Sunday, January 24, 2010

"Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?"

"Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?"

அறிவன்#11802717200764379909 said...

{5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
}
திரு.சுப்பையா,மேலும் சில கூர்மைப்புத்தலுக்காக சில வார்த்தைகள்..

நவாம்சம் ராசியின் மேக்னிஃபைடு வெர்ஷன் என்னும் போது ராசியின் லக்னம் எந்த நவாம்ச வீட்டின் பாதிப்பில் இருக்கிறது என்பதை விளக்குவதுதானே நவாம்ச லக்னம்?
நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றால் நவாம்சத்தில் அமைந்த கிரகங்களின் பாவ நிலையும் பார்க்கப்படாதல்லவா?அவற்றின் வீட்டின் நிலை மட்டம் தானே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லையல்லவா?

காட்டாக குரு 10 ல் ராசியில் இருக்கும் போது அம்சத்தில் 3 ல் இருந்தால்,3 ம் இடம் என்ற பாவ நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையென்றால் இந்த 3'ம் இடம் என்ற பாவ நிலை'க் கேள்வி வராதல்லவா? just குரு அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை மட்டும்தான் வைத்து பலன் பார்ப்போம்.

இது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.
ராமன் ஸ்கூல் சிந்தனையும் அப்போக்கில் இல்லை என்றுதான் தோன்றுகிறது;மாற்றுக் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.

Monday, January 25, 2010 8:17:56 AM

No comments:

தேட...