Sunday, October 28, 2012

இசையறியும் பறவை


இசையறியும் பறவை




[[ வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.]]

இல்லை.
இராம காதை வால்மீகியால் எழுதப்பட்டு ஏற்கனவே புகழ் பெற்ற ஒன்று.

கம்பன் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகியின் இராமாயணம் நாடெங்கும் படிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஒன்று;ஒரு மாபெரும் காவியம் இயற்ற வேண்டும் என்ற எண்ணதில்தான் கம்பன் இராமாவதாரத்தை எழுதப் புகுந்தான்.

குலோத்துங்கள் உதவி செய்தாலும், ஒட்டக் கூத்தர் போன்ற அரன்மனைப் புலவர்களின் இடையூறு வேறு அவனைப் படுத்தியது.

இந்த நிலையில், பின் வரக் கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காவியத்தை எழுதப் புகுந்த கம்பன் இராமனின் கதையை எடுத்துக் கொண்டதும், அதற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதும் சிந்தனைக்குரியது.

அவையடக்கத்திற்காக கம்பன் மேற்கண்ட பாடல்களை எழுதியிருந்தாலும், கம்பனின் நோக்கம் வால்மீகி எழுதிய இராமனின் வாழ்க்கைக் கதையை எழுதுவது மட்டுமல்ல.

தமிழ்ச் சமூகத்திற்கு ஒப்பற்ற ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் காவியத்தின் ஊடாகத் தரும் ஒரு பெரும் பொறுப்பை ஏற்கொண்டே கம்பன் காவியத்தைத் துவங்கியிருக்க வேண்டும்.

சட்டம் பயில்பவர்களுக்கு எளிதில் புரியும் ஒரு தத்துவம் -இன்ப்ளிகேஷன் பிஹைன்ட் த லா- என்ற ஒன்று. ஒரு சட்ட விதியில் இரு சாரார் மல்லுக் கட்டும் போது, நீதி மன்றங்கள் சட்டம் சொல்லும் நேரடிப் பொருளைத் தாண்டி, சட்டம் இயற்றப்பட்ட நோக்கம்,தத்துவம் என்ற தளங்களுக்குள் செல்கிறது.

அதைப் போலவே கம்பனின் காவியத்திற்கும் ஒரு நோக்கம், ஹிட்டன் அஜன்டா இருக்கிறது.

தமிழர்களின் வாழ்வு நெறியைச் செம்மையாக்கும் பொருட்டு,கொல்லாமை,பிறன்மனை விழையாமை, தீயன பொறுக்காமை(தீயன பொறுத்தி நீ-வாலி வதைப் படலம்), இரு மாதரை சிந்தையாலும் தொடாமை( இந்த இப் பிறப்பில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய்-சுந்தர காண்டத்தின் சீதை, அனுமனிடம்), ஒரு அண்ணன், ஒரு மகன், ஒரு சீடன், ஒரு அரசன் என அனைத்து வாழ்வின் நியதிகளையும், ஒரு மனிதனாக இருந்து இராமன் மற்றும் பல பாத்திரங்கள் வாயிலாக விளக்கிச் செல்கிறான் கம்பன்.

கம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய!!!

(கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட்டு கம்பனைத் தொடருங்கள்)

:))

[[குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன்]]

இதிலும் அரசனான குலோத்துங்கள் உங்களைப் பாடாமல், சடையப்பனைப் பாடல்களிள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன் என்று அரசனிடமும், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறைதான் உங்களைச் சொல்லியிருக்கிறான் கம்பன்,நீங்கள் செய்த உதவிகளெத்தனை, அரசனை விட கம்பனுக்கு புரவலாக இருந்து அவனை ஆதரித்த உங்களை நூறு பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டிருக்க வேண்டாமா என்ற சடையப்பரிடமும் ஏற்றி விட்டதாகக் கூறும் செவிவழிக் கதைகள் உண்டு! கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் ! என்றிருந்ததாம்.
:))

No comments:

தேட...