Tuesday, May 6, 2008

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்

எனது குறிப்புக்காக ஒரு பதிவின் மூலம் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

///////தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர்////////
அவரவர் தெளிவு அவரவர்க்கு !

/////கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.//////
நான் பாலகுமாரனின் எழுத்துக்களை மெர்க்குரிப்பூக்களில் இருந்து,இப்போதெழுதிய உடையார்,காதலாகிக் கனிந்து' வரை படித்தவன்தான்.

அதே நேரம் திருமுறைகளிலிருந்து,திருமந்திரம் வரையிலான பரிச்சயமும் இறை, அன்போடு எனக்களித்த கொடை.

எவை கடல் என்பதில் கிணறு,சிறுகுளம்,ஏரி,உண்மையான கடல் ஆகியவற்றை,தனித்தனியே அவை மட்டும்,மற்றும் அனைத்தையுமாக அறிந்தவர்களிடையே,மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது உலக நியதி.

மற்றபடி உங்களையோ பாலகுமாரனேயோ குறைத்து மதிப்பிடுவதோ எள்ளுவதோ என் நோக்கமல்ல.அவரின் எழுத்துக்களில் தோன்றும் அதே தொனி இங்கும் தெரிந்ததும்,பல முன்னணி எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது வழமையாகி விட்ட நிலையிலும் எனது மேற்கண்ட கருத்து அமைந்தது.
அது புண்படுத்தும் விதத்தில் இருப்பின் வருந்துகிறேன்.

புரிதலுக்கும் நீண்ட விளக்கத்திற்கும் நன்றி.
************************************************************************
உரைநடை-அதிலும் பொருளற்று-எழுதி,வார்த்தைகளை உடைத்துப் போட்டு விட்டால் அது கவிதை என்றெண்ணிக் கொண்டிருக்கும் வான்கோழிகளையும்,

பின்னூட்டங்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன என அறியாத ,பின்னூட்டம் கூட கருத்துடன் எழுதவியலாத,'மேல்மாடி காலி'க் கூடங்களையும் பார்க்க சிரிப்புதான் வருகிறது.

No comments:

தேட...