Friday, October 12, 2007

பொன்னியின் செல்வனும் உடையாரும்

பொன்னியின் செல்வனும் உடையாரும்
பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பியல்புகள்:
-ஒரு அருமையான கதைக் கட்டு
-பாத்திர அறிமுகங்களில் ஒரு ஒழுங்கு,சீரான தன்மை
-மிகவும் அவசியம்மான திருப்பங்கள் இல்லாதபட்சத்தில்,கதை மாந்தர்களில் குணாதிசயம் மாறாத் தன்மை
-தெளிந்த நீரோடை போன்ற கதைப் போக்கு
-வரலாற்று நிகழ்வில் கூடியவரை கற்பனையைத் தவிர்த்தது(நந்தினி,ஆழ்வார்க்கடியான்,திருந்திய உத்தம சோழன்,பூங்குழலி பாத்திரங்கள் மட்டுமே கற்பனை என்றறிகிறேன்.
-அக்காலத் தமிழர் நிலையைப் பற்றிய தெளிந்த பார்வையை விரித்தது.
-காலத்தை வென்று நிற்கும் கல்கியின் நடை
இவை ஒன்றுமே உடையாரில் இல்லை !!!
பாலகுமாரனின் இயல்புக்கே உடைய தடுமாற்றங்கள் கதை நெடுகிலும் உள்ளன.
-கதை மாந்தர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி கதைப் போக்கில் மாறுவது
-தெளிவற்ற,படிப்பவற்கு ஆயாசம் தருகின்ற கூறியது கூறல் மிகுந்த குழப்ப நடை
-வரலாற்று சான்றுகள் பெரிதுமன்றி கதை தஞ்சையையே சுற்றி வருவது.(கல்கி பொ.செ. எழுதும் பொருட்டு ஈழம் போய் வந்தார்)
-ராஜராஜனுக்கும்,ராஜேந்திரனுக்கும் ஒயாப் பிணக்கு இருந்தது என சொல்ல முயலும் கருத்து
-எல்லா கதை மாந்தரும்,பா.குமாரனுக்கு விருப்ப subject ஆன, தேவரடியாரோ,விலைமாதரோடோ சம்பந்தப் பட்டிருப்பதுபோன்று பல குறைகள்.
ஒரே நிறை என்று சொல்லலாம் எனில் கதை சமூக நிகழ்வுகளையும் தழுவிச் செல்வது.
உண்மையில் தென்னாட்டு அரசர்களில் பெரிதும் உயர்ந்திருந்த இரு வேந்தர்கள் நரசிம்ம பல்லவனும்,ராஜேந்திர சோழனும் தான்.அதிலும் கடல் கடந்து சென்று தமிழக வீரமும் பண்பாடும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வ்ரை பரவியது ராஜேந்திரன் காலத்தில் தான்.அதற்கும் பெரிதும் கட்டமைப்பு வசதிகளை திறம்பட அமைத்தவன் ராஜராஜன்.
மற்றபடி பொ.செ. மலை என்றால் உடையார் மடு !!!!
பொ.செ.வனை நான் என்னுடைய 10 வயதிலும் ரசித்தேன்,20 வயதிலும் ரசித்தேன்,,இன்று 35 வயதிலும் ரசிக்கிறேன்.50 வயதிலும் கூட ரசிக்க முடியும்.

பாலகுமாரனின் எழுத்துக்கள் இன்னும் 30 வருடத்தில் எங்கிருக்கும் என எவரும் அறியார். கானமயிலாட கண்டிருந்த வான்கோழி...நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

No comments:

தேட...