Thursday, December 20, 2007

சிதம்பர ரகசியம் - ஒரு இடைவேளை!

சிதம்பர ரகசியம் - ஒரு இடைவேளை!
என்னுடைய பின்னூட்டங்களை விவரங்கள் சேகரிப்பதற்காகவே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஆயினும்,உறுதிபட நான் சொல்லும் விதயம் பொன்னம்பல சபை எனும் மேடை இருக்கும் சன்னிதி வட்டாரத்தில் திருமுறைகள் பாடப்படுவதை தீட்சிதர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்(என்ன காரணம் என்பதுதான் புரியவில்லை???????)திருமுறைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய ஒரு கூட்டத்தவர்களின் ஆதார செயல்பாட்டு இடமாக ஒரு காலத்தில் சிதம்பரம் கோவில் இருந்திருக்கிறது என்பதும் ஆதாரபூர்வமான உண்மை.எனினும் உண்மைகளைத் தேடி முன்வைக்க விழையும் எண்ணத்தை நான் வரவேற்கிறேன்.
*****************************
//
சைவ ஆகம முறைப்படிதான் முன்னர் இருந்ததாயும், பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றிவிட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும், வேதத்தின் ஒரு பகுதியே எனவும், ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும், ஒருமுறை படிச்சேன்.
//
சைவ ஆகமங்கள் கிரந்தத்தில்-நீங்கள் வடமொழியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் - ஒரு நாளும் இல்லை;அவை தீந்தமிழ் மொழியிலேயே ஆதிமுதல் இருக்கின்றன;வேதங்கள் எனச் சொல்லப்படுகின்ற ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் தவிர ஏனைய கிரந்த,வேத,ஆகமக் கருத்துக்கள் கடத்தப்பட்ட கருத்துக்கள்,எனவேதான் தமிழ் நூல்கள் மறைக்கப்பட்டதும்,நான்கு வேதங்களின் content'ம் இவ்வகை பிற்கால ஆகமங்களின் content'ம் முற்றிலும் வேறுவேறாக இருப்பதின் காரணங்கள்-என்பதுதான் செய்தி..

No comments:

தேட...