Monday, October 15, 2007

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?


இலக்குவன் கொல்வதாக செய்தி இல்லை.ஒட்டக் கூத்தர் எழுதியதாக உத்தரகாண்டம் ஒன்று உள்ளது.கம்பகாவியம் யுத்தகாண்டத்துடன் முடிகிறது.இராமன் அரசு செய்கிறான் என்பதோடும்,இராம காதையை சொல்பவர்கள்,கேட்பவர்கள் அனைவரும் நமனையும் வெல்லும் நற்கதி அடைவார்கள் என்பதோடு முடிகிறது.
பின்னர் நடைபெறும் செயல்கள் உத்தர காண்டத்தில் விரிகின்றன.சீதை காட்டுக்கு அனுப்பப்படுவது(இராமனால்),வஷிச்டர் கோபித்து சீதைக்கு துணையாக தன் மனைவியுடன் காட்டுக்கு செல்வது,லவ,குசர்கள் பிறப்பு,லவ குசர்களுக்கு ராமகாதையை வஷிச்டர் சொல்லிக் கொடுப்பது,அவர்கள் அதை அயோத்திலேயே சென்று அங்காங்கு மக்களுக்குச் சொல்வது,இலக்குவனும் இராமனை நிந்திப்பது,இருவரும் பிரிவது,இராமன் தன்னிரக்கத்தால் சரயு நதியில் மூழ்கி மாள்வது....எனச் செல்கிறது.
ஆனால் இக்கதையாக்கம் ஒட்டக் கூத்தரின் கவி இயலாமையையும்,கருத்து வெற்றிடத்தையுமே வெளிப்படுத்துவதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவார்கள்.
கம்பன் ஏன் இராமகாதையை பாடுபொருளாக எடுத்துக் கொண்டான்,ஏன் 6 காண்டங்களுடன்(யுத்தகாண்டம் ஈராக) நிறுத்திக் கொண்டான்,இராம காதையின் அரங்கேற்றம் ஆகியவை தனிப் பதிவு போடும் அளவுக்கு நீண்ட மற்றும் சுவையான செய்திகள்....
ஆக இலக்குவன் இராமனைக் கொல்லவில்லை என்பதுதான் செய்தி,இலக்குவன் நிந்தனையால் நொந்த இராமன்,தன் முடிவைத் தானே தேடிக் கொள்கிறான்..
*********************************************************************************
சர்வேசன்,
அக்னி பரீட்சையில் நீங்கள் சொல்லும் செய்தி,கம்பனில் யுத்தகாண்டத்தில்லேயே இருக்கிறது.இராவணன் மாண்ட பின் சீதை இராமனைப் பார்க்க வரும் போது இராமன் அவளை நிந்திக்க,அவள் தீப் பாய விரும்பி,இளையனை அக்னி மூட்டச் சொல்கிறாள்;இளையன் அக்னி வளர்க்க,சீதை தீப்பாய,அக்னிதேவன் சீதையின் கற்பின் வெம்மையினால் துயருற்று,சீதையை வெளிக் கொணர்ந்து,தன்னை(அக்னி) சீதையின் கற்பாம் வெம்மையிலிருந்து காக்குமாறு வேண்ட,கூட தயரதன் போன்றோரும்(ஆம்,தயரதன் வானுலகிலிருந்து வந்து சீதையை ஏற்று ஆட்சி புரிய வேண்டுகிறான் !) இராமன் சீதையை ஏற்று அயோத்தி திரும்ப ஆயத்தம் செய்கிறான்.
இந்தக் கட்டத்தில்தான் கம்பன் சீதைக்கு 'கற்பின் கனலி'-கற்பெனும் கனலால் அக்னியையே சுட்டவள்-எனும் அடைமொழி கொடுக்கிறான்.
நான் ஏற்கனவே சொன்ன சரயூவில் மூழ்கி மாள்வது-உத்தர காண்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்,இராம குமாரர்கள் லவ-குசர்கள் பிறந்த பின் நிகழ்வது..
வால்மீகத்தில் இந்த நிகழ்வுகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை..

No comments:

தேட...