Friday, October 12, 2007

வா வாத்யாரே ஸ்கூலாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்!

வா வாத்யாரே ஸ்கூலாண்ட நீ வராங்காட்டினா வுடமாட்டேன்!

செல்லா அவ்ர்களே,
இலதாய் என்பதன் அர்த்தம் அதுவல்ல என்று தோன்றுகிறது..
சிறிது உலகம்(பூமி) பற்றி யோசியுங்கள்,
பின்னர் சூரியக் குடும்பம் பற்றி..
பின்னர் பால்வெளி பற்றி..
பின்னும் பால்வெளிக்கப்பால்??????
அங்கு என்ன இருக்கிறது ? ஒன்றும் இலதாய்,இல்லாததாய் இருக்கிறது...
இலதாய் என்றால் எல்லாமாகவும்,எல்லாவற்றிற்கு அப்பாலும்.....தான்(கடவுளே) இல்லாமல் போவதல்ல.
அண்டப் பகுதியின் உண்டப்பெருக்கம்;அளப்பரும் காட்சி,வளப்பெரும் கருணை என்று மணிவாசகர் கூறுவதும் ஓரளவு இக்கருத்தே !
அனைத்திலும் மீறி கடவுளை எப்படித் தெரிந்து கொள்வது/எப்படிப் பார்ப்பது/எப்படி உணர்வது,நான் உணராதவற்றை ஏன் நம்பவேண்டும் என்று கேட்டாலும்,பதில்-'மரத்தை மறைத்தது மாமத யாணை;மரத்தில் மறைந்தது மாமத யாணை' தான் !(திருமூலன்)மரம்(சுயம்,சுயம்-'நான்' சார்ந்த செருக்கு) தெரியும் போது யாணை(கடவுள் தத்துவம்) மறைந்து விடுகிறது;யாணை தெரிகிற போது மரம் மறைந்து விடுகிறது.
மரம் வேண்டுபவர்கள் மரத்துடன் நிற்கலாம்,யாணை வேண்டுமெனில் மரத்தைப் பகுக்கலாம் !

No comments:

தேட...