Tuesday, February 26, 2008

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!
வவ்வால்,
இது ஒரு நல்ல கோணத்தில் அமைந்த பதிவு.
ஆயினும் கட்டபொம்முவும்,திப்புவும் தென்னாட்டில் ஆங்கிலேயர்களுக்கு சரியான எதிர்ப்பைக் காட்டினார்கள் எனபது உண்மை.
மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.
விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!
***********************
அறிவன்,
நன்றி!

//மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.//

கட்டபொம்மு வீரம் குறித்து தரக்குறைவு என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த தகவல்களிலும் சில கருத்துக்கள் உள்ளது. ஏன் எனில் அக்கால சூழல் அப்படி, எனவே சூழ் நிலைக்கைதி என்ற நிலையினால் அடங்கி இருக்கவும் நேரிடும்.

ஆனாலும் கட்டபொம்மு விடுதலைப்போராட்டத்தில் ஒரு முன்னோடி என்பதை யாரும் மறைக்கவோ ,மறுக்கவோ முடியாது.

உதாரணமாக கட்டபொம்மு வரிக்கொடுக்காத சுதந்திர பாளையக்காரனாக இருந்ததில்லை, அதற்கு முன்னரும் ஆர்க்காட் நவாப்புக்கு வரிக்கட்டிக்கொண்டு இருந்தவர்கள் தான்.பின்னர் வெள்ளையர்கள், வரித்தொகை அதிகம் கேட்கவும் தான் எதிர்ப்பு கிளம்பியது. இல்லை எனில் கட்ட பொம்முவும் இணக்கமாகவே இருந்திருக்க கூடும்.

ஆனால் இந்திய வரலாற்றில் உள்ள பிரச்சினை என்னவெனில் சரியாக ஆவணப்படுத்தாமையே.

//விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!//

இந்த புத்தகத்தை சமீபத்தில் நூலகத்தில் பார்த்தேன், பிறகு படிக்கணும் என்று குறித்துவைத்துள்ளேன். இந்தப்பதிவு போட்டு ஒரு வருடம் மேல் இருக்கும், அப்போது அறிந்ததை வைத்துப்போட்டது.இப்போது பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக பதிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

***************************
மோகந்தாஸின் இந்த பதிவில் என்னுடைய பதிலையும் பாருங்கள்.

http://imohandoss.blogspot.com/2005/10/blog-post_17.html

No comments:

தேட...