Wednesday, October 17, 2007

கட்டபொம்முவும் உண்மையும்

கட்டபொம்முவும் உண்மையும்

ஸ்ரீதர் வெங்கட் சொல்வது மெத்தச் சரி.
மோகன் தாஸ்,வரலாற்றுச் செய்திகளை பதியும் உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது.
உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிடும் முக்கிய இரண்டு செய்திகள்:
1.கல்கி பொ.செல்வனில் வரலாற்றை திரித்துவிட்டார்.சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் வரலாற்றில் கல்கி எழுதியதெல்லாம் இல்லை...

உண்மை:கல்கி தெளிவாகவே சொல்லி விட்டார்,பொ.செ,முடிவுரையில்.எந்தெந்த பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள்(பூங்குழலி,சேந்தன் அமுதன்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி)என்று.இன்னும் சின்னப் பழுவேட்டரையர் கூட கற்பனைப் பாத்திரம் என்ற ஒரு கூறு உண்டு.பழுவேட்டரையர் சகோதரர் இருந்திருக்கிறார்கள்,ஆனால் ராஜராஜன் காலத்திலேயே இரு சகோதரர்கள் இருந்தார்களா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.கல்கியின் வெற்றி சாதனை முக்கிய சம்பவங்களில் 'கை' வைக்காமல்,கதையை விறுவிறுப்பு குன்றாமல் கொண்டு சென்றது.(பொ.செ.ஆரம்பமானவுடன் 35000 இருந்த கல்கி இதழ் விற்பனை 72000 ஆயிற்றாம்-கல்கி நினைவலைகள்-பகீரதன்).ஒரு சரித்திரக் கதையை,பெருமளவு ஆபாசக் குப்பைகளையோ,குருட்டுக் கற்பனைகளையோ சேர்க்காமல் கொண்டு சென்றது ஒரு நிச்சய சாதனை.
2.கட்டபொம்மு ஒரு கொள்ளைக்காரன்,அவனை பெரும் வீரனாகவும் தியாகியாவும் சித்தரித்துபடம் எடுத்து விட்டார்கள்.
உண்மை:ஆங்கிலேயர் இந்தியாவில் பல பகுதிகளில் எவ்விதம் தமது ஆளுகைக்குள் கோண்டு வந்தார்கள் என்பது ஒரு மேலாண்மை தத்துவ ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்க்க வேண்டிய ஒன்று.அவர்கள் எந்த இந்தியப் பகுதியையும் ஆரம்பத்தில் தமது படைகளைக் கொண்டு மிரட்டிக் கைப் பற்றி விட வில்லை;அது வெளிப்படையாக செய்ய இயலாத ஒன்றும் கூட.வியாபார ஸ்தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள்;ஏதேனும் இரு ராஜ்ஜியங்களுக்குள்(அப்போது இந்தியாவில் 550 இராஜ்ஜியங்கள் இருந்தன) பிணக்கு வரும் போது மத்தியஸ்தம் அல்லது ஒரு சாரர் உதவியாக பிரச்னைகளுக்குள் நுழைவார்கள்.அல்லது ஏதேனும் ஒரு சமஸ்தானத்திற்கு வாரிசு இல்லாதிருந்தால்,அதற்கு அருகாமை சம்ஸ்தான மன்னரை கொம்பு சீவி,ஆட்டத்தில் நுழைவது;பின்னர் படை உதவிக்கு,பாதுகாப்புக்கு பிரதியாக வருடாந்திர கப்பம் அல்லது நிலப்பகுதிகளை வளைப்பது.இதுதான் அவர்கள் முறை. கட்டபொம்மு விடயத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்;இந்த தலையீட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக் காரர்கள் அனுமதிக்கவில்லை. கட்டபொம்மன் முரண்டு பிடிக்கிறான் என்ற நிலையில் அவனை எவ்வளவுசீக்கிரம் ஒழிக்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களின் agenda பழுதுபடாமல் நடக்கும்.
ஆங்கிலேயருக்கு ஆப்படிக்கத்தான்,ஒரு யுத்த தந்திரமாக,அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த பாளையத்தின் நெற்களஞ்சியங்களுக்கு நெருப்பு வைத்தழிக்கிறான் கட்டபொம்மு.இதை சாக்காகக் கொண்டு,அவன் கொள்ளையடிக்கிறான்,நான் நீதி செய்கிறேன் பேர்வழி என்றுதான் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதை எடுத்துக் காட்டத்தான் வீ.பா.க.பொ.படத்திலும் ஒரு கட்டத்தில் தளவாயின் கொள்ளைச் சம்பவத்தை கடிந்து கொள்ளும் கட்டபொம்மு'உங்கள் செயல்,எதிர்காலச் சமூகம் என்னை கொள்ளையன் என்று பழி சொல்ல வழி வகுத்துவிட்டது' என்று ஒரு வசனத்தில் வேதனைப் படுவதாகக் காட்டுவார்கள்...
விடுதலைப் போரில் தமிழகம்-இரு தொகுதிகளாக ம.பொ.சி எழுதிய நூலைப் படித்துப் பாருங்கள் !!!!

No comments:

தேட...