Sunday, September 22, 2013

கம்பன் – மதுவும் மாமிசமும்..

கம்பன் – மதுவும் மாமிசமும்..


அன்புள்ள நண்பரே,
உலக சரித்திரத்தில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை ஆக்கிய இலக்கியகர்த்தாக்கள் எல்லோரும் தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அந்த சமூகத்தை ஆற்றுப் படுத்துவதையும் தனது கடமையாக் கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள்.

சில வெகு சிறப்பான இலக்கியங்கள்(திருமந்திரம் போன்றவை) சமூகத்தையும் தாண்டி இகவாழ்வு தாண்டிய விதயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றன.ஆனால் அவ்வித இலக்கியங்கள் உலக வரலாற்றில் வெகு சிலவே;அவற்றிலும் அவை தமிழ் மொழி தாண்டி வேறு மொழிகளில் நிலவுகின்றனவா என்பது மிகுந்த ஆய்வுக்குரியது.

உலகில் உயிர் தோன்றிய காலம் முதல் மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதனும் தன் இருப்புக்கான தேவைகளையும் கருவிகளையும் ஓயாது கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்கிறான்; அதுவே வாழ்வியல் சிறப்புகளாகவும் அறிவியல் அதிசயங்களாகவும் இன்றுவரை மனித குலத்தை தேர்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.

ஆனால் உடல் தாண்டிய விதயங்களைப் பற்றிப் பேசிய நூல்கள் இலக்கியங்கள் மிகக் குறைவே; அவ்வாறு பேசிய நூல்கள் பெரும்பாலும் இகவாழ்வில் வாழும் முறைகள் பற்றியும் அவ்வப்போது பேசிச் சென்றிருக்கின்றன.

மனிதன் உட்கொள்ளும் உணவுக்கும் அவனது சிந்தனைக்கும் விளைவான செயலுக்குமான விளைவை பல சிந்தனையாளர்கள் அறிவியலாளர்கள் இந்தக் காலத்தில் விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.

அவ்விதமான விளைவைப் பற்றிய சிந்தனைகளையும், மேற்சொன்ன பேரிலக்கியங்களில் தமிழ் பெருமகனார்கள் அவ்வப்போது தொட்டுச் சென்றிருக்கிறாரகள்.அவ்விதமான செய்திகள் தமிழில் கிடைப்பது தமிழனாகப் பிறந்தவனின் கொடை.

மனிதனின் வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள் சீன மற்றும் தமிழ் இலக்கியங்கள் தவிர வேறு எவற்றிலும் பேசப் படவில்லை என்பது நான் அறிந்த வரை உண்மை.ஆனால் உடல் தாண்டிய உயிர் தாண்டிய ஆன்மாவைப் பற்றிய விதயங்களைத் தொடும் போது மட்டுமே இவ்விதமான சிந்தனைக் கொடைகள் சமூகத்திற்குக் கிடைக்கின்றன.

அந்தக் கொடையை, இலக்கியங்கள்,நிலவிய காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது என்ற பொத்தாம் பொதுவான அடைப்புக்கள் வைப்பது, நமது விளக்க அறிவுக்கு நாமே செய்து கொள்ளும் தடை என்பது எனது தாழ்மையான கருத்து.

Tuesday, June 11, 2013

செய்து காட்டுவார் மோதி - பத்ரி

செய்து காட்டுவார் மோதி - பத்ரி


நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை எழுத நினைத்த அத்தனை விதயங்களையும் தொட்டு எழுதியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள்...

பத்ரி, இதை உங்கள் தளத்திலும் பகிருங்கள்..

கடைசி மஞ்சள் வரி கமெண்ட் பத்ரியினுடையதா அல்லது இட்லி வடையினுடையதா?

ஆர்எஸ்எஸ் காரர்கள் படித்துத் தெளியவேண்டியது எதுவும் இல்லை;ஆர்எஸ்எஸ் மோடியின் தேர்வில் தெளிவாகவே இருக்கிறது; அத்வானியைச் சமாதானப் படுத்த வேண்டிய மட்டும் முயற்சி செய்வார்கள்,ஆனால் கோவா முடிவில் மறு பரிசீலனை இருக்காது..அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..

அத்வானி கடைசிக் காலத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, தனிமைப் படுத்தப் பட்டு விட்டார் என்றே தெரிகிறது..

Saturday, April 27, 2013

காந்தி எனும் மனிதர் - பிடிவாதம்



காந்தி எனும் மனிதர் - பிடிவாதம்




காந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..

ஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.

இன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது !

இந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..

1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.

2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் !

நன்றி.




| * | அறிவன்#11802717200764379909 | * |said...
காந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..

ஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.

இன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது !

இந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..

1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.

2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் !

நன்றி.

Saturday, January 19, 2013

ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்


ஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்




ஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண்டும். இது தனது நண்பர்களையோ அல்லது வேண்டயவர்களையோ விமர்சிக்கும் வேளையிலும் பொருந்தும்.

நீங்கள் நடிகர் சிவகுமாருடன் பழக்கம் உள்ள, நண்பர் என்று சொல்லத்தக்க அளவில் உள்ளவர் என்பது உங்கள் பல பதிவுகளில் தெரிகிறது.உங்களது நட்பைப் பாராட்டும் நேரத்தில் ஒரு விமர்சகராக நீங்கள் சாய்கிறீர்கள் என்பதை சுட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர் சிவகுமார் ஒரு பன்முகத் திறமையாளர்;ஆனால் எந்த ஒரு துறையிலும் ஒரு சாதனையாளர் அல்ல.

நடிகர் என்று எடைபோட்டால் அவரை விட சந்திரபாபு கூடத் திறமையானவர்; ஒரு பேச்சாளர் என்று எடுத்தால் அறிவொளியின் அருகில் கூட வரமாட்டார்; ஒவியராக நீங்கள் கோபுலுவுக்கு அருகில் சிவகுமாரைக் கொண்டு செல்வது, எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.இதில் சிவகுமாரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறாயா என்று என்னைக் கேட்கிறீர்கள்..நீங்கள் கோபுலுவின் ஓவியங்களைக் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

சிவகுமாரின் ஓவியங்களை கோட்டோவிய வடிவங்களில்,நுண்மைச் சிறப்பு வகையில் சேர்க்கலாம்;கோபுலு நீர்நிறம் மற்றும் எண்ணெய்வண்ண ஓவியங்களில்-வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில்- நுண்மை வகையில் உச்சங்களைத் தொட்டவர்.(அவரது ஓவியங்களை பலவற்றைப் பார்க்க நேரிடா விட்டாலும் நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு கோபுலுவைப் பற்றி எழுதிய கட்டுரையைத் தேடி வாசியுங்கள்!). சிவகுமார் ஒரு நல்ல ஓவியர், அவ்வளவே.

ஒரு நல்ல தந்தை;ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த நடிகர் என்பதெல்லாம் 'சாதனை' என்ற வட்டத்தில் அவரைச் சேர்ப்பதற்குப் பொருத்தமானவை அல்ல.

சிவகுமாரை எனக்கும் பிடிக்கும்; ஒரு 'பேக்கேஜ்' ஆக அவர் ஒரு வியப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர். ஆனால் நிச்சயம் சாதனையாளர் அல்ல.

இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எனினும் சொல்லாமலிருக்க முடியவில்லை.

விமர்சகராக அறியப்பட முடிவுசெய்தால் அதில் உச்ச பட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது கொள்கைப்பாடு காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. நன்றி.


***********

அடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..எண் கவனகம் திருக்குறள் முனுசாமி பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா?

சிவகுமாருக்கு நினைவாற்றலுக்காக பத்ம விருது கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொடுப்பது?!

உங்களுடைய பதில்கள் சிறுபிள்ளை வாதம் போலிருக்கிறது ! 
:)

**********

முனுசாமி என்று தவறாக எழுதிவிட்டேன்; அவரது பெயர் இராமையா என்று நினைக்கிறேன்.

******


||சிலருக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் புதிதாக எதையாவது படிக்கலாம். அல்லது புதிதாக எதையாவது எழுதலாம்'என்று அடிக்கடி சுஜாதா சொல்லுவார். அது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது.||

:) மிகச் சிறந்த தப்பித்தல் மனோபாவம்..

எனக்கும் உங்களது விமர்சனப் பதிவுகளைப் பொறுத்த வரை நீங்கள் சொல்லியிருக்கும் மேற்கண்ட கருத்து சரியானதாகவே தோன்றுகிறது..நன்றி.




தேட...