Friday, July 18, 2008

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

நல்ல வாதப் பிரதிவாதங்கள்.நீர் நம்மிடம் அதிகமாக இல்லை;அதிகம் ஹைட்ரோ ஆலைகள் அமைக்கும் அளவுக்கு இல்லை என்வே நினைக்கிறேன்.

காற்றாலை அமைப்பதில் டெக்னிகல் அம்சங்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது என்பது ஒரு குறையா என்ன? அது தனியார் துறைக்கு வேண்டுமானால் பெரிய காரியமாக இருக்கலாம்.ஆனால் அரசுக்கு?எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சக்தி உற்பத்தி செய்ய இயலும் போது முயற்சிக்கலாதானே?

மேலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு அளவில் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள்;சிறு சிறி நிறுவனங்கள் அதிகம் காற்றாலைகளை உப்யோகித்து தங்களுக்கு வேண்டிய மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்வதாக செய்தியில் பார்த்தேன்.

இவ்வகை முயற்சிகள் அதிகரிக்கும் போது பொது விநியோகத்திற்கான் மின்சக்தி பெருமளவு மிச்சப்படும் இல்லையா?இதை தொழிற்சாலைகளுக்குத் திருப்பி விடலாமே..அணுசக்திக்கழிவுகள் த்லைமுறைகள் தாண்டி வேத்னைப் படுத்தும் என்பதை நன்றாக அறிந்து கொண்டே ஏன அதில் விழ வேண்டும்?

அதற்கான கண்டுபிடிப்புகள் சில ஆண்டுகளில் வந்துவிடும் என்று நம்புவதால் அதில் இறங்க முடியாதே..

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அவர்கள் தேசம் என்றால் அதற்கு தனி சட்டமும் கொள்கைகளும்,மற்ற உலக நாடுகளுக்கு தனி சட்டங்கள் கொள்கைகள் என்ற இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள்;அவர்கள் சொல்கிறார்கள் என்பதால் அது நமக்கு நன்மை அளிக்கும் என நம்புவது அறியாமையே;நாம் ஆய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

நமது சிங்கோ பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கூட வைக்க மாட்டேன் என்கிறாரே??????

"கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3"

"கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3"

கயல்..

முதலில் இந்தப் பதிவின் ஷாக் வால்யூ என்னை அதிர வைத்தது.என்னதான் தவறியிருப்பினும்,நம் நெருங்கிய சொந்தங்கள் என்னும் போது விதயங்களைச் சொல்ல சிறிது தயக்கம் இருக்கும்,அதனை மீறியும் உங்களது வலியை உணர முடிகிறது.

பல குடும்பங்களில் இந்த வித பிரச்னைகள் வேறுவேறு அளவில் இருக்கும் என்ற உண்மையும் ஏற்க வேண்டியதே.பெரும்பாலும் இந்த வித சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களின் மனமுதிர்ச்சியின்மையினால் விளைந்த செயல்களாகவே இருக்கும்.

உங்களது தாயின் மனநிலை அணுப்பிளவின் ஒத்தநிலையில் இருந்திருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.ஆனால் ஒரு சாதாரண பெண்ணால்(இயல்பில் பெண்கள் நுண்ணியல்பு மிக்கவர்கள்) இதன் கூறுகளை வெகு முன்னர் கண்டறிந்து இந்த அதிர்ச்சி அளவுக்குப் போகாது தடுத்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.

காமம் மற்றும் தாம்பத்யம் இரண்டிலும் நுழையும் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் பல உருவகங்களுடனேயே இந்தியச் சூழலில் நுழைகிறார்கள் என்பதும் என் துணிபு.காமத்திலும்,தாம்பத்யத்திலும் வெளிப்படையான பார்வைகளும் அவதானிப்புகளும் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் இந்த அதிர்ச்சிகளிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் அதிகம்..

இன்னொரு பார்வையான் கற்பு நிலை என்பது இந்திய சமூகத்தில் பெரும்பாலும் ஆணாதிக்கப் பார்வையுடனேயே அணுகப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆண் என்ற அளவில் வெட்கத்துடனேயே ஒப்புக்கொள்கிறேன்.

இப்போதிய மாறுபட்ட காலத்தில் யேசுநாதர் காலத்திய கற்பு வரையறைகள்(கற்பு நினைவின் பாற்பட்டது) சாத்தியமில்லை எனினும் நான் இதில் பாரதியின் கட்சி.

அழகாக அறிவித்தான் பாரதி,'கற்பு நிலையென்றொன்று கொண்டுவந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என !நீ பரிசுத்தமான பெண்ணை எதிர்பார்த்தால்,நீ அவளுக்கு பரிசுத்தமான ஆண்மகனாக இரு என்பதே என் நிலை.இதுவே என் மனைவியிடமும் நானளித்த உறுதிமொழி.

இதில் மாறுபாடுகள் நிகழும் போது(இன்னும்) பெண்கள் ரிசீவிங் எண்ட்'லேயே இருக்கிறார்கள் எனபதற்கு உங்கள் பதிவே சாட்சி.

இந்த சம்பவத்தில் பால் மாறாட்டம் நடந்திருந்தால் எதிர்விணைகள் எப்படி மாறி இருக்கும் என்பதே என்முதல் எண்ணமாக இருந்தது,பதிவைப் படித்து முடித்தவுடன்.எனினும் அதை சுட்டுவது உங்களைக் காயப்படுத்தலாம் என் எண்ணிக் கொண்டே கமெண்டுகளைப் படிக்கையில் நீங்களே அதை சுட்டியிருக்கிறீர்கள்;ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, hats off என்பதைத் தவிர.

மற்றபடி உங்கள் தாயின் ரியாக்‌ஷன் அவரின் மீதான் மதிப்பை கூட்டியது என்றே சொல்வேன்;தன்னிலையில் தெளிவான ஒரு பெண் இவ்விதமாகவே ரியாக்ட் செய்வாள் என்பது இயற்கையே.

அப்பர் சுவாமிகளின் திருமுறைப் பாடல்களிலே,திருப்பாணாள்வார் கதையில் இதைப் போன்ற ஒரு கட்டத்ததில் பாணரின் மனைவி அவரை ‘தீண்டுவீராயில் திருநீலகண்டம்' எனச் சொல்லி அவரைத் ‘தள்ளிவைத்த' கதைதான் நினைவுக்கு வருகிறது.

வளர்ந்த குழந்தைகள் இருக்கும் நிலையில்,இந்தியச் சூழலில் உங்கள் தாய் எடுத்த முடிவு சுயத்தை நிலைநாட்டியதுடன்,நடைமுறைச் சிக்கல்களையும் தவிர்த்த ஒன்று என்றுதான் சொல்லமுடியும்.

உங்கள் தாய் பார்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஜால்லியடிகளில் எனக்கு உடன்பாடு இல்லை;அந்த செயல் எவ்வளவு தூரம் நிதர்சனமோ அவ்வளவு தேவை,அதை உங்கள் தாய் அறிந்ததும்.பார்க்காவிட்டால்,தெரியாவிட்டால்,மாட்டிக்கொள்ளாவிட்டால் எந்த தவறும் தவறல்ல என்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

I can just say Your father deserves his getting caught !

இந்த நிகழ்ச்சி அப்படியே பால் வேறுபட்ட நடந்த சூழல்களில் கூட,குழந்தைகளுக்காக இந்த வகையிலேயே(உங்கள் அம்மாவின் முடிவு போல) ரியாக்ட் செய்த ஆண்களும் ஆங்காங்கே கிடைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

மற்றபடி உங்கள் துணிவுக்கும்,அலசல் மனதுக்கும் மறுபடி ஒரு பாராட்டு.

Saturday, July 5, 2008

"அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!"

"அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!"

கலாமின் நோக்கங்கள் மிக உயர்ந்தவை என்பதில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.

ஒரு நல்ல விஞ்ஞானியு அறிவியலாளரும் கூட.

ஆனால் தேச முதல் குடிமகனாக சில சமயம் சறுக்கினார்.(உறுப்பினர்கள் லாபம் தரும் பதவிகளில் அமரத் தடை மசோதா,356 மூலம் ஆட்சிக் கலைப்பு..)

அவரது 2020 திட்டமும் முழுக்க ஒரு டாக்குமெண்டரி போல இருக்கிறது;ஓரளவு வாசிப்பார்வம் இருக்கும் என் போன்றவர்களுக்கே இந்தியா 2020 நல்ல வாசிப்பை அளிக்கமுடியவில்லை.

விதயங்களை அறிந்து கொள்ளும் தாகம் இருப்பவர்களுக்கே அது விருப்ப வாசிப்பாக இல்லாத போது,ஆள்பவர்களோ,தலைவர்களோ அதன் அருகிலும் செல்வார்களா என்பது சந்தேகமே.

ஆளுமைப் பதவியில் அமருபவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது 50 களுக்குப் பிறகு இந்தியாவில் மறைந்துவிட்டது;அந்த மறைந்து போன rare species க்கு ஒரு காட்டாக விளங்கியதால்,இன்னமும் நாட்டின் மீது நம்பிக்கை கொண்ட(என்னைப் போன்ற) இளைஞர்கள் அவரை ஆவலுடன் பார்க்கிறார்கள்.அவரின் செயல்பாடு(முதல் குடிமகனாக) என்னையும் கவர வில்லை;அவர் இன்னும் வலிமையான தலைவராக தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் !

ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!

ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!

>>>////அறிவன்#11802717200764379909 said...நல்ல செய்திகள்..//ரிஷப ராசிக்காரர்க்ளுக்கு சனி யோககாரகன்.9 & 10ஆம் வீடுகளுக்கு உரியவன். //

இந்த மாதிரி இன்ன ராசிக்காரர்களுக்கு யார் யோக காரகன் அல்லது பாவி யார் என்பதை ஏதாவது பதிவில் சொல்லி இருக்கிறீர்களா?அது போல பாவத்திற்கான ராசிகள் என்ன என்று சொன்னாலும் நலம்,காட்டாக ஐந்தாம் வீடுக்கு காரகன் குரு என்பது போல்...////

அந்‍தப் பாடங்கள் எல்லாம் வரிசைப்படி வரும் நண்பரே! சற்றுப் பெரிய பாடம் அது!யோகங்கள் மொத்தம் 300 உள்ளன!கஜகேசரி யோகம், லக்ஷ்மி யோகம், சண்டாள யோகம், ஆதித்ய யோகம் இப்படியாக....!>>>>>

இல்லை,என் கேள்வி சரியாகப் புரியவில்லையோ என அஞ்சுகிறேன்.

ஒவ்வொரு ராசிக் காரனுக்கும்,லக்ன காரனுக்கும் சில கிரகங்கள் யோக காரகனாகவும் சில கிரகங்கள் பாவ காரகனாகவும் பொதுவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

காட்டாக மகர ராசி அன்பர்களுக்கு சுக்கிரனும் யோக காரகன்(என நினைக்கிறேன்) அது போல பாவிக் கிரகங்களும் வரையறுக்கப் படுகின்றன அல்லவா?அதையே நான் கேட்டேன்,பொதுவான(சசி மங்கள யோகம்) போன்ற யோக விபரங்கள் அல்ல.

இரண்டாவதாக பாவத்துக்குரிய நாயகர்கள்.காட்டாக ஐந்தாம்பாவக் காரகன் குரு என்பது போல..

இவை இரண்டையும் பற்றி சில பதிவுகளில் விளக்கி விட்டு,இந்தப் பதிவு போல(ஐந்தாம்) ஒவ்வொரு பாவ விளக்கப் பதிவுகள் போடும் போது அவை இன்னும் சுவாரசியமாகவும் நல்ல அலசலுக்கு வழி கோலும் விதயத்திலும் இருக்கும்..

பொதுவாக (சசிமங்கள,விபரீத ராஜயோகம் போன்ற) யோகங்கள் பற்றிய விளக்கப் பதிவுகள் இதற்கு அப்புறம் வரும்போது படிப்பவர்கள் ஒரு கோர்வையாக விதயங்களை உணர்வார்கள்.

முதலில் கட்டமைப்பு(பாவ விளக்கங்கள்)-இது ஏற்கனவே செய்து விட்டீர்கள்,அடுத்தது ஒவ்வொரு லக்ன,ராசிகளுக்கான யோககாரக,பாவிகள் விவரங்கள்,அடுத்து பாவங்களுக்கான fixed காரகர்கள்,அடுத்து பாவ அலசல்கள்,யோக அலசல்கள் வரும் போது பாடம் முழுமை பெறும் என்று நினைக்கிறேன்...

தேட...