Sunday, December 23, 2007

மலர் மாலை*

மலர் மாலை*

//
பலரின் பார்வையில் சில சந்தர்ப்பங்களின் பிரியமான உரையாடல்கள் எப்போது எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே காலம் கடந்த பிறகே அறிந்து கொள்ளும் ஞான சூன்யமாகவே இருந்திருக்கிறேன்.
//
இவ்வகையில் பெண்களுக்கு இயல்பான நுண்ணுணர்வு உண்டு.வேண்டாத வேளைகளில் மொழி படம் போல மூளைக்குள் விளக்கெரியும்,எனவே எப்போதும் போல பிரியமாய் இருங்கள்.

//
இந்த ஒருவார காலம் அளித்த படிப்பினைகள், உணர்வுப்பிழம்பான மனமாற்றங்கள் காலத்துக்கும் போதும்
//
"பாதகஞ் செய்பவரைக் கண்டால்,
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா-
மோதி மிதித்து விடு பாப்பா-
அவர்முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..."


இறுதியாக ஒன்று...

உலகில் நம்மிடம் இருக்கும் பொருளைக் பிறருக்குக் கொடுக்க,கொடுக்க,நம்மிடம் அப்பொருள் வேகவேகமாக வளரும்,அது என்ன தெரியுமா...அன்புதான் !!!!!!!

"உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர் "

No comments:

தேட...