Thursday, February 28, 2008

ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

////வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது. /////

இது முழுக்க உண்மையில்லை எனத் தோன்றுகிறது.அவர் ஆரம்பம் முதலே ஜெ.கா. போலவே தி.ஜா. போலவோ அல்லது லா.ச.ரா போலவெ ஒரு பிம்பமெடுத்துக் கொள்ளவில்லை.அப்படி இருந்திருந்தால் பலர் அந்த வரிசைகளில் இவரையும் சேர்த்து ஆகா என்றிருப்பார்கள்..ஆனால் அவர் இவர்கள் எல்லோரும் கலந்த ஒரு கலவையானார்;அவரின் சுருக்கமான மந்திரம்,சுவாரசியமான,தகவல்களுடனான எழுத்து.
அந்த எழுத்துக்கான மொழி,'பீகாரில் வெள்ளம்' என்ற ரீதியிலான அக்கால நியூஸ் ரீல் போல சவ சவ என்றிருந்திருக்க வேண்டிய வேளையில்,கத்தி வீச்சுப் போல கூர்மையையும் ஒளியையும் பெற்றிருந்தது.....
அதில்தான் அவர் வென்றார் !!!!!!

Wednesday, February 27, 2008

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

////'கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....

Good-bye ஆசானே. ////////

உண்மை, ஐந்து கோடித் தமிழர்களில் தமிழில் எழுதும் சுமார் இரண்டு கோடிப் பேருக்காவது அவர் மானசீகமான ஆசானே...
அவரை நிரம்பவும் தொலைத்திருக்கிறோம் !!!!!

ஒரு நாள் ஒரு கனவு

ஒரு நாள் ஒரு கனவு
இவற்றில் பல மேற்கத்திய,சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளில் நடைமுறையாய்த்தான் இருக்கின்றன.
நம்மால் ஏன் இயலவிலை?
நானும் ரொம்பவும் யோசித்து விட்டேன்,உருப்பட விடாத,கேடுகெட்ட தலைவர்களிடமிருந்தும்,கட்சிகளிடமிருந்தும்தான் அனைத்து சீர்கேடுகளும் ஆரம்பமாவதாகத் தோன்றுகிறது.
முறையான ஒரு விதயத்திற்குக் கூட விதிகளுக்குட்பட்டு அரசு இலாக்காக்களில் லஞ்சமளிக்காமல் ஒரு காரியமும் நடை பெற முடிவதாகக் காணோம் !!!!!!!
ஆக தவறு எங்கே இருக்கிறது????

Tuesday, February 26, 2008

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!
வவ்வால்,
இது ஒரு நல்ல கோணத்தில் அமைந்த பதிவு.
ஆயினும் கட்டபொம்முவும்,திப்புவும் தென்னாட்டில் ஆங்கிலேயர்களுக்கு சரியான எதிர்ப்பைக் காட்டினார்கள் எனபது உண்மை.
மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.
விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!
***********************
அறிவன்,
நன்றி!

//மேலும் கட்டபொம்மு பற்றிய சிறிது வீரமில்லாத,தரக்குறைவு போல தோன்றும் செய்திகள் உண்மையல்ல என்பது என் எண்ணம்.//

கட்டபொம்மு வீரம் குறித்து தரக்குறைவு என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த தகவல்களிலும் சில கருத்துக்கள் உள்ளது. ஏன் எனில் அக்கால சூழல் அப்படி, எனவே சூழ் நிலைக்கைதி என்ற நிலையினால் அடங்கி இருக்கவும் நேரிடும்.

ஆனாலும் கட்டபொம்மு விடுதலைப்போராட்டத்தில் ஒரு முன்னோடி என்பதை யாரும் மறைக்கவோ ,மறுக்கவோ முடியாது.

உதாரணமாக கட்டபொம்மு வரிக்கொடுக்காத சுதந்திர பாளையக்காரனாக இருந்ததில்லை, அதற்கு முன்னரும் ஆர்க்காட் நவாப்புக்கு வரிக்கட்டிக்கொண்டு இருந்தவர்கள் தான்.பின்னர் வெள்ளையர்கள், வரித்தொகை அதிகம் கேட்கவும் தான் எதிர்ப்பு கிளம்பியது. இல்லை எனில் கட்ட பொம்முவும் இணக்கமாகவே இருந்திருக்க கூடும்.

ஆனால் இந்திய வரலாற்றில் உள்ள பிரச்சினை என்னவெனில் சரியாக ஆவணப்படுத்தாமையே.

//விடுதலைப் போரில் தமிழகம்-மபொசி'யின் இரண்டு தொகுதிகளை சிறிது பார்த்து விடுங்கள்!!!!//

இந்த புத்தகத்தை சமீபத்தில் நூலகத்தில் பார்த்தேன், பிறகு படிக்கணும் என்று குறித்துவைத்துள்ளேன். இந்தப்பதிவு போட்டு ஒரு வருடம் மேல் இருக்கும், அப்போது அறிந்ததை வைத்துப்போட்டது.இப்போது பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக பதிவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

***************************
மோகந்தாஸின் இந்த பதிவில் என்னுடைய பதிலையும் பாருங்கள்.

http://imohandoss.blogspot.com/2005/10/blog-post_17.html

Thursday, February 21, 2008

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

//// கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
வலைப்பதிவு என்பது ஒரு சுதந்திரமான ஒன்று. கேட்க யாரும் இல்லாவிட்டாலும் பார்க்-ல் ஸ்டூல் மேல் நின்று பேசுவதைப்போல/////

/////////Kasi Arumugam - காசி said...
கவிதையிலெல்லாம் ஆர்வமில்லாத எனக்கு இது மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. உங்களுக்கும் மயுரனுக்கும்கூட அதே சிந்தனை வருவதில் வியப்பில்லை. ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன் //////

ரசிக்க வைத்த,சிந்திக்க வைத்த,ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

Monday, February 18, 2008

பெண்களின் அரசியல் அறிவு

பெண்களின் அரசியல் அறிவு


உண்மையில் பெண்களுக்கான சரியான அரசியல் பார்வையும் அறிவும் குடும்பத்தின் குழந்தைகள் நல்ல பொது நோக்குப் பார்வையுடன் வளர்வதை ஏதுவாக்கும்.
எங்கள் வீட்டிலேயே (நான் சிறுவனான)ஆரம்பநாட்களில் அப்பா ஒரு கட்சித் தலைவரை,நல்ல தமிழறிஞர் என சிலாகித்து அதனால் அவரை ஆதரிப்பார்,தேர்தல் காலங்களில் அம்மாவையும் அந்த குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டளிக்கத் தூண்டுவார்.அம்மா தினமணி கட்டாயம் படிப்பார்,மேற்கொண்டு ஏதும் பேச்சு இருக்காது..
பின்னர் எனது சிறகுகளும் பார்வைகளும் விரிய,எனது இயல்பான அரசியல் பார்வையும் நோக்கும்,பல உலக அளவிலான விதயங்களை வீட்டு வரவேற்பறை விவாதங்களுக்கு உட்படுத்தும் போது,ஏதாவது சந்தேகம் தோன்றினால் கூட,'நீ ஏண்டா அப்படி சொல்ற?' என தூண்டி விவாதம் கருத்தாக்கங்களுக்கும்,தெளிவுக்கும் செல்ல வழி வகுப்பார்.
பெண்களுக்கான சமூகப் பார்வை,இயல்பாகவே நுண்ணியது;அரசியல் பார்வை இணையும் போது அது அவர்களை இன்னும் விவரம்றிந்தவர்களாக-informative-ஆக ஆக்கும்...

திண்ணை எப்போது காலியாகும் ?

திண்ணை எப்போது காலியாகும் ?

சரியான கண்ணோட்டத்தில் அமைந்த எழுத்து..
இது ந்டக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் அதற்குள் தேவைக்கும் மேல் உள்நுழைந்து-in road- விடலாம் என்ற கணிப்பே விகா.தைரியமாக இறங்கியது.
முக.என்ற மனிதரின் முக விலாசமும்,தனிமனித நட்பு நாகரிகமும் ரஜினியை மிகவும் தடுக்கின்றன.

12:24 PM, February 18, 2008
கோவி.கண்ணன் said...
//அறிவன் /#11802717200764379909/ said...
முக.என்ற மனிதரின் முக விலாசமும்,தனிமனித நட்பு நாகரிகமும் ரஜினியை மிகவும் தடுக்கின்றன.
//

அறிவன் சார்,

நீங்கள் எளிமையாக சொல்லி இருப்பதை இடுகை எழுதும் போது எனக்கு சொல்லவதற்கு வரவில்லை. அதே பொருளில் தான் எழுதினேன். சரியாக தொட்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். மற்றும் நன்றி !

Sunday, February 17, 2008

அவ்வளவு சீக்கிரம் இந்திய அரசியல் அரங்கம் திருந்த விட்டு விடுவோமா?

அவ்வளவு சீக்கிரம் இந்திய அரசியல் அரங்கம் திருந்த விட்டு விடுவோமா?

வித்தியாசமான செய்திகளைத் தேடிப் பதிவிடும் முயற்சி பராட்டப்படவேண்டியது.
(நானும் இதைப் போன்ற சிந்தனைப் போக்கு உள்ளவெனே,எ.கா-இச்செய்தி கண்ணில் பட்டிருந்தால் இதையே செய்திருப்பேன்).
படிக்க ஆரம்பித்தபோதே இளம் உறுப்பினர் ராகுல்'ஆக அல்லது கனிமொழியாக(நப்பாசை??!!!!!!!) இருக்கக் கூடும் என ஊகித்தேன்.
கவனத்தில் வர வேண்டிய செய்திப் பதிவு,குறைந்தபட்சம் இளம் அரசியல்வாதிகளில் அங்கங்கே சிறிதாவது நம்பிக்கைக் கீற்றுகள் தெரிவது இந்திய அரசியலுக்கு நல்லது.
ஆனால் நம்பிக்கையை வளர விடமாட்டார்கள் போலிருக்கிறது,என்கிறது செய்தியின் சாரம் !

ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar)

ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar)
தமிழ்மண பதிவுப் பட்டைக் கருவியை ஆக்கம் செய்தால்,வேண்டுபவர்கள் ப்டிஎப்'ல் சேமித்துக் கொள்வார்களே?
Wren & Maritn அல்லது Jhonson & Martin பயிற்சிகளையும் சேருங்கள்..
பலருக்கும் உதவியாக இருக்கக் கூடும்.

இந்தி மொழிக்கு யாராவது இதைச் செய்தால் நன்றாக இருக்கும்;என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மிகநல்ல ஒரு முடிவு

மிகநல்ல ஒரு முடிவு
உண்மையில் வரவேற்கப் பட வேண்டிய ஒரு செய்தி.
இதில் சட்ட அமைச்சகமோ அல்லது அரசின் அமைப்புக்களோ நேரடியாக எந்த அளவு தலையிட முடியும் என்பதில் கவனம் தேவை என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
பாராளுமன்றத்தின் இம்பீச்மெண்ட் என்றால் அது ஒழுங்காக இருக்கும்.இல்லையெனில் ஆளும் தரப்பு இதனையும் வளைத்து,நீதிபதிகளை அச்சுறுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

//////அருமை.

நீதித்துறை என்பது சமூகத்தை காப்பது அல்ல கட்டுப்படுத்துவது./////////

அதற்குக்கூட அல்ல,நெறிப்படுத்த உதவி செய்வதாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

Saturday, February 16, 2008

உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.

உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.
///////அப்பாவி இளைஞர்களை அப்படி மூளைச் சலவைக்குத் தயாராக்கும் காரணிகளை இந்து மதத்தின் காவலனாகக் காட்டிக் கொள்ள முயலும் போலிகள் தான் ஏற்படுத்துகிறார்கள் ////////

இது எப்படி என கொஞ்சம் விளக்குவீர்களா?

////////திடீர் திடீரென்று முளைக்கும் புதிய மதர்ஸாக்களில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்கிற வாதம் நம்முடைய உளவுத் துறையின் பலவீனத்தைத் தான் காட்டுவதாக அமையும். பொற்கோயிலில் ஒருமுறை நடந்த தவறுக்காக எல்லா குருத்வாராக்களும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை; ஒரு காஞ்சி மடத்தில் நடந்த கேவலத்துக்காக எல்லா மடங்களும் தீண்டத்தகாதவை ஆக்கப்படவில்லை. ஆனால் இந்த தேசத்தில் முஸ்லிம் என்கிற வார்த்தையை ஒருவிதமாக அந்நியப்படுத்தும் முயற்சி விடாமல் நடந்து வருகிறது.//////////

POK பகுதிகளில் இந்தியாவிற்கு எதிராக மட்டுமல்ல,பொதுவாகவே முஸ்லீம் அடிப்படைவாத சக்திகள் ஊக்குவிக்கப் படுகின்றன முகம்மதிய மத கட்டமைப்புகளே செய்கின்றன என்பதை அமெரிக்க அரசாங்கமே இப்போது உணர்ந்திருக்கிறது,அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றிபெரும் பட்சத்தில் பாகிஸ்தாம் மேல் விமானத் தாக்குதல் கூட நடைபெறலாம் என அமெரிக்க ஊடகங்களே கருத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேறு எந்த மத அமைப்புகள் நாசவேலைகள் செய்வதற்கெனவே குறிப்பாக பயிற்சி கொடுக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா???

உங்கள் பதிவு ஒருதலைப்பட்சமான கருத்துக்களை எடுத்து வைப்பதாகவே தோன்றுகிறது.

Friday, February 15, 2008

ஜெயலலிதா

ஜெயலலிதா

நீங்கள் உட்பட எல்லோரும் விஜயகாந்தை மிக குறைவாக மதிப்பிடுகிறீர்கள் எனத் தோன்றுகிறது.
கோபால்சாமி போல விகா.உணர்ச்சி வேகத்தில் கட்சி ஆரம்பித்தவரில்லை;அவர் ஒரு force to reckon ஆகவே இருப்பார் எனவே நான் கருதுகிறேன்.
முக.வுக்குப் பிந்தைய தமிழகத்திற்கு அது நல்லதுவும் கூட !

Tuesday, February 12, 2008

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?

இப்பதிவைப் பொறுத்தவரை Dreamer ன் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.
Defenitely,it's leaders with vision that makes the difference.
Singapore doesn't fall from heaven to earth on one fine morning.
It needed a great visionary called LKY to build it to its today's status.
LKY had written his early years of interaction with indian prime ministers,starting from Nehru to Indira.(late 1950 & early 1960's).
He had beautifully portrays what we can call as erotion of standard in Indian politicians.

தேட...