Tuesday, December 11, 2007

கோவில் ஒன்று சந்தேகங்கள் இரண்டு

கோவில் ஒன்று சந்தேகங்கள் இரண்டு
மற்ற உங்கள் செய்திகள் சுவாரசியமாய் இருந்தாலும்,இம்மையில் நன்மை தருவார் கோவில் என் கண்களில் சிக்காமல் போனது வியப்பு,இத்தனைக்கும் முருகன் இட்லிக்கடையில் பலமுறை வெளுத்து வாங்கியிருக்கிறேன்;என் மனைவி(அவளின்)அம்மா வீடே சுகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்,அவளை ஒருமுறை இக்கோவிலுக்கு அழைத்துப் போகிறேன்,உங்கள் trick பலிக்கிறதாவெனப் பார்க்கலாம்...
Jokes Apart,சங்கப் பாடல்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் இறையனார் என்ற பெயர் பலமுறை வருகிறது,எல்லாமே இறைவனதாக இருக்க சாத்தியமில்லை-ஔவையார் போல-எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட இறையனார்கள் இருந்திருப்பார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது,கொங்குதேர் வாழ்க்கை-இறைவனாலேயே பாடப்பட்டது என் எண்ணினாலும் கூட !

No comments:

தேட...