Tuesday, March 16, 2010

"உலக இணைய தமிழ் மாநாடு"

உலக இணைய தமிழ் மாநாடு

அம்பி,
தமிழக அரசு சேவைத் தளங்கள் முதலில் தமிழில் ஒழுங்காக இயங்க வேண்டும்;விற்பனை வரித் தளத்திலிருந்து மாத மதிப்புக் கூட்ட வரித் தளங்கள் வரை-VAT-தமிழில் ஒழுங்காக இயங்குவதில்லை;அவை எல்லாம் தமிழில் மட்டும் இயங்குதாகவும்-ஒழுங்காக-ஆங்கிலத்தில் வேண்டுவோருக்கு தனியாக ஒரு சிறு கட்டணமும் வசூலிக்கலாம்-வைத்தருக்கலாம்.
அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் தமிழ் உண்மையில் இயங்கு மொழியாக்கலாம்.நாம் உட்பட யாரும் ஆங்கிலத்தில் உரையாடினால்தான் மாவட்ட ஆட்சியாளரே காது கொடுக்கிறார்..விவேக் ஒரு படத்தில் போக்குவரத்துக் காவலரிடம் விடுமுறை விண்ணப்பம் ஒப்பிப்பாரே,அது கிட்டத்திட்ட உண்மையில் நடக்கிறதுதான் போல...
அனைத்துப் பள்ளியிலும் 8 ஆம் வகுப்பு வரையாவது தமிழ் ஒரு மொழிப்பாடமாகவாவது கட்டாயமாக இருக்க வேண்டும்.
பல்கலைக்கழகப் பாடங்கள் தமிழில் படிக்க ஏதுவாக தமிழில் தரமான தொழில்நுட்பப் புத்தங்கள் வரவேண்டும்;அவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்..

எல்லாவற்றிற்கும் மேலாக நமது குழந்தைகளை தமிழில் படிக்க,பேச,எழுத ஊக்குவிக்க வேண்டும்..அம்பியின் அம்பிக்கு அம்பி அப்பாவா அல்லது டா(ஏ)டி யா?

:)))

Mon Mar 15, 08:26:00 PM
***********
Blogger ambi said...

அறிவன் ஐயா, தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன். எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோர்(என்னையும் சேர்த்து தான்) மிக கம்மி என நினைக்கிறேன்.

அப்ப்பா என அழுத்தம் திருத்தமாக கூப்பிடுகிறான். பள்ளி சென்றபின் டாடி என மாத்த மாட்டான் என நம்புகிறேன். :)

நம்பிக்கை தானே வாழ்க்கை! :))

Mon Mar 15, 11:09:00 PM
************************************
அறிவன்#11802717200764379909 said...

அம்பி,

{எல்லா படிவங்களும் தமிழில் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோர்(என்னையும் சேர்த்து தான்) மிக கம்மி என நினைக்கிறேன். }
அவ்வாறில்லை;என்னுடைய அனுபவத்தின் மூலமே நான் பதிலிறுத்தேன்.மதிப்புக் கூட்டு வரிக்கான மாதாந்திர படிவத்தை இணையத்தில் உபயோகிப்போருக்கு நான் சொல்வது தெரிந்திருக்கலாம்..
தமிழ் வடிவப் பக்கங்களில் பல உசாத்துணைகள் வேலை செய்வதில்லை;அழுத்தினால் முட்டுச் சந்தில் நிற்கிறது இணையப்பக்கம்!ஆனால் ஆங்கில வழிப் பக்கங்களில் இந்த தொந்தரவுகள் இல்லை..

தாய்வழிக் கல்வியில் கற்காத குழந்தைகள் தாய்மொழியில் சிந்திக்கவும் மறக்கின்றன;இது இயல்பான மூளைத் திறனையும் பாதிக்கின்றது..

இதை ஒரு எளிய உதாரணம் மூலம் நான் பலமுறை பலரிடம் விளக்கியிருக்கிறேன்..

then என்ற வார்த்தைக்கான பிரயோகங்கள் எவ்விதம் அமையும் என்று கேட்டபோது பலர் அதன் நேர்மறை உபயோகமான பிறகு' என்ற பொருள் வரும் சாத்தியங்களைத்தான் குறிப்பிடுவார்கள்..ஆனால் அந்த வார்த்தைக்கு அப்பொழுது' என்ற பொருளில் எதிர்மறைப் பிரயோகமும் உண்டு என்பதை பல ஆங்கிலவழிக் கல்வியில் படித்த என்னுடைய தோழர்கள்,தோழிகள் சுட்ட மறந்திருக்கிறார்கள்..

இவை போன்ற காரணங்கள் தாய்வழிக் கல்வி இல்லாத காரணமே என்பது என் கணிப்பு.

ஆங்கிலம் இன்றைய பொருண்மை உலகியலில் அவசியமே.ஆனால் தமிழின் இழப்பில் ஆங்கிலம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.English at the cost of tamil is not acceptable.

-நீண்ட பத்தியாகி விட்டது,மன்னிக்கவும் !
:)
உங்களை அங்கிளாக்கியதால் என்னை ஐயாவாக்கி பழி தீர்த்து விட்டீர்களா?
:))

Tue Mar 16, 09:37:00 AM

*********************************
ambi said...

அறிவன் ஐயா (பார்ரா, மறுபடியும்?),

அருமையான விளக்கங்கள். மறுப்பேதும் இல்லாமல் ஒத்துக்கறேன்.

எப்போதும் அறிவன் சார் என்று தான் விளிப்பேன்(பழைய பதிவுகளை பாருங்க). இந்த பதிவுலயாவது கொஞ்சம் தாய் மொழியில் கூவுவோம்னு தான் ஐயா. :)

வேற யாராவதா இருந்தா "என்னடா அம்பி, என்னை எதுக்கு ஜயானு கூப்புடற?னு? கேட்டு இருப்பாங்க. :p

நீங்க கொஞ்சம் தெளிவா இருக்கீங்க. :))

தேட...