Wednesday, September 17, 2008

தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை

தகப்பனுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை உண்டாக்க இருந்த சீதை

அறிவன்#11802717200764379909 said...
நண்பரே..உங்கள் வாதம் சரியானதுதானா?

அக்காலத் தமிழகம் கற்புமனம்,களவுமனம் இரண்டும் நிகழ்ந்த களம்.

சீதை ராமனைப் பார்க்கிறாள்;விரும்புகிறாள்..

வில் ஒடிக்கப்படுகிறது.

வில் ஒடித்தவன் யாரென்று நீலமாலை கூறுகிறாள்,கோமுனி உடன் வரு கொண்டல்' என...

சீதையும் ‘தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,ஆம் அவனே கொல்' என் ஐயம் நீங்கினாள்..

பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.

யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..

ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.

காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?

மனித மனத்தின்,எண்ணத்தின் வீச்சு அது;எண்ணுகின்ற எண்ணம் எல்லாம் செயல்படுத்தி விடுகிறோமா?

அதை பண்பாட்டுடன் முடிச்சிடுவது சற்று அதிகமோ எனத் தோன்றுகிறது.

ராமனின் நிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை;அவனும் மருகுகிறான்..

ஆனாலும் சமாதானமடைகிறான்,எப்படி?

நம் மனதில் தோன்றும் எண்ணம் கெட்டதாக இருக்க முடியாது என..ஆகும் நல்வழி,அல்வழி ஆகுமோ என் மனம் ...பைந்தொடி கன்னியே ஆகும்..எனவும் தனக்கே நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறான்.எனவே இருவர் நிலையும் மருகும் நிலைதானே??

******************************************************************************

அறிவன் சார்,

ராகவன் அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.

நான் இலக்கியம் தொடர்பான பதிவுகள் போடுவது பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து அல்ல; முடிவுக்கு வருவதற்காக.

நீங்கள், குமரன், ராகவன், ரவிஷங்கர் போன்று சிலர் இருக்கிறீர்கள், திருத்த, கூடுதல் தகவல் சொல்ல, புதிய கோணம் காட்ட என்று.

//பின்னர் 'சொல்லிய குறியின்,அத் தோன்றலே அவன்,அல்லனேல் இறப்பன்'என்று அகத்துள் உன்னினள்.

யாரிடமும் சொன்னாளில்லை,எண்ணுகிறாள்,அவ்வளவே..

ஒரு கிரிட்டிகல்'ஆன நிலையில் இருக்கிறோம்,ஐயோ இது மட்டும் நடக்க வில்லையெனில் நான் செத்தே போய் விடுவேன் என நினைக்கிறோம்.

காரியம் நடந்தால் மகிழ்ச்சி,நடக்காமல் போனால் செத்தா போய்விடுகிறோம்?//

இது எனக்குப் புதிய கோணமாகப் படுகிறது. நன்றி.

No comments:

தேட...