Monday, April 30, 2012

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?


காந்தியைப் புனிதராகவோ மனிதரோகவோ காட்டுகிறதோ இல்லையோ இம்மாதிரிக் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் ஒளிவட்டம் என்றே தோன்றுகிறது..
:)
எதிலும் நேர்படப் பேசும் பத்ரி இதில் வீழ்ந்தது வருந்தத் தக்கது.
காந்தி ஒரு தனிமனிதராக மிக உயர்ந்தவராகத்தான் இருந்தார்;வாழ்ந்தார்..
எந்தத் தனிமனிதனுக்கும் தன் தவறுகளை உணரவோ பொதுவில் வைத்து மன்னிப்பு வேண்டவோ முடியும் அளவுக்கு இலகுவானதும் மேன்மையானதுமான மனம் இருந்ததில்லை;எந்தத் தனிமனிதனுக்கும் பரந்து பட்ட தனது மக்களுக்காக அவர்கள் நலனை முன்வைத்துப் பல சோதனை முறைப் போராட்டங்களை முன்னெடுக்கத் தோன்றியதில்லை..
அவரது குறைபாடு அவரது போராட்டமுறை தவிர மற்ற முறைகளின் புனிதம் பற்றியும் நோக்கம் பற்றியும் அவருக்கு இருந்த உள்ளார்ந்த கேள்வி எழுப்புதலும்,நம்பிக்கையின்மையும் அவர்களை முற்றாக நிராகரிக்கும் அளவுக்கு-இது அவர்களின் வாழ்வை முடிக்கும் என்ற நிலையிலும்-அவரை செலுத்தியது என்பதும்தான்..இதிலும் தோற்றதாகத் தோன்றுவது காந்தி என்ற தேசத்தலைவர்தான்..
ஒரு தனிமனிதராக அவர் தன்னைச் சுத்தி செய்து கொண்டேயிருந்தார் என்பதும் மகாமனிதனாக மாறும் தொடர்செயல்பாடே வாழ்வு என்ற நினைவிலும் வாழ்ந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்


மாநிலங்கள் அவையில் தெண்டுல்கர்


பத்ரி,
தெந்துல்கர் ஏன் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதை விளக்கும் எதிர்மறைச் சான்றுகளைத் தரும் வாதங்களாலேயே இந்தப் பதிவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதாவது சுருக்கமாக சால்ஜாப்பு சொல்வது என்று சொல்வார்களே அதைப்போல...

தெந்துல்கர் கிரிக்கெட் பற்றிய சர்ச்சைக்குரிய விதயங்களில் கூட தனது கருத்தைத் தெளிவுறப் பல சமயங்களில் தெரிவித்ததில்லை;இந்நிலையில் மாநிலங்களைவையில் நாட்டின் பல முக்கியப் பிரச்னை தொடர்பான விதயங்களில் அவருக்குக் கருத்து இருக்கிறதா என்பதே தெரியாத நிலையில் அவர் என்ன பொது நன்மைக்கு என்ன சாதித்து விட்டார் என்பதற்கு இந்தப் பதவி?

இது காங்கிரஸ் கட்சியின் துஷ்பிரயோகம் என்றும்,தெந்துல்கர் நேர்மையாக இதை மறுத்திருக்க வேண்டும் என்பதும்தான நியாயமானது..

தவிர சோவின் நியமனத்தையும் தெந்துல்கரின் நியமனத்தையும் ஒப்பிடுவது குழந்தைத் தனமானது;சோ 50 களில் இருந்து நாட்டின் எல்லா முக்கியப் பிரச்னைகளையும் ஒட்டியோ வெட்டியோ அலசும் திறமையும் ஆலோசனை சொல்லும் தகுதியும் படைத்தவர்..
உங்களை எடுத்துக் கொண்டால் கூட முனுசாமி முனிசிபாலிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட,சரியோ தவறோ அதைப் பற்றிய ஒட்டியோ வெட்டியோ ஒரு கருத்தைத் தெரிவித்து அதை டிஃபென்ட் செய்யும் திறன் பெற்றும் அதை கம்யூனிகேட் செய்யவும் செய்கிறீர்கள்..
தெந்துல்கர் நியமனத்திற்குப் பதில் உங்களை நியமிப்பதே கூட எனக்கு பெட்டர் சாய்ஸாகத்தான் தெரிகிறது. :)

தெந்துல்கர் எனக்கும் பிடிக்கும்தான்...ஆனால் இது ஓவர் என்பது வெள்ளிடை மலை.
ReplyDelete

Replies

  1. சோவையும் தெண்டுல்கரையும் நான் ஒப்பிடவில்லை. சோவை நான் மேற்கோள் காட்டியது நியமன உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கவே. அதாவது தெண்டுல்கர் போய் என்ன பேசுவார் என்று சிலர் கேட்பதற்கான பதிலாக. பிறர் பேச அதிக நேரம். தெண்டுல்கரே ஆனாலும், நியமன உறுப்பினர் பேச மிகக் குறைவான நேரம்தான்.

    பின் இவர்கள் ஏன்தான் நியமிக்கப்படுகிறார்கள்? ஏதோ காரணத்தால் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், இது மிகவும் முக்கியம் என்று நினைத்துள்ளனர். இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அரசியல், பொருளாதார, சமூகக் கருத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை. கலை, இலக்கியம், இதழியல் போன்ற துறைகளில் விற்பன்னர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்துள்ளனர். அந்தவகையில், தெண்டுல்கரைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை. (விளையாட்டெல்லாம் ஒரு கலையா என்று கேட்டால் நான் அப்பீட்!)

    அடுத்து, காங்கிரஸ் இந்த நியமனத்தை ஏதோ ஒருவகையில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டது என்பது பற்றி. அனைத்து அரசியல் கட்சிகளும் எல்லா நிகழ்வுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவையே. இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.

    இந்தத் தேர்வு எந்தவிதத்திலும் ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களும் கண்ணியமானவர்களே.

    மக்கள் சிலருக்கு காங்கிரஸ்மீதுள்ள வெறுப்புதான் அவர்களை இப்படிப் பேச வைத்துள்ளது. அதற்காக தெண்டுல்கரை ஏன் காய்வானேன்? வரும் தேர்தலில் காங்கிரஸின் சிண்டைப் பிடித்துத் தூக்கி எறிவோம்!
  2. ||தெண்டுல்கர் இதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று சொல்பவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை நியமித்தது குடியரசுத் தலைவர்தான், ஒரு கட்சி இல்லை என்பது சட்டம் தெரிந்த அனைவருக்குமே புரியும்.||

    பத்ரி,
    குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியம்; எப்படி இப்படி தமாஷ் பண்ணுகிறீர்கள் ?!
    :))
    Delete
  3. மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் குடியரசுத் தலைவர் இந்த உறுப்பினர்களை நியமிக்கிறார். அதனால் என்ன? அப்படித்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லொரும், காங்கிரஸ் நியமித்தது, அதனால் நான் வேலை செய்ய மாட்டேன் போ, என்றா சொல்கிறார்கள்? நீதிபதிகள், ஆளுநர்கள் போலத்தான் இந்த நியமனமும்.
  4. இதே காங்கிரஸ் கையால் பாரத ரத்னா கிடைத்தால் மட்டும் தெண்டுல்கர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கட்சியின்மீது வெறுப்பு, கோபம் எல்லாம் இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசுப் பிரதிநிதிகளாக நமக்கு எதைச் செய்தாலும்,அது நம்முடைய தகுதி கருதிச் செய்யப்பட்டது என்று கருத இடம் இருந்தால், அதனை நாம் ஏற்றுக்கொள்வதே முறை. தெண்டுல்கரை நான் பாராட்டுகிறேன்.
  5. நீங்கள் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்..
    நீதிபதிகள் விதயத்தில் அவர்கள் அமசி போன்றவர்களிடம் எதையும் கொடுத்து பதவி வாங்கத் துடித்தாலும் அடிப்படையில் வழக்கறிஞராகத் தம்மை நிலைநிறுத்தியவர்கள்.உங்களையும் என்னையும் அரசு பரிந்துரை செய்தால் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்க முடியுமா?அதற்கான குறைந்த பட்சத் திறன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

    இந்த நியமனத்தில் காங்கிரஸ் அரசியலுக்காக நியமித்தது தவறாகும் போது தெந்துல்கர் சுயநலத்திற்காக ஒப்புக்கொண்டது அதைவிடப் பெரிய தவறு.அதுதான் என் பார்வை.


    பாரத ரத்னா விதயம் வேறு.உன் வாழ்நாளெல்லாம் உன் திறனால் எங்களை மகிழ்வித்தாய்;உனக்கு ஒரு ஓ போடுகிறோம்;சந்தோஷமாக இருந்து விட்டுப் போ' என்னும் ஒன் டைம் அங்கீகாரம்..மக்களவை,மாநிலங்களவைப் பதவி என்பதும் முற்றிலும் வேறு.

    ஆளுனர்கள் நியமனம்-இதே அரசியல் காரணங்களுக்காக தகுதியற்றவர்கள் பெரும்பாலும் நியமிக்கப் படும் இன்னொரு பதவி.ஆனால் அவர்கள் பாலிசி மேட்டர்களில் எதுவும் முடிவெடுப்பதில்லை.அதிகபட்சம் மாநில அரசைக் கலைக்க அறிக்கை கொடுக்க கைநாட்டு வைப்பார்கள்..அல்லது திவாரி மாதிரி என்பது வயதில் மங்கையைத் தேடுவார்கள். அந்த வகை நியமனங்களும் எனக்கு ஒப்புதலற்றவையே..ஆனால் அதிகபட்சம் நம்மைப் போன்றவர்களால் எதிர்த்து எழுத மட்டுமே முடியும்.

    குறைந்த பட்சம் அதையாவது செய்ய வேண்டும் என்கிறேன் நான்;அதற்கு எதிர்ப்பதமாக அவ்வித நியமனங்களைப் பாராட்டலாம் என்பது உங்கள் பார்வை.

    நீங்கள் சாரு ஷர்மா கூறியதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    Let's agree to disagree.

தேட...