அரசு உதவிகள் செய்திருக்கக் கூடிய நிலை வந்திருக்கக் கூடும்.அமெரிக்காவிற்கும் அப்படி ஒரு நிலைப்பாட்டை கருத்தில் கொண்டுதான் பெனாசிரைக் களத்தில் இறக்கியது.
பெனாசிரைப் பொறுத்த அளவில் இளமைக்காலத்தில் அவ்ர் மனத்தில் பதிந்த மேற்கத்திய ஜனநாயக வழிமுறைகள் பதிந்து போனதால்,பாகிஸ்தானில் அவற்றை நிறுவ முடிந்தால் நல்லது என நம்பினார்.அமெரிக்கா அவருக்கு முஷாரஃபால் ஆபத்தில்லை என நம்பிக்கையூட்டி அனுப்பியிருந்திருக்கும்.
பெனாசிர் எச்சரிக்கையுடன் இல்லை,முஷாரஃப் அதீத விழிப்புடன் இருந்திருக்கிறார்.
அதுதான் இந்த விளைவு

No comments:

தேட...