Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!



இலவசம்,மிகச் சரியான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.

அண்ணாவின் ஒரே ஒரு பங்களிப்பு என்று எதைச் சொல்லலாம் என்றால்,வடமொழி கலந்து பேசும் தமிழ்தான் தமிழ்ப் பாண்டிதர்களுக்கு அழகு என்று இருந்த ஒரு காலத்தில்,ஆற்றொழுக்கான தனித் தமிழே நல்ல தமிழ் என்ற பாதைக்கு வலு சேர்த்தது.
மகாகவி என நாம் போற்றும் பாரதியும் உரைநடை எழுதும் போது மணிப்பிரவாளம் எனச் சொல்லப்பட்ட வடமொழி கலந்தே எழுதினார்;அவ்வாறு எழுதுவதே கற்றறிந்தவர் எழுதும் தமிழ் எனக் கருதப்பட்டது.
அக்கருத்தை வலுப்படுத்தியவர்கள் ஆரியர்கள் எனச் சொல்லப்படும் பிராமணர்கள்.ஆயினும் அக்காலத்திலேயே நேர்பட,தமிழின் தொன்மையும் அழகும் செறிவும் தெரிந்த பிராமண சமூகத்தவர்களும் இருந்தார்கள்,பரிதிமாற்கலைஞர் என தன் பெயரை தூய தமிழில் மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி அவர்களில் ஒருவர்.மேலும் மறைமலையடிகள்(வேதாசலம் எனற பெயரை மாற்றிக் கொண்டார்) மற்றும் பாவாணர் போன்றோர் அண்ணாவின் காலத்துக்கு முன்பே தனிதமிழ்க் கொடியை உயரப் பிடித்து விட்டார்கள்.
அண்ணா அப்பேச்சை நாடகங்களிலும் புகுத்தினார்,தமிழர்களில் சாபக்கேடு என்னவெனில்,பொழுதுபோக்கு ஊடகங்களுக்கு அவற்றின் தகுதிக்கு அதிகமான பதிப்பு கொடுப்பது.இதன் காரணமாக அண்ணாவின் தமிழும்,மேடைப் பேச்சும் ரசிக்கப்பட்ட அளவுக்கு அவர் அரசியல் தலைவராகவும் உருவகம் செய்து ரசிக்கப்பட்டார்,போற்றப்பட்டார்..
இந்த உந்துவிசைக்கு மேலும் வேகம் சேர்க்க,பெரியாரின் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களை-விதவைகள் திருமணம்,பால்ய விவாகத்தை தடுத்தல்,சமூகத்தில் பெண்களுக்கு உரிய உரிமைகள்-தங்கள் இயக்கக் கொள்கைகளாக வரித்துக் கொண்டார்கள்.
இவை ஒரு சமூக ஆர்வலரின் ஆர்வங்களே ஒழிய சுதந்திரம் அடைந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு நாட்டை வழிநடத்த தேவையான சிறந்த தகுதிகள் இல்லை.
துரதிருஷ்டவசமாக பெருவாரியான மக்கள் அண்ணாவின் மேல் இந்த உருவகத்தையும் அணிந்தே பார்த்தார்கள்;ஒரு மீட்பர் என்ற அளவுக்கு உயர்த்தினார்கள்.
அண்ணாவுக்காவது ஓரளவுக்கு,இந்த மக்களுக்கும்,நாட்டுக்கும் ஏதாவது முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையாவது இருந்தது.
இந்த நேரத்தில் அண்ணா நோய்வாய்ப்பட,பின்னர் மறைய(மறையவைக்கப்பட்டார் எனவும் வதந்தி உண்டு !) முக வெற்றிகரமாக அவருக்கேயுரிய cunningness(இதற்கான சரியான ஒரு தமிழ்ச் சொல்லை முன்பொருமுறை உபயோகித்தபோது கடும் கண்டனங்கள் எழுந்தன,எனவே ஆங்கில வார்த்தையையே வைக்கிறேன்!) உடன் கட்சித் தலைமையையும்,ஆட்சியையும் பிடித்தார்.
அவரின் நல்ல நேரமோ,தமிழகத்தின் போதாத நேரமோ,அவ்வகையான மேடைப்பேச்சு ஒன்றே அரசியல் வாதிக்கான தகுதி என்றாகிப் போனது.
அவர்களில் செயல்பாடு சமூகத்தில்,நாட்டில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தது என்ற வகையில் அளவீடுகளே இல்லாமல் போனது !!!!!!

(இப்போதும் பொங்கத் தயாராக இருக்கும் அடிப்பொடிகள்,சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஒரு அரசின் தலைவன் என்ன செய்யமுடியும் என்ற விதயங்களை படித்து அறிந்து கொண்டு பின்னர் என்னை விமர்சிக்க வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்)

சுப்பையா அவர்களின் பதிவைப் பார்த்தவுடனேயே இதை எல்லாம் எழுதத் தோன்றியது;ஆனால் பதிவுலக அடிப்பொடிகள் பலர் உடன் வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள்,எனவே விட்டுவிட்டேன் !

No comments:

தேட...