Tuesday, January 1, 2008

சென்னையிலிருந்து தாரா - 1

சென்னையிலிருந்து தாரா - 1

வவ்வால்,
வெளிநாடு சென்று திரும்புகிற சிலர் நம்நாட்டில் பார்க்கின்ற நிகழ்வுகள் அவலமாகத்தான் தெரியும்.காரணம் வெளிநாடு செல்லும் முன்னர் நமது பார்வைகள்-சமூகம்,அரசியல்,ஆட்சி,சாலை,கழிப்பறை- ஆகிய அனைத்தையும் பற்றி நமது நாட்டு ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கருத்துடனோ (நமது அரசியல்)அல்லது கருத்தே இல்லாமலோதான் (நமது சாலைகள்,கழிப்பிடங்கள்) இருக்கிறோம்.
ஆனால் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பும் போதுதான் நம் நாட்டின் அவலநிலை முகத்தில் அறைகிறது.
அந்த அவலநிலை மனிதர்கள்,அமைப்புகள் மற்றும் அரசின் மெத்தனத்தையும்,taken for granted தனத்தையும் மிகு வெளிப்படையாக அறிவிப்பதால் கிடைக்கும் ஆயாசமே அவர்களில் வெளிப்பாடுகள்.
இதற்காக this is sucking india,i don't like it you know என்ற பீலா விடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் நீங்கள் சொல்லும் சீன் காட்டும் பேர்வழிகள்.
என்னைப் போன்ற பலர்,நம் நாட்டிலும் சேவைகள்,அமைப்புகள் சீராக செயல்பட வாய்ப்பு இருக்கும் போதும் , அவ்வாறு செயல்பட விரும்பாத தன்மையையும்,அதைப் பற்றிய எந்த சுரணையும் இல்லாத ஒரு அரசும்-இங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் எல்லா அரசுளையும் சேர்த்துதான் சொல்கிறேன் - இருப்பதைக் காணும் வேதனைதான் அது.
ஒரு சாதாரண எடுத்துக் காட்டு-சென்னை விமான நிலைய டாக்ஸிகளின் நிலை மற்றும் விமான நிலைய டாக்ஸி குழுமம் செய்யும் அராஜகம்.
விமானநிலையத்திற்குள் தனியார் கால் டாக்ஸிகள் வந்து சேவை செய்யக்கூடாது என அவர்கள் செய்யும் அடாவடித்தனம்,மீறி வரும் தனியார் ஓட்டுனர்களை அவமதிக்கும்,நிந்திக்கும் கீழ்த்தர வசவுகள்,பயணிகள் ஏதேனும் குறுக்கிட்டுச் சொன்னால் அவர்களுக்கும் சேர்த்து நடைபெறும் அர்ச்சனைகள்....சரி விமானநிலைய குழும வண்டிகளையே அமர்த்திக் கொள்ளலாமெனில்,கிட்டத்திட்ட அமரர் ஊர்தி நிலையில்,இருக்கைகள் கிழிந்து,முடை நாற்றமாடித்துக் கொண்டு இருக்கும் அவை இருக்கும் நிலை,இந்த நாடகத்தை ஓரக் கண்ணால் கண்டும் காணாமல் இருக்கும் காவல் துறை..இவையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டின் நாடாண்மையைக்-governance- கண்டு எழும் கோபமே அந்த வெளிப்பாடு.
பொருளாதாரத்தில்,பரப்பளவில்,உலகின் பார்வையில் இந்தியாவை விடக் கீழ்நிலையில் இருக்கும் நாடுகளே,நம்மை விட மேலான சேவை,கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் போது,இந்தியாவில் அது முடியவில்லை என்பது,நிச்சயம் ஒரு குறைபாடுதான்.
எனது இந்த முதல் பதிவே மேற்சொன்ன நோக்கில் அமைந்த பதிவுதான்.
http://sangappalagai.blogspot.com/2007/08/blog-post_12.html

No comments:

தேட...