Sunday, January 24, 2010

"Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?"

"Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?"

அறிவன்#11802717200764379909 said...

{5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
}
திரு.சுப்பையா,மேலும் சில கூர்மைப்புத்தலுக்காக சில வார்த்தைகள்..

நவாம்சம் ராசியின் மேக்னிஃபைடு வெர்ஷன் என்னும் போது ராசியின் லக்னம் எந்த நவாம்ச வீட்டின் பாதிப்பில் இருக்கிறது என்பதை விளக்குவதுதானே நவாம்ச லக்னம்?
நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுக்கக் கூடாது என்றால் நவாம்சத்தில் அமைந்த கிரகங்களின் பாவ நிலையும் பார்க்கப்படாதல்லவா?அவற்றின் வீட்டின் நிலை மட்டம் தானே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லையல்லவா?

காட்டாக குரு 10 ல் ராசியில் இருக்கும் போது அம்சத்தில் 3 ல் இருந்தால்,3 ம் இடம் என்ற பாவ நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

நவாம்ச லக்னத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையென்றால் இந்த 3'ம் இடம் என்ற பாவ நிலை'க் கேள்வி வராதல்லவா? just குரு அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை மட்டும்தான் வைத்து பலன் பார்ப்போம்.

இது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.
ராமன் ஸ்கூல் சிந்தனையும் அப்போக்கில் இல்லை என்றுதான் தோன்றுகிறது;மாற்றுக் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.

Monday, January 25, 2010 8:17:56 AM

"அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!"

"அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!"



கிரி,உங்கள் பார்வையில் நான் வேறுபடுகிறேன்.
நான் கடவுள் உருவாக்கத்திற்காக பாலா நிறைய சிரமம் எடுத்துக் கொண்டிருக்கலாம்;மற்றபடி சமூகத்தை பிரதிபலிக்கிறேன் பேர்வழி என்று சமூகத்தின் அழுக்குகளைத் தேடிப் பிடித்து பொது ரசனைக்குள்ளாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.அதை புண்'நவீனத்துவம் என்று பலர் சொன்னாலும்!
சினிமா என்பது ஒரு கலை வடிவம்;ஒரு கலை அல்லது அதன் வெளிப்பாடு மனிதனின் நல்ல மென்மையான ரசனைகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டும்.அந்த வகையில் அகோரி மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை மனிதத்தனத்தை மீறி கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பொதுப்பார்வைக்கு வைத்த பாலா நிச்சயம் ஒரு இயைந்த-balanced-மனநிலையில் இருக்கும் நபர் அல்ல என்றே நானும் நினைக்கிறேன்...மற்றும் அவரது எல்லா படங்களும் மனச்சிதைவடைந்த மனிதர்களையே சுற்றிச் சுழல்கிறது;அவருக்கே தெரியாமல் அவரது உள்ளார்ந்த மனம் எங்காவது சிதைவுற்றிருக்கலாம்...எனவே நான் கடவுளுக்கு விருது என்பது தவறான முன்னுதாரணம்;இதைவிட வன்முறை மற்றும் சமூக வன்முறைகளை முன்னிலைப்படுத்தும் படங்களை சிந்தனையில் வளர்க்க டைரக்ஷன் கனவில் இருக்கும் பல துணை இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் தயாராவதை இந்த விருது ஊக்கப்படுத்தியிருக்கிறது;இன்னும் பல அகோரி கதைகளுக்கு தமிழ்க்களம் தயாராக வேண்டும் !

இரண்டாவதான வாரணம் ஆயிரம் பற்றியது.காஷ்மீர் என்று டில்லி காட்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்(சிறுவன் கடத்தல்...தில்லிதான் என்று நினைக்கிறேன்)
வா.ஆ.படம் முழுவதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி விரவியிருந்தது.அப்பா ஒரு குடும்பப் பிணைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப் படுத்த,மகன் தன் முனைப்பு என்ற ஒரு விதயத்தை முதன்மைப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது;அந்த முனைப்பிற்காக முயற்சியின் எந்த எல்லைக்கும் இருவரும் செல்கிறார்கள்.இந்த இரண்டு டைமன்ஷனில் அப்பாவை பல விதயங்களில் வரித்துக் கொள்ளும் மகனின் விவரிப்பில் படம் செல்கிறது.

எனக்கு மிகவும் பிடித்து ரசித்தேன்..டில்லிக்காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் எனினும் ஒரு தாங்க முடியாத இழப்பைத் தாங்குவதற்கு செய்யப்படும் மனிதனின் முயற்சியாக அதைப் பார்க்கும் போது இயல்பாகவே இருந்தது.
நினைத்தவுடன் கடன்களை அடைக்க முடிவதும்,நினைத்த உடன் ராணுவத்தில் வேலை கிடைப்பதும் லாஜிக் ஓட்டைகள் என்றாலும் அவை தரும் நேர்மறை எண்ணங்களுக்காக அவற்றை மன்னிக்கலாம்!

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கலை அனுபவம் பார்வையாளனின் சிந்தனையில் ஒரு புள்ளியாவது ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது தான் சார்ந்த சமூகத்தின் மீதான தனது பார்வையை நெகிழ்த்தியிருக்க வேண்டும்;இவை முறையே பாசிட்டிவ் சினிமா அல்லது நெகட்டிவ் சினிமா என்ற இரண்டு பரந்த வகைப்படுத்தலுக்குள் வந்துவிடும்.

ஆனால் நான் கடவுள் இரண்டாவது வகையின் போர்வையில் வந்த ஆனால் நொந்து போக வைக்கும் ஒரு படம்.

சாரி..கொஞ்சம் நீண்டு விட்டது !

தேட...