Sunday, March 23, 2008

ஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)

ஒருவரின் கர்வம் அடக்க அவர் மனைவியை மயக்கு (தில்லை நடராஜ அவதார மகிமை)

ஒரு சிறிய கதை சொல்கிறேன்,இந்தக் கதைக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை !!!!!!!!


அந்த ஆசிரியர் சோதனைகளை செய்து காண்பிப்பது மூலம் மாணவ்ர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்.
குடியின் தீமையை விளக்க எண்ணி ஒரு பாட்டில் சாராயமும்,ஒரு புட்டியில் தண்ணிரில் விளையடிக் கொண்டிருக்கும் பூச்சியையும் கொண்டு வந்தார்.
வகுப்புக்கு வந்து,'மாணவர்களே,பாருங்கள்,இந்தப் பூச்சி மகிழ்வாக விளையாடிக் கொண்டிருக்கிறது,இதை இப்போது இந்தப் புட்டியில் இருக்கும் சாராயப் புட்டியில் போடப் போகிறேன்,என்ன நடக்கிறது என்று பாருங்கள்' என்று சொல்லி,தண்ணிரில் இருந்த பூச்சியை எடுத்து,சாராயப் போத்தலில் போட்டார்.
மாணவர்கள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாராயப் போத்தலில் வீழ்ந்த பூச்சி சில நிமிடங்கள் பட படவெனத் துடித்தது,பின்னர் செத்து மிதந்தது.
ஆசிரியர் 'பாருங்கள்,சாராயம் சேர்வதால்,உடல்,உயிர் என்னவாகிறது தெரிகிறதா?' என ஒரு கருத்தைச் சொன்ன திருப்தியில்,'மாணவர்களே,என்ன தெரிந்து கொண்டீர்கள்,ரத்தினம்,நீ சொல் பார்க்கலாம்' என்றார்.
அந்த மாணவன் எழுந்து சொன்னான்,'சாராயம் குடித்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் அழிந்து விடும் ஐயா,ஆகவே எல்லோரும் சாராயம் குடிக்க வேண்டும் !!!!!.

No comments:

தேட...